வேண்டுதலை உடனே நிறைவேற்றும் பிள்ளையார் வழிபாடு

pillaiyar1
- Advertisement -

நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தரும் முழுமுதற் கடவுள் இந்த பிள்ளையார். அதிலும் அரச மரத்தடி பிள்ளையாரை வழிபாடு செய்தால் நமக்கு கோடி நன்மைகள் கிடைக்கும் என்பதும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. வீட்டுக்குப் பக்கத்தில் அரச மரத்தடி பிள்ளையார் இருந்தால் தினமும் சென்று வழிபாடு செய்யலாம்.

ஆனால் வீட்டிற்கு பக்கத்தில் அரசமரத்து பிள்ளையார் இல்லையென்றால் அவருடைய அருளை நம்மால் எப்படி பெற முடியும். அதற்கும் ஆன்மீகத்தில் ஒரு சின்ன வழிபாட்டு முறை சொல்லப்பட்டுள்ளதே. அது என்ன என்பதை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

அரச மரத்தடி பிள்ளையார் வழிபாடு

முடிந்தால் உங்கள் வீட்டு பக்கத்தில் அரச மரத்தடி பிள்ளையார் இருந்தால் தினமும் சென்று வழிபாடு செய்யுங்கள். தினமும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியவில்லை எங்களுடைய வீடு கோவிலுக்கும் இடையே இருக்கக்கூடிய தூரம் அதிகம் என்பவர்கள் அரசு மரத்தை வாங்கிக் கொடுத்து, அந்த அரச மர கட்டையில் சின்னதாக பிள்ளையார் சிலை செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பிள்ளையாரை பூஜை அறையில் வைத்து, இந்த பிள்ளையாருக்கு தினமும் அருகம்புல் போட்டு உங்களுடைய வேண்டுதலை சொல்லி ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’ என்று மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் அரச மரத்தடி பிள்ளையாரை வணங்கிய அதே பலன் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு திருமணம் நடக்கவில்லை.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்கவில்லை. காரிய தடையாக இருக்கிறது. செல்வ வளம் பெருகவில்லை ரொம்ப கஷ்டப்படுறீங்க அப்படின்னா இந்த பிள்ளையாரை உங்க வீட்டுக்குள் கொண்டு வாங்க. இந்த பிரபஞ்சத்துடைய நல்ல சக்திகள் அனைத்தும் உங்கள் வீட்டிற்குள் வந்துவிடும். உங்களுடைய வேண்டுதலை இந்த விநாயகரிடம் சொல்லிக் கொண்டே இருங்கள்.

கூடிய சீக்கிரத்தில் அந்த வேண்டுதலை இந்த பிள்ளையார் நிறைவேற்றி வைப்பார். 48 நாள் அரச மர கட்டையால் செய்த பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யும்போதே உங்களுக்கு நல்ல பலன் தெரிய தொடங்கி விடும். பிள்ளையாருக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய மறக்காதீங்க.

- Advertisement -

வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் யார் வேண்டுமென்றாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். குடும்பத்தோடு அமர்ந்து இந்த பிள்ளையாருக்கு வழிபாடு செய்வது ரொம்ப சிறப்பு. சின்ன மண் அகல் விளக்கில் இந்த பிள்ளையாருக்கு தனியாக தேங்காய் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் இன்னும் சிறப்பான பலனை பெற முடியும்.

இந்த அரச மரம், பஞ்சபூதங்களில் ஆகாய தத்துவத்தைக் கொண்டது. இந்த பிரபஞ்ச சக்தி அனைத்தையும் ஈர்க்கக்கூடிய ஆற்றல் இந்த அரச மரத்துக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் மார்கழி மாதத்தில் அரச மரத்தை போய் சுற்றி பிள்ளையாரை வழிபாடு செய்தால் நல்லது நடக்கும் என்று சொல்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே: ராகுவால் சிரமத்திற்கு உள்ளாக போகும் ராசிக்காரர்கள்

மார்கழி மாதத்தில் பிரபஞ்ச சக்தி இன்னும் அதிகமாக இந்த பூமியில் ஈர்க்கப்படும். அப்போது அந்த சமயத்தில் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் நிறைவேற்றப்படும். இதற்காகத்தான் அந்த அரச மரத்தடியில் நம்முடைய முன்னோர்கள் பிள்ளையாரை வைத்து வணங்க தொடங்கினார்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -