வேலைக்கு இன்டர்வியூ செல்பவர்கள் அல்லது புதிய தொழில் துவங்குபவர்கள் அமோகமான வெற்றியை பெறுவதற்கு பச்சைப்பயறை இப்படி சுற்றிப் போடுங்கள்!

pachai-payaru-temple
- Advertisement -

பச்சைப்பயிறு ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் அல்லாமல் அழகு, ஆன்மீகம், மருத்துவம் என்று பல்வேறு விதங்களிலும் பயன்படக்கூடிய இந்த பச்சைப்பயிறு உலகம் முழுவதும் பரவி வருகிறது. நம் முன்னோர்கள் ஒவ்வொரு விஷயங்களிலும் ஏதாவது ஒரு கருத்தை முன்வைத்து செய்து வந்தனர். அந்த வகையில் வேலை தேடி அலைபவர்கள், புதிய தொழில் துவங்குபவர்கள் செய்யும் செயலில் அமோக வெற்றி பெற பச்சைப்பயறை என்ன செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள் தெரியுமா? அதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆன்மீகத்தில் சிறு சிறு விஷயங்களுக்கு கூட எளிய பரிகாரங்களை செய்து அதன் தீர்வுகளை எளிதாக கண்டறிய முடியும் என்று பல்வேறு விதங்களில் அனுபவ பூர்வமாக பலர் உணர்ந்திருக்க கூடும். அந்த வகையில் வேலை தேடி அலைபவர்களுக்கு மத்தியில் இந்த சிறிய பரிகாரத்தை செய்தால் மனதிற்கு பிடித்த நல்ல வேலை கிடைக்கும். செய்யும் செயலில், எண்ணிய காரியங்களில் வெற்றி கிடைப்பதற்கு செய்யக் கூடிய அற்புதமான பரிகாரம்.

- Advertisement -

நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நல்ல தீர்வு கொடுக்கும். படித்த படிப்பிற்கு ஏற்ப வேலை கிடைக்கவில்லையே என்று கிடைக்கின்ற வேலைகளை எல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டே போகின்றவர்களுக்கு இந்த பரிகாரம் செய்வதன் மூலம் தீர்வு கிடைக்கும்.

மனதிற்குப் பிடித்த நல்ல வேலை மட்டுமல்லாமல், சுயமாக தொழில் செய்ய நினைப்பவர்களும் உங்கள் தொழில் ஆரம்பிக்கும் முன்பு இவ்வாறு செய்துவிட்டு ஆரம்பிப்பது நல்லது. புதிய தொழில் விஷயமாக முதன் முதலாக ஒருவரை சந்திக்க போகும் முன்பு கூட இப்படி செய்து கொள்ளலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பது, புதிய தொழில் வாய்ப்புகளை நோக்கி வெளியில் பயணம் மேற்கொள்வது போன்றவை தடையில்லாமல் நிறைவேறுவதற்கு இந்த பரிகாரம் ரொம்பவே உபயோகமாக இருக்கும்.

- Advertisement -

சம்பந்தப்பட்ட நபரை இத்தகைய வேலைகளுக்கு செல்லும் முன்பு முதலில் வீட்டில் கிழக்கு திசையை நோக்கி நின்று கொள்ள செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் மூத்தவர்கள் அவர்களுக்கு கையில் கொஞ்சம் பச்சை பயறை வைத்துக் கொண்டு இப்படி திருஷ்டி சுற்றி போட வேண்டும். முதலில் வலது புறமாக 3 முறை பச்சை பயறை கையில் வைத்துக் கொண்டு சுற்ற வேண்டும். பின்பு திருஷ்டி கழிப்பது போல இடது புறம் சுற்றக் கூடாது. வலது புறம் சுற்றிய பின்பு கையில் வைத்திருக்கும் பச்சை பயறை அவர் மீது தூவி விட வேண்டும். அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்வது போல தூவி விடுங்கள். அதன் பின்பு அவர் குறித்த வேலைக்கு வெளியில் செல்லலாம்.

சம்பந்தப்பட்ட நபர் வெளியில் சென்ற பின்பு நீங்கள் கீழே சிந்தி உள்ள பச்சை பயறை அள்ளி உங்கள் வீட்டு மொட்டை மாடி அல்லது திறந்த வெளியில் பறவைகளுக்கு போட்டு விடுங்கள் பறவைகள் வந்து சாப்பிட வேண்டும். இந்த தானியங்களை பறவைகள் வந்து சாப்பிடும் பொழுது சம்பந்தப்பட்டவர் செய்யும் செயலில் வெற்றி அடைவர் என்பது நம்பிக்கை. எனவே புதிதாக தொழில் துவங்குபவர்கள் அல்லது வேலையை தேடி வெளியில் செல்பவர்களுக்கு இது போல பச்சை பயறை வைத்து சுற்றி அது பறவைகளுக்கு போட்டு பாருங்கள், செய்யும் செயலில் ஜெயம் உண்டாகும்.

- Advertisement -