கோவில்களில் மட்டுமே செய்ய வேண்டிய பரிகாரங்கள்! இதனை தவறியும் வீட்டில் செய்து விடாதீர்கள்! குடும்பத்திற்கு நல்லதல்ல.

pariharam-deepam
- Advertisement -

எல்லாப் பரிகாரங்களையும் முறையாக நாம் செய்வதனால், அதற்குரிய பலன்களையும் நமக்கு கொடுக்கும். அதில் குறிப்பாக சில பரிகாரங்கள் கோவிலில் தான் செய்யப்பட வேண்டும் என்பது நியதி. அந்த பரிகாரங்களை எல்லாம் வீட்டில் செய்வதால், வீட்டில் தேவையில்லாத எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வழிவழியாக, காலம் தோறும் பின்பற்றி வரும் பரிகாரங்களை முறையாக கோவில் செய்வது தான் நல்ல பலன்களை நமக்கு கொடுக்கும். ஒரு சில பரிகாரங்கள் எல்லாம் வீட்டில் செய்யவே கூடாது. அப்படியான பரிகாரங்கள் என்னென்ன? எதற்காக அதை செய்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

el deepam

எள் தீபம்:
முதலாவதாக சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுதல் என்பது கோவிலில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒரு பரிகாரம் ஆகும். இதனை வீட்டில் செய்வதால் நிறைய கெடுதல்கள் ஏற்படும். எள் என்பது சனி பகவானுக்கு உரிய தானியம் ஆகும். கருப்பு எள் ஒரு போதும் வீட்டின் பூஜை அறையில் வைக்கக் கூடாது. சனி தோஷம் இருப்பவர்கள் கருப்பு எள்ளை தானம் செய்வது வழக்கம். அது போல் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு வைப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும். ஆனால் எள் கலந்து தீபம் ஏற்றுவது கோவிலில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒன்று. இதனை வீட்டில் செய்வதால் தோஷ நிவர்த்தி தடைபடும். இதனால் மேலும் மேலும் பிரச்சனைகள் தான் அதிகரிக்கும்.

- Advertisement -

எள் தீபம் சனி தோஷம் இல்லாதவர்களும் சனிக்கிழமை தோறும் கோவில்களில் ஏற்றி வருவது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். எள் தீபம் என்பது ஒரு கருப்பு துணியில் சிறிதளவு எள் போட்டு கருப்பு நூல் கொண்டு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும். இதனை ஒரு அகல் விளக்கு எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, எள் முடிப்பை நனைத்து, அந்த கருப்பு துணியின் நுனியில் திரி போல் செய்து தீபம் ஏற்றுவது முறையாகும். இதனை தப்பித் தவறியும் வீட்டில் செய்யவே வேண்டாம்.

lemon deepam

எலுமிச்சை தீபம்:
எலுமிச்சை தீபம் செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில் துர்க்கைக்கு செய்யப்படும் பரிகாரம் ஆகும். இதனை மற்ற தோஷங்களுக்கு கூட செய்யலாம். ஆனால் எலுமிச்சையை தீபமாக போடுவது என்பது கோவிலில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். இதனை வீட்டில் செய்யவே கூடாது என்கிறது சாஸ்திரம். எலுமிச்சை நல்ல விஷயத்திற்கும் பயன்படுகிறது. கெட்ட விஷயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

எலுமிச்சையில் இருக்கும் அதீத சக்தி விளக்காக ஏற்றும் பொழுது பல்வேறு அதிர்வலைகளை உண்டாக்குகிறது. இதனை வீட்டில் ஏற்றுவது மிகவும் தவறான ஒரு செயலாகும். துர்க்கை அம்மனுக்கு வாரம் தோறும் ராகு வேளையில் கோவிலுக்கு சென்று இது போல் விளக்கு ஏற்றுங்கள். சுபகாரியத் தடைகள் நீங்கி விடும். பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த அம்மன் அதனை தீர்த்து வைப்பாள் என்பது ஐதீகம்.

thengai

சிதறு தேங்காய்:
விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். போகின்ற காரியம் ஜெயம் உண்டாக இப்படி வழிபாடு செய்வார்கள். நல்ல காரியம் நடைபெறுவதற்கு முன் சிதறு தேங்காய் உடைத்து விட்டு செய்தால் நல்லவை நல்லதாகவே முடியும் என்பது நம்பிக்கை. ஆனால் இதனை வீட்டில் கட்டாயம் செய்யக்கூடாது. சிதறு தேங்காய் வீட்டில் உடைப்பது அவ்வளவு நல்லதல்ல. விநாயகர் சந்நிதியில் கோவிலுக்கு சென்று உடைப்பது தான் முறையாகும். எந்த சூழ்நிலையிலும் வீட்டில் தேங்காயை, சிதறு காயாக உடைப்பது கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. திருஷ்டிக்காக மட்டுமே வீட்டில் தேங்காயை இவ்வாறு உடைப்பது வழக்கம். பரிகாரத்திற்கு கோவிலுக்கு சென்று உடைப்பது மட்டுமே முறையாகும்.

- Advertisement -

coconut-diya

தேங்காய் தீபம்:
தேங்காய் தீபம் என்பது பெண் தெய்வங்களுக்கு செய்யப்படும் ஒரு பரிகாரம் ஆகும். பண ரீதியான தகராறுகள், பிரச்சனைகள் நீங்க இது போல் வழிபடுவது வழக்கம். மேலும் வேலை இல்லாதவர்களுக்கு மற்றும் குழந்தை இல்லாதவர்களுக்கு நன்மைகள் நடக்க தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ஆனால் இதை வீட்டில் செய்ய கூடாது. அம்பாளின் சந்நிதானத்தில் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபாடுகள் செய்ய வெற்றி உண்டாகும். தேங்காய் தீபம் ஏற்றும் பொழுது நெய்யை தவிர வேறு எந்த எண்ணையையும் பயன்படுத்தக் கூடாது என்பது நியதி. இது போல சில சக்தி வாய்ந்த பரிகாரங்களை மட்டும் வீட்டில் செய்யாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
48 நாட்கள் இந்த பூஜையை செய்பவர்கள் வீட்டில், எந்த கெட்ட சக்தியாலும் நெருங்கவே முடியாது. பல ஹோமங்கள் வீட்டில் நடத்திய பலனை தரக்கூடிய அற்புதமான சக்தி இந்த ஒரு பூஜைக்கு உண்டு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -