வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்ற-இறக்கங்களை சந்தித்து கொண்டிருக்கிறீர்களா? ஒரு எலுமிச்சையை இப்படி செய்து பாருங்கள் நேர்மறை வைப்ரேஷன் அதிகரிக்கும்! அதிர்ஷ்ட மழை பொழியும்.

vettiver-lemon
- Advertisement -

எல்லோருடைய வாழ்க்கையும் சரியாக ஒரே மாதிரியாக போவது கிடையாது. ஏற்றங்கள், இறக்கங்கள் இருப்பது சகஜம் தான் என்றாலும் கூட, சிலருக்கு தொடர்ந்து பிரச்சனைகளும், தோல்விகளும் துரத்திக் கொண்டே இருக்கும். வாழ்க்கையில் பிரச்சனை இருக்கலாம் ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாக இருப்பவர்களுக்கு இந்த ஒரு விசேஷ சக்தி வாய்ந்த பரிகாரம் வீட்டில் செய்யும் பொழுது நல்ல மாற்றங்களை காணக்கூடிய யோகத்தைப் பெறுவார்கள்! அது என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் பலவிதமான தடைகளையும், தாமதங்களையும் சந்திக்கும் பொழுது பொறுமையுடன் இருப்பது அவசியமாகும். ஜாதக ரீதியாக இருக்கும் பிரச்சனைகளும் சேர்ந்து உங்களை ஆட்டிப் படைக்க துவங்கும் பொழுது இது போல தொடர்ந்து தோல்விகளும், தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனையும் வந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

தொடர் பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட கூடிய அற்புதமான சக்தி, எதிர்மறை ஆற்றல்களை நீக்கக் கூடிய சக்தி எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சை கனியை, தேவ கனி என்று கூறுவார்கள். எலுமிச்சை கனிக்கு தோஷங்கள் கிடையாது. மந்திர, மாந்திரீகத்திற்கு பயன்படுத்தும் எலுமிச்சை, நல்ல ஆன்மீக விஷயங்களுக்கும், பரிகாரங்களுக்கும் பயன்படுகிறது. இத்தகைய எலுமிச்சை எப்பொழுதும் வீட்டில் இருந்தால் உங்கள் வீட்டிற்குள் துஷ்ட சக்திகள் நுழைய முடியாது

மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு சுத்தமான எலுமிச்சையை எடுத்து கொள்ள வேண்டும். பரிகாரத்திற்கு பயன்படுத்தும் எலுமிச்சை எப்பொழுதும் புள்ளிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே போல நேர்மறை ஆற்றல் அதிகரிக்க செய்யக்கூடிய சக்தி, வெட்டிவேருக்கு உண்டு. இந்த வெட்டிவேர் பூஜை ,புனஸ்காரங்கள், ஹோமம், யாகம் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய அற்புதமான ஒரு மூலிகைப் பொருள் ஆகும்.

- Advertisement -

தண்ணீரை சுத்தம் செய்ய பயன்படுத்தும் இந்த வெட்டிவேர் குளிர்ச்சித் தன்மை பொருந்தியது. இதன் ஆற்றல் ஆன்மீக ரீதியாக அளப்பரியது என்பதால் எப்பொழுதும் வெட்டிவேர் இல்லத்தில் இருப்பது துரதிர்ஷ்டத்தை தவிர்க்கும். இந்த வெட்டிவேர் கொஞ்சமாக எடுத்து அதை வாசம் மிகுந்த பன்னீரில் அல்லது தண்ணீரில் முக்கி எடுத்து கொள்ளுங்கள். இந்த வெட்டி வேரைக் கொண்டு எலுமிச்சையை சுற்றிக் கொள்ள வேண்டும். வெட்டிவேர் கீழே விழாதபடி ஒரு மஞ்சள் நூல் கொண்டு இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள்.

பின்னர் இதை அப்படியே உங்கள் தலைவாசலுக்கு நேராக மேலே ஆணியில் கட்டி விடுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை இதில் இருக்கும் எலுமிச்சை பழத்தை மட்டும் மாற்ற வேண்டும். வெட்டிவேரை அடிக்கடி நீங்கள் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதை தண்ணீர் அல்லது பன்னீரில் மீண்டும் முக்கி எடுத்து இதே போல எலுமிச்சை சுற்றி, மஞ்சள் நூல் கொண்டு கட்டி, வீட்டின் தலை வாசலில் மாட்டிவிட்டால் போதும்! எப்பொழுதும் வீட்டிற்குள் நல்ல ஒரு வைப்ரேஷன் இருந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் துஷ்ட சக்திகள் இருந்தால் வெளியேறிவிடும். துர்தேவதைகள் நுழைய முடியாது. உங்கள் வீட்டையும், வீட்டில் இருக்கும் நபர்களையும் காக்கும் நல்ல ஒரு அரணாக இருக்கக் கூடிய இந்த எலுமிச்சையுடன் கூடிய வெட்டிவேர் எப்பொழுதும் தீட்டு இல்லாத நாட்களில் தான் நீங்கள் எடுத்து கழட்டி மாற்ற வேண்டும். இப்படி செய்து பாருங்கள் உங்கள் மனதில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கத் துவங்கும், இல்லத்தில் சுபிட்சம் நிலைக்கும்.

- Advertisement -