1 ஸ்பூன் வெந்தயம் போதும் உங்கள் முகத்தை பட்டுப் போல மின்னச் செய்யலாமே! இப்படி செய்தால் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

karuvalayam-face-venthayam
- Advertisement -

ஒரு ஸ்பூன் வெந்தயம் இவ்வளவு விஷயத்தை செய்யுமா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அழகு பராமரிப்பில் அசத்திக் காட்டி விடும். வெந்தயம் உணவிற்கு மட்டுமல்லாமல் ஆரோக்கியம் மற்றும் அழகு போன்ற விஷயத்திற்கும் ரொம்பவே பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதிலிருக்கும் விட்டமின் கே மற்றும் சி முகத்தை பொலிவாக மின்னு செய்யக் கூடிய அற்புத சக்தி படைத்துள்ளது. வெந்தயத்தை வைத்து கருவளையம் நீங்கி மற்றும் இழந்த முகப்பொலிவை எப்படி பெறுவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள் முகத்தில் இருக்கும் அசுத்தங்களை நீக்கி முகத்துவாரங்களுக்குள் சென்றிருக்கும் அடைப்புகளை விலக்கி சருமத்துளைகளை இறுகச் செய்து இளமையான, பொலிவான தோற்றத்தை கொடுக்கக் கூடிய தன்மை படைத்தது. மேலும் கண்களுக்கு கீழ் கருப்பாக இருக்கும் இந்த கருவளையத்தை இருந்த இடம் தெரியாமல் மறையச் செய்து விடும். உங்களுக்கு தேவையான அளவிற்கு வெந்தயத்தை ஒருமுறை அலசி தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். நாளை காலை இந்த பேக் போடப் போகிறீர்கள் என்றால் முந்தைய நாள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து விட வேண்டும்.

- Advertisement -

ஒரு நாள் முழுவதும் வெந்தயம் ஊறிய பின்பு அதனை கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் நன்கு வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெந்தயத்துடன் மறுநாள் காலையில் சுத்தமான பசும்பால் சேர்த்து நைஸாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெந்தய பேஸ்ட் முகம் முழுவதும் தடவி விட்டுவிடுங்கள். ஈரப்பதம் நீங்கி நன்கு உலர்ந்து முகம் இறுக்கமடையும் பொழுது சாதாரண தண்ணீர் கொண்டு நன்கு முகத்தை துடைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வர முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி முகத்தை உடனடியாக பொலிவடைய செய்யும்.

தொடர்ந்து இதே போல செய்து வர நாளடைவில் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் மறைந்து, முகம் துவாரங்களில் இருக்கும் கெட்ட கழிவுகளை நீக்கி முகத்தை முகப்பருவில் இருந்து பாதுகாக்கும். பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் எதுவாகினும் முகத்தை விட்டு ஓடிவிடும். ரொம்பவே விலை குறைந்த இந்த அழகுக் குறிப்பை வீட்டிலேயே எளிதாக பயன்படுத்தி பயன் பெறலாம்.

- Advertisement -

பலருக்கும் முகப்பரு மற்றும் கருவளையம் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. கண்களுக்கு கீழ் இருக்கும் இந்த கருவளையம் வயதான தோற்றத்தை கொடுக்கும். கண் சோர்வு, முகத்தில் இருக்கும் கருமையை நீக்க கூடிய அற்புத சக்தி வாய்ந்த சத்துக்கள் வெந்தயத்தில் உள்ளது. இந்த வெந்தயத்துடன் பசும்பால் சேர்த்து அரைத்து செய்யும் இந்த பேக் அசத்தலான ரிசல்ட்டை கொடுக்கக் கூடியது. எனவே எந்த வித தயக்கமுமின்றி இதனை நீங்களும் செய்து பார்த்து பயனடையுங்கள்.

வெந்தயம் முகம் மட்டுமல்லாமல் கூந்தலுக்கும், அதன் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது. வெந்தயத்தை இதே முறையில் இரவில் ஊற வைத்து அரைத்து தலை முழுவதும் தடவி ஊற வைத்து பின்னர் தலைக்கு அலசினால் கூந்தல் கொஞ்சம் கூட சிக்கலில்லாமல் கண்டிஷனர் போட்டது போல பளபளவென அலைபாயும். முடியின் வேர் கால்களுக்கு ஊட்டச்சத்து கிடைத்து, உடல் உஷ்ணத்தை தணிக்கும். இத்தனை அற்புதம் வாய்ந்த வெந்தயத்தை இப்படியும் பயன்படுத்துங்கள்.

- Advertisement -