உங்களின் ஒரு வேண்டுதல் கூட இதுவரை பலித்ததே கிடையாதா? இந்த 5 மலர்களை வைத்து இறைவனிடம் வேண்டினால், 5 நாட்களில் உங்கள் வேண்டுதல் பலிக்கும்.

pray
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு இறைவனை விழுந்து விழுந்து கும்பிடும் பழக்கம் இருக்கும். எவ்வளவோ பூஜை புனஸ்காரங்களை செய்வோம். நம்மையும் நம் உடலையும் வருத்திக் கொண்டு கஷ்டமான வேண்டுதல்களை நிறைவேற்றுவோம். ஒரு அணுவும் இந்த பூலோகத்தில், அவன் இன்றி அசையாது என்று நம்புவோம். இருப்பினும் நாம் வைக்கக்கூடிய வேண்டுதலை அந்த ஆண்டவன் செவிகொடுத்து கேட்கின்றனா? என்பதில் சந்தேகம் இருக்கும். ஏனென்றால் நாம் வேண்டிய ஒரு வேண்டுதல் கூட நிறைவேறி இருக்காது. நம்பிக்கையுடன் இறை வழிபாடு செய்பவர்களுக்கு எதற்காக இந்த கஷ்டம்? எதற்காக இந்த தண்டனை? எதற்காக கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வருகிறது என்று நம்மில் நிறைய பேர் சிந்தித்திருப்போம்.

blue sangu poo

வாழ்க்கையில் ஒரு மனிதன் ரொம்பவும் கஷ்டப்படுகிறான் என்றால், அவன் வாழ்க்கையில் நேர்வழியில் செல்கின்றான் என்று அர்த்தம். அவன் நல்லவனாக வாழ்கின்றான். அவன் யாரையும் ஏமாற்றவில்லை என்பது அர்த்தம். இப்படிப்பட்டவர்களுக்கு கடவுள் நிறைய சோதனையை கொடுப்பார். நிறைய கஷ்டங்களை கொடுப்பார் ஆனால் என்றுமே கைவிடமாட்டார். நாம் வேண்டிய வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்க்காமல் இருக்கின்றான் என்றால், அந்த வேண்டுதலின் மூலம் நமக்கு நல்லது நடக்காது என்பதுதான் அர்த்தம்.

- Advertisement -

நம்மைப் படைத்த அந்த இறைவனுக்கு தெரியாதா? நமக்கு எது நல்லது கெட்டது என்று! சரி மனிதனுடைய மனது எதை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாது. நாம் வேண்டியதை அடைந்தே தீர வேண்டும் என்பதில் தான், நம்முடைய குறிக்கோள் இருக்கும். நம்முடைய கெட்ட நேரத்தின் காரணமாக, நாம் வைக்கக் கூடிய நல்ல வேண்டுதல் சில நேரங்களில் பலிக்காமல் இருந்தால் அந்த வேண்டுதலை பலிக்க வைக்க நீங்கள் பூஜை அறையில் எந்த ஐந்து பூக்களை எப்படி வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

mampoo

மரிக் கொழுந்து, சங்குப்பூ, தாமரை பூ, முல்லை பூ, மாம்பூ, இந்த ஐந்து மலர்களும் ஒன்றாக நமக்கு கிடைக்க வேண்டும். மா மரத்திலிருந்து பூக்கள் விடும் அல்லவா அந்த பூ தான் மாம்பூ. பூஜை அறையை எப்போதும் போல சுத்தம் செய்து தீபம் ஏற்றி வைத்துவிட்டு சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட வேண்டும். ஒரு தாம்பூலத் தட்டை எடுத்துக்கொண்டு அந்த தாம்புல தட்டில் வட்ட வடிவத்தில் இந்த 5 பூக்களையும் ஒன்றோடு ஒன்று சேராமல் தனித்தனியாக அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு நீங்கள் இந்தத் தாம்பூலத் தட்டை பூஜையறையில் வைத்துவிட்டு, நீங்களும் பூஜை அறையில் சுவாமி படத்தை பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு முன்பாக இந்த தட்டு இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் நம்பிக்கையோடு சொல்ல வேண்டும். உங்களுடைய கோரிக்கை நியாயமான கோரிக்கையாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

senthamarai

ஐந்து நாட்கள் தொடர்ந்து இந்த பூஜையை செய்ய வேண்டும். ஐந்து நாட்களும் தினம் தினம் பூக்களை புதியதாக மாற்ற வேண்டும். மனதார வேண்டுதல் வைத்து பின்பு இறுதியாக இறைவனுக்கு தீப தூப கற்பூர ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த ஐந்து நாட்களும் நீங்கள் பூஜை செய்யக் கூடிய நேரம் என்பது பிரம்ம முகூர்த்த நேரமாக இருப்பது சிறப்பு. காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் இந்த பூஜையை செய்யலாம்.

marikozhunthu

முதல் நாள் இந்த பூஜையை எந்த நேரத்தில் தொடங்குகிறீர்களோ, அடுத்து வரக்கூடிய மற்ற நான்கு நாட்களும் அதே நேரத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். ஐந்து நாட்களுக்குள் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறவில்லை என்றாலும் அதை நினைத்து மனம் தளர வேண்டாம். விடாமுயற்சியோடு உங்களுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கான வேலையை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும். உங்கள் வேண்டுதல் பலிக்கும் அந்த ஆண்டவனின் ஆசீர்வாதம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -