உங்களுக்குன்னு வரும் போது எல்லாமே லேட்டா நடக்குதா? தடையில்லாத வெற்றி பெற வழிபட வேண்டிய தெய்வம் என்ன?

sad-fear-vinayagar
- Advertisement -

நினைத்ததெல்லாம் உடனே நடந்து விட்டால் அந்த தெய்வத்தை யாரும் நினைப்பது கிடையாது. அதனால் தான் என்னவோ, நாம் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கிறது. உரிய காலத்தில் நமக்கு வேண்டிய விஷயங்கள் தடை இல்லாமல் நடக்க வழிபட வேண்டிய தெய்வம் என்ன? நம்முடைய துரதிர்ஷ்ட ராசியை மாற்றக் கூடிய அற்புதமான வழிபாடு என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

எல்லோருக்குமே சுலபமாக நடக்கும் விஷயம், சில சமயங்களில் நமக்கு மட்டும் ரொம்பவே கஷ்டப்பட்டு காலதாமதம் ஆகி நடக்கும். வரிசையில் நாம் நின்று கொண்டிருந்தாலும் நமக்கென்று வரும் பொழுது, நடக்க வேண்டிய காரியம் சரியாக நம் தருணம் வரும் பொழுது தடைபடும். நடக்க வேண்டியது கால தாமதமாகும். இப்படி பல்வேறு விஷயங்களில் நமக்குன்னு வரும் பொழுது லேட்டாக நடந்தால், நமக்கு கிரக தோஷங்கள் இருக்கிறது என்பதை உணரலாம். இந்த கிரக தோஷங்களில் இருந்து விடுபட்டு நினைத்தது நினைத்தபடி உடனே நடக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன?

- Advertisement -

முழுமுதற் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகர் பெருமானை வழிபடுபவர்களுக்கு சகல விதமான தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம் உண்டு. அது மட்டும் அல்லாமல் வெற்றி நாயகனாக திகழக்கூடிய இந்த வெற்றி விநாயகரை வழிபடும் போது தடைகள் எல்லாம் தவிடு பொடியாகும். அத்தகைய விநாயகர் வழிபாடு தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு எல்லா விஷயங்களும் தடை இல்லாமல் ஜெயமாகும்.

அந்த வகையில் நம்முடைய வேலைகளை சுலபமாக்கி, நம் எண்ணங்களை விரைவாக பூர்த்தி செய்யக்கூடிய எளிய வழிபாடு எப்படி செய்யலாம்? முதலில் செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மங்கள காரியங்களுக்கு மஞ்சளை பிள்ளையாராக பிடித்து வழிபட வேண்டும் என்பது நியதி. இந்த செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மஞ்சளை பிள்ளையார் பிடித்து ஒரு பித்தளை தாம்பாளத்தில் வையுங்கள். பின்னர் அதற்கு அருகம்புல் வைத்து, அகல் விளக்கு ஒன்றை வையுங்கள்.

- Advertisement -

மஞ்சள் பிள்ளையாருக்கு சந்தன குங்கும திலகம் இட்டுக் கொள்ளுங்கள். முடிந்தால் எருக்கு மாலை கோர்த்து வையுங்கள். அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி அதில் வெள்ளருக்கு திரி போட வேண்டும். பூஜை ஸ்டோர்களில் இந்த வெள்ளருக்கு திரி கிடைக்கும். வெள்ளருக்கு கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடுபவர்களுக்கு சகல விதமான சௌபாக்கியங்களும் வந்து சேர்வதாக நம்பிக்கை உண்டு. அந்த வகையில் நம்மால் அவற்றை வாங்க முடியாவிட்டாலும், வெள்ளருக்கு திரியை போட்டு விநாயகருக்கு தீபம் ஏற்றினால் தடை இல்லாத வெற்றிகள் குவியும்.

இதையும் படிக்கலாமே:
மலை மலையாக பணம் வீட்டில் குவிய ஒரு மயிலிறகு போதும். இந்த மயிலிறகை பீரோவில் எப்படி வைத்தால் பணத்தை சேர்க்கலாம்.

திரியை போட்டு தீபம் ஏற்றி விக்னங்களை தீர்க்கும் விநாயகர் உடைய ஸ்லோகங்கள், மந்திரங்கள், பாடல்கள் போன்றவற்றில் உங்களுக்கு தெரிந்தது என்னவோ அவற்றை வாசிக்கலாம். இதுபோல தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் செய்து வந்தால், இது போன்று ஏற்படும் தடைகள் விலகும். எல்லா இடங்களிலும் நீங்கள் முன்னிலை வகிப்பீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும், நினைத்ததெல்லாம் நடக்கும், வெற்றி மேல் வெற்றி குவிய இந்த எளிய வழிபாடு தொடர்ந்து செய்து பாருங்கள். வாழ்வில் தடை இல்லாமல் முன்னேறிக் கொண்டே இருக்கலாம்.

- Advertisement -