இந்த 3 பொருட்களை உங்கள் முன்னே வைத்துக் கொண்டு வேண்டிய வரத்தினை மகாலட்சுமியிடம் கேட்டுப்பாருங்கள். செல்வ கடாட்சத்தினை கொட்டிக் கொட்டி கொடுப்பாள்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

நம்முடைய வீட்டில் செல்வ கடாட்ஷம் நிறைந்திருக்க வேண்டும் என்றால் முதலில் நாம் செய்ய வேண்டிய விஷயம். நேர்மறை ஆற்றல் உருவாக கூடிய பேச்சுக்கலை பேச வேண்டும். நம் வீட்டில் கண்ணுக்கு தெரியாமல் உலாவிக் கொண்டிருக்கும் நல்ல தேவதைகளும், தேவர்களும் ததாஸ்து என்ற வார்த்தையை சொல்லி கொண்டே இருப்பார்களாம். குறிப்பாக விளக்கு வைத்த நேரத்தில் கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். எப்போதுமே கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளுங்கள். எதிர்மறையான வார்த்தைகளை பேசாதீர்கள். குறிப்பாக காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் நல்லதையே பேசி நல்லதையே நினைப்பது நம் குடும்பத்திற்கு சுபிட்சத்தை தரும்.

இது பொதுவாக நம் முன்னோர்கள் எல்லோரும் சொல்லி வைத்த ஒரு விஷயம்தான். மேல் சொன்ன இந்த ஒரு விஷயத்தை பின்பற்றி வந்தாலும் வீட்டில் சுபிட்சம் இருக்கும். இது தவிர மற்றொரு ஆன்மீக ரீதியான பரிகார சூட்ச்சம பூஜை முறையையும் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். வீட்டில் சுபிட்சம் நிலைத்திருக்க வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். வறுமை நீங்க வேண்டும். பீடை நீங்க வேண்டும் என்றால், பின் செல்லக்கூடிய இந்த பரிகாரத்தை 48 நாட்கள் செய்தாலே போதும்.

- Advertisement -

தினம்தோறும் பூஜையறையை சுத்தம் செய்து, தினந்தோறும் மகாலட்சுமிக்கு புதியதாக பூக்களை சூட்டி இந்த பூஜைக்கு, உங்களுடைய பூஜை அறையை தயார் செய்து கொள்ள வேண்டும். மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஒரு சிறிய தட்டில் குண்டு மஞ்சள் 3, பச்சை கற்பூரம் சிறிய துண்டு, ஏலக்காய் 3, இந்த மூன்று பொருள்களையும் ஒன்றாக அந்த தட்டில் வைத்து விடுங்கள். இதனுடைய வாசம் உங்கள் பூஜை அறை முழுவதும் நிறைந்திருக்கும்.

manjal

நீங்களும் ஒரு சுத்தமான விரிப்பை விரித்து அந்த தட்டின் முன்னால் சமணம் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். இப்போது மகாலட்சுமி தாயாரிடம் உங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கின்றதோ என்ன வரம் வேண்டுமோ அதனை மனதார கேட்கவேண்டும். நேர்மறை வார்த்தைகளை பயன்படுத்தி உங்களுடைய கோரிக்கைகளை வைக்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். வீட்டில் இருக்கும் வறுமை நீங்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இதேபோல் தொடர்ந்து 48 நாட்கள் இந்த பூஜையைச் செய்ய வேண்டும். தினசரி பூஜை முடிந்தவுடன் அந்த சிறிய தட்டில் இருக்கும் மூன்று பொருட்களை திறந்தபடியே லட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விட வேண்டும்.

pachai-karpooram1

அதனுடைய வாசம் உங்களுடைய பூஜை அறையில் நிறைந்திருக்கும். நேர்மறை ஆற்றலும் வேண்டுதலும் ஒன்று சேர்ந்து உங்களுடைய பூஜை அறையில் நிறைந்திருக்கும். தேவர்களும் முனிவர்களும் மகாலட்சுமி தாயாரும் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் ததாஸ்து ததாஸ்து என்று வாழ்த்தும் போது நீங்கள் வைத்த வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த பூஜையைகாலை அல்லது மாலை ஏதாவது ஒரு நேரத்தில் செய்தால் போதும்.

Elakkai

48 நாட்களும் இந்த மஞ்சள் ஏலக்காய் பச்சை கற்பூரம் இந்த மூன்றையும் மாற்ற வேண்டாம். பச்சை கற்பூரம் மட்டும் கரைந்து போய்விடும். கரைந்து விட்டால் மீண்டும் புதிய கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். 48 நாட்கள் பூஜை நிறைவடைந்தவுடன் குண்டு மஞ்சளை எடுத்து உங்களுடைய பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஏலக்காய்களை உங்கள் வீட்டில் இருக்கும் செடி கொடிகளில் போட்டு விடலாம். நம்பிக்கையோடு இதை செய்பவர்களுடைய வீட்டில் இருக்கும் வறுமை நிச்சயம் படிப்படியாக நீங்க தொடங்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -