உங்கள் மனதில் இருக்கும் ஆசைகள் உடனே நிறைவேற வெற்றிலை தாம்பூலத்தை வைத்து எப்படி பரிகாரம் செய்யணும் தெரியுமா?

vetrilai-pakku-lemon-vinayagar
- Advertisement -

ஒருவர் மனதில் நினைக்கும் காரியம் உடனே நடப்பதற்கு அவர்களுடைய மனம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். குழப்பங்கள் நிறைந்துள்ள மனதில் அவர்களுடைய தேவையும் குழப்பமாகவே இருக்கும். உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் எதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை முதலில் சரியாகத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்கள் மனதில் இருக்கும் ஆசைகள் உடனே நிறைவேறுவதற்கு பூஜை அறையில் வெற்றிலை தாம்பூலத்தை எப்படி வைத்து வழிபட வேண்டும்? என்கிற ஆன்மிக பரிகாரத்தை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வெற்றிலை என்பது மங்கலப் பொருளாகும். அனைத்து இலைகளைக் காட்டிலும் இந்த வெற்றிலை பூஜையில் வைத்து முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் அதில் இருக்கும் தெய்வீக சக்தியும், மருத்துவ குணங்களும் ஆகும். மங்களத்தின் அடையாளமாக இருக்கும் இந்த வெற்றிலையை வீட்டில் வைத்து வளர்த்து வருபவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது நியதி. வெற்றிலை மும்மூர்த்திகளையும், மூன்று தேவியர்களையும் குறிக்கும் அற்புதமான ஒரு சக்தி கொண்ட இலையாகும்.

- Advertisement -

எப்பொழுதும் வீட்டில் விசேஷம் என்றால் கண்டிப்பாக புதிதாக வெற்றிலை, பாக்கு, பழம், பூ வைத்து வழிபட வேண்டும். வெற்றிலை பாக்கு வைக்காத பூஜை முறையாக நிறைவு பெறுவது இல்லை என்கிற தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள். வெற்றிலையில் இருக்கும் சக்தி வேண்டிய வேண்டுதலை நமக்கு உடனே நிறைவேற்றித் தரும் அற்புதம் புரியும். அது போல் எலுமிச்சை பழமும் நம் வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய அற்புதமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக் கொண்டு நாம் மனதில் நினைக்கும், நம்முடைய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும் என்கிற ஐதீகம் உண்டு.

எதற்காக நீங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அடுத்து உங்களுக்கு தேவையானது என்ன? என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு முழு மனதோடு உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் பூஜை செய்வதற்கு உரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்த பின்பு விளக்கை ஏற்றுங்கள். ஏற்றிய பின்பு ஒற்றை படையில் வெற்றிலை இலைகளை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள். மூன்று அல்லது ஐந்து வெற்றிலைகளை வைத்துக் கொள்ளலாம். அதன் மீது கொட்டை பாக்கு வைக்க வேண்டும்.

- Advertisement -

நீங்கள் மற்ற கவர் செய்யப்பட்டுள்ள பாக்குகளை வைப்பதை விட கொட்டை பாக்கு தெய்வீக சக்தி உண்டு என்பதால் அதனை பயன்படுத்துவது உசிதமானது. பின்பு அதன் மீது கொஞ்சம் பூ மற்றும் பழம் வைக்க வேண்டும். ரெண்டு வாழை பழத்தை பூஜைக்கு என்று கேட்டு வாங்கி வையுங்கள். அதன் மீது கொஞ்சம் உதிரிப் பூக்களை தூவி கொள்ளுங்கள் அல்லது சிறிது பூவை கத்தரித்து வையுங்கள். நீங்கள் வைக்கும் பூவானது மணம் மிகுந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அங்கு தெய்வீக ஆற்றல் அதிகரிக்கும். பின்பு அதனுடன் சேர்த்து ஒரு எலுமிச்சையும் வையுங்கள். இவை அனைத்தையும் ஒரு தாம்பூலத் தட்டில் பச்சரிசியை பரப்பி அதன் மீது வைக்க வேண்டும்.

பின்பு உங்களுடைய பிரார்த்தனைகளை மனதார வேண்டிக் கொண்டு கற்பூர ஹாரத்தி காண்பியுங்கள். வெற்றிலை காய்ந்தவுடன் தூக்கி எறிந்து விடலாம். மற்ற உபயோகப்படும் பொருட்களை எல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். எலுமிச்சையை மட்டும் பூஜை அறையில் நாற்பத்தி எட்டு நாட்களுக்கு அப்படியே வையுங்கள். அதன் பிறகு யாருடைய கால்களிலும் படாதபடி தூக்கி போட்டு விடுங்கள். அரிசியை நீங்கள் நைவேத்தியம் படைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமையில் செய்து வர நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் நீங்கள் நினைத்த வேண்டுதல் உடனே நடக்கும்.

- Advertisement -