உங்கள் வீட்டில் நிரந்தரமாக அமர்ந்து கொண்டிருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் தானாகவே எழுந்து அலறி அடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி விடும். கற்பூரத்தை வீட்டில் இப்படி ஏற்றினால்.

sudam
- Advertisement -

வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை, நல்ல விஷயங்களை, லட்சுமி கடாட்சத்தை வரவேற்க வேண்டும் என்று தான் நம்மில் நிறைய பேர் நினைக்கின்றோம். ஆனால், வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை, கஷ்டத்தை பிரச்சனைகளை, எப்படி அடித்து விரட்டுவது என்பதில் கவனத்தை காட்டவே மாட்டோம். காரணம் நம் வீட்டிற்குள் நல்லது வரவேண்டும் என்று நினைக்கக்கூடிய நம் மனதால், நம் வீட்டில் கெட்ட சக்தி உள்ளது என்று நம்பமுடியாது. வீட்டில் கெட்ட சக்தி உள்ளது என்று சொன்ன உடனேயே பயந்து விட வேண்டாம்.

பேய் பிசாசு பில்லி சூனியம் இவைகள்தான் கெட்ட சக்தி என்பது கிடையாது. வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி தீராமல் வந்துகொண்டே இருந்தால், வீட்டில் இருப்பவர்கள் சரியாக வேலையில் கவனம் செலுத்தாமல் சோம்பேறித்தனத்துடன் இருந்தால், பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல் படிக்காமல் இருந்தாலும், வீட்டில் தீபம் ஏற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், வீட்டில் சண்டை சச்சரவு வந்தாலும் வீட்டில் கெட்ட சக்தி உள்ளது என்பதுதான் அர்த்தம்.

- Advertisement -

ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத நெகட்டிவ் எனர்ஜி. இதன் காரணமாக தான் வீட்டில் இத்தனை பிரச்சனைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றது. முதலில் வீட்டில் இருக்கும் பிரச்சனையை தூக்கி வெளியே போட்டு விட்டால் போதும். வெளியில் இருக்கும் நல்லது தானாக நம் வீடு தேடி  வந்துவிடும். அதற்கான ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் வீட்டை துடைத்து சுத்தம் செய்து, வீடு முழுவதும் மஞ்சள் தண்ணீரை தெளித்து விடுங்கள். பூஜை அறையை சுத்தம் செய்து சாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து ஒரு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். ஒரு சிறிய தட்டில் ஒரே ஒரு வெற்றிலை, அந்த வெற்றிலையின் மேல் சாதாரண கட்டி கற்பூரம். மெழுகு கற்பூரம் பயன்படுத்தக்கூடாது. பூங்கற்பூரம் என்று சொல்லப்படும் கட்டி கற்பூரம் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கின்றது. அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். சுத்தமாக மரச் செக்கு தேங்காய் எண்ணெய். அதன்பின் அந்த கற்பூரத்தை பற்ற வைத்து விடுங்கள். நீங்கள் அந்த கற்பூர சுடரின் முன்பு பூஜை அறையிலேயே அமர்ந்துகொண்டு, மனதார இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் இந்த வீட்டில் இருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று சொல்லிவிட்டு தாம்பூலத் தட்டை அப்படியே கொண்டுபோய் உங்கள் வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும்.

அதாவது இந்த வெற்றிலையின் மேல் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஏற்றி இருக்கக்கூடிய கற்பூரத்தின் அந்த புகையானது உங்கள் வீடு முழுவதும் பரவும்படி செய்யுங்கள். ஜாக்கிரதை, எந்த பொருளின் மீதும் நெருப்பு படாமல் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு, அந்த தட்டைக் கொண்டு வந்து மீண்டும் பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். கொஞ்சம் பெரிய கட்டி கற்பூரம் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் சுற்றிக் காண்பித்து வரும் வரை அணையாமல் எரியும். உங்கள் சவுகரியம் வாரத்தில் ஏதாவது ஒரு கிழமையில் இந்த சுடரை வீட்டில் ஏற்றுங்கள். மொத்தமாக 5 வாரத்தில் நீங்கள் நம்ப முடியாத வித்தியாசம் உங்கள் வீட்டில் தெரியும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -