தரித்திரம் நீங்கி வெற்றிகள் குவிய நீங்கள் வீட்டில் இதை மட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி போடாதீர்கள்! காலையில் எழுந்ததும் இப்படி செஞ்சா உங்களை வெல்ல யாராலும் முடியாது.

surya-bagavan-sleeping
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சில விஷயங்களை சரியான நேரத்திற்கு கடைபிடித்தாக வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் ஒத்தி வைக்கும் ஒவ்வொரு காரியமும், உங்களுடைய வெற்றி வாய்ப்புகளை மெல்ல மெல்ல தட்டி பறித்துக் கொண்டிருக்கும். அந்த வகையில் நீங்கள் தரித்திரம் இல்லாமல் வெற்றிகள் பல உங்களை வந்து அடைய இந்த ஒரு விஷயத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இனியும் தள்ளி போட வேண்டாம். காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய மிக முக்கியமான இந்த விஷயத்தை நீங்கள் செய்தால், உங்களை வெல்ல இனி எவராலும் முடியாது என்கிறது ஆன்மீகம்! அப்படியான ஒரு ரகசியத்தை பற்றிய எளிமையான தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

ஒருவருடைய தரித்திரம் அவருடைய உடலில் இருந்தே ஆரம்பம் ஆகிறது. சோம்பல், அசதி, சுறுசுறுப்பின்மை, மந்தம் ஆகியவற்றை தரித்திரம், பீடை என்று கூறுவார்கள். இவற்றில் இருந்து முற்றிலுமாக நீங்கள் வெளிவர வேண்டும் என்றால் முதலில் காலையில் எழுந்தவுடன் இந்த ஒரு விஷயத்தை செய்யும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பல்லை தேய்த்து விட்டு குளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு குளித்துக் கொள்ளலாம் என்று நீங்கள் தள்ளிப் போட்டால், அங்கேயே உங்களுடைய வெற்றி வாய்ப்புகள் தள்ளிப் போய்விடும். எழுந்ததும் சூரிய ஒளி வீட்டிற்குள் வருமாறு கதவு, ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். இல்லையேல் அங்கு தரித்திர நிலை தொடர்ந்து நீடித்துக் கொண்டு இருக்கும்.

சூரிய ஒளி வீட்டுக்குள் வந்தால் தான், அந்த வீட்டிலும் தரித்திரம் ஒழியும் மேலும் துஷ்ட சக்திகள் அனைத்தும் விலகும். எப்போதும் கதவு, ஜன்னல்களை மூடியே வைத்திருக்காதீர்கள். காலையில் எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு சிறிது நேரம் சூரிய நமஸ்காரம் செய்வது ரொம்பவே சக்தி வாய்ந்த ஒரு எளிய பரிகாரமாக இருக்கும். இதனால் சூர்ய அருள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடலுக்கு தேவையான அத்தனை சுறுசுறுப்பும் கிடைக்கும்.

- Advertisement -

இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும், எவரையும் வெல்லக்கூடிய தைரியம் பிறக்கும். மனதில் ஒரு விதமான மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கும். எவ்வளவு பிரச்சனைகள் உங்களை எதிர்த்து வந்தாலும் அதை போராடக்கூடிய துணிச்சல் உண்டாகும். இத்தகைய சூரிய நமஸ்காரம் சிறப்பு வாய்ந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதை சிலர் கடைபிடிப்பது இல்லை. சரி, சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டாம். சூரியனிடம் சிறிது நேரம் நின்று விட்டு வாருங்கள் போதும்.

உங்கள் மீது சூரிய ஒளி பட்டாலே நீங்கள் தரித்திரத்திலிருந்து மீண்டு விடலாம். அந்த அளவிற்கு அதற்கு அதீத சக்தி உண்டு எனவே உங்கள் வீட்டிலும், உங்கள் உடம்பிலும் காலை எழுந்ததும் குளித்து முடித்த பிறகு சூரிய ஒளி கண்டிப்பாக பட வேண்டும். இப்படி கொஞ்ச நாள் செய்து வந்தாலே உங்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் மாற்றங்களை நீங்கள் சந்திப்பீர்கள். இதுவரை தயங்கி கொண்டு இருந்த, நீங்கள் இனி இதுதான் நான் என்று வெளி உலகத்திற்கு, பகைவர்கள் முன்னிலையில் வெற்றியாளராக திகழ்வீர்கள்.

- Advertisement -