உங்கள் கனவிலும் நினைத்திராத வசதியான வாழ்க்கையை வாழ ஒரு கட்டு தர்ப்பை புல்லை இப்படி வைத்து விடுங்கள். இந்த தர்ப்பை இருக்கும் இடத்தில் பணம் குவியலாக குவிந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

எல்லா மனிதர்களுமே வசதியான பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை சிறிதளவாது இருக்கத் தான் செய்யும். ஒரு சிலர் அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபவார்கள். சிலரோ வாழ்க்கையில் இதுவே போதும் என நினைத்து அந்த வாழ்க்கைக்கு முயற்சி செய்யாமல் இருந்த நிலையிலே வாழ்வார்கள். ஆனால் அப்படி வாழ்வதற்காக யோகம் கிடைக்காத என்ற எண்ணம் இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி சாதாரணமான மனிதர்களை கூட பணக்காரர்களாக மாற்றக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணவரவை அதிகரிக்கும் தர்ப்பைப் புல் பரிகாரம்
இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த கிழமையில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் ஆனால் வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் இதை செய்யும் பொழுது மிக மிக விசேஷமான பலன்களை கொடுக்கும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு தர்ப்பைப்பில் கட்டை முதல் நாளே வாங்கி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்யும் நாள் அன்று காலையிலே எழுந்து குளித்து முடித்த பிறகு, வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்று வைத்த பிறகு இந்த தர்ப்பை கட்டு மஞ்சள் நிற இரண்டையும் எடுத்துக் கொண்டு பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் நூலால் ஒவ்வொரு தரப்பை புல் கட்டையும் எடுத்து கீழிருந்து மேலாக கட்டிக் கொண்டே வர வேண்டும். அப்போது மனதில் குபேரர் அல்லது மகாலட்சுமி தாயாரை நினைத்து அவர்களுக்கான ஸ்லோகங்கள் மந்திரங்கள் என உங்களுக்கு தெரிந்ததை பாராயணம் செய்ய வேண்டும்.

தர்ப்பை புல்லை மஞ்சள் நிற நூலால் கட்டிய பிறகு அந்த கட்டிற்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்த பிறகு பூஜை அறையில் வைத்து தீப தூபங்கள் எல்லாம் காட்டிய பிறகு அது ஒரு நாள் முழுவதும் உங்கள் பூஜை அறையில் இருக்கட்டும். இதை அடுத்த நாள் எடுத்து உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது சாமி அறையிலோ வைத்து விடுங்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் வியாபார ஸ்தலங்களிலும் இதை கொண்டு வைக்கலாம்.

- Advertisement -

இந்த தர்ப்பை புல் கட்டானது 48 நாட்கள் அங்கேயே இருக்க வேண்டும். இந்த 48 நாட்களுக்கும் இதற்கு வெறும் சாம்பிராணி ஊதுபத்தி மட்டும் காட்டி அப்படியே வைத்திருங்கள். அடிக்கடி இதை தொட்டு கொண்டம் இடத்தை மாற்றி வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. இதை வைத்த இடத்திலே அப்படியே வைத்து விடுங்கள். 48வது நாள் இதை எடுத்து கால் படாத ஒரு இடத்தில் போட்டு விட்டு புதிதாக தர்ப்பைப் புல் வாங்கி இதே போல பரிகாரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதை நீங்கள் ஒரு முறை செய்த உடனே உங்கள் வாழ்க்கையில் அனேகமான மாற்றங்களை உணர தொடங்குவீர்கள். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய செய்ய உங்களுடைய வாழ்க்கைத் தரம் மேன்மேலும் உயர்வதை உங்களால் கண்கூட காண முடியும். இது வரை உங்களுக்காக வராத யோகங்கள் எல்லாம் உங்களை தேடி வந்து குபேரர்களாக வாழ வைக்க இந்த தர்ப்பைப்புல் பரிகாரத்தை தவிர சிறந்த ஒரு பரிகாரம் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த பரிகாரங்களையும் நம்பிக்கை உள்ளவர்கள் இதை முயற்சி செய்து பார்த்து பலன் அடையலாம் என்று நம்பிக்கையுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -