இந்த 2 பொருளும் ஒன்றாக சேர்ந்து பூஜை அறையில் இருந்தால், குடும்ப கஷ்டம் வேரோடு அழியும். தடைகளை தவிடுபொடியாக்க கூடிய வழிபாடு.

pillaiyar
- Advertisement -

யாருக்குத்தான் இல்லை குடும்ப கஷ்டம். எல்லோருக்கும் தான் குடும்பத்தில் கஷ்டம் இருக்கும். கஷ்டம் இருந்தால் தான் அது குடும்பம். கஷ்டமே இல்லை என்றால் அந்த வீடு கோவிலாகவும், கோவிலில் இருப்பவர்கள் மகனாகவும் இறைவனாகவும் தான் இருப்பார்கள். ஆகவே கஷ்டத்தைக் கட்டு கலங்காதீங்க. உங்களுடைய குடும்பத்தில் தீராத கஷ்டம் இருக்கிறது, துன்பங்கள் துயரங்கள் தொடர் தோல்வி, புதிய முயற்சியில் தடை என்றால் முதலில் கஷ்டத்திற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து அந்த கஷ்டத்தை சரி செய்வதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதுதான் முதல் வழி. இதோடு சேர்த்து இதற்கு ஒரு வழிபாட்டையும் செய்யலாம்.

குடும்பத்தில் எந்த காரியத்தை தொட்டாலும் தடை. எதை செய்தாலும் அதன் மூலம் ஒரு கஷ்டம் வருகிறது. புதிய வேலைக்காக முயற்சி செய்கிறார்கள். நல்ல வேலை கிடைப்பதில் ரொம்ப நாளாக தடை. கிடைக்கின்ற வேலைக்கு சென்றால் அந்த வேலையில் நிம்மதி கிடையாது. வேலையில் சரியான சம்பளமும் கிடையாது. வீட்டில் சுப காரியங்கள் செய்யலாம் என்றால், வீட்டில் வயதுக்கு வந்த பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை அமையவில்லை.

- Advertisement -

குழந்தைக்கு தொடர்ந்து ஆரோக்கியத்தில் பிரச்சனை, நோய் நொடி பிரச்சனை எந்த நேரமும் மருந்து மாத்திரை. என்னதான் செய்வது. எந்த பக்கம் திரும்பினாலும் அடி விழுகிறது. வாழ்க்கையில் எங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் ஜெயித்ததாக சரித்திரமே இருக்காது போல என்பவர்கள் விநாயகரை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யலாம்.

குண்டு மஞ்சள். இதை பார்ப்பதற்கு பிள்ளையார் போலவே இருக்கும். குண்டு மஞ்சளை வாங்கிக் கொள்ளுங்கள். அருகம்புல் தேவை. அருகம்புல் விநாயகருக்கு ரொம்பவும் பிடித்தது. குண்டு மஞ்சளில் அருகம்புல்லை லேசாக சுற்றியவாறு தயார் செய்து ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள். இது உங்களுடைய பூஜை அறையில் இருக்கட்டும். இதுதான் நீங்கள் வழிபட வேண்டிய விநாயகர். முடிந்தால் தினமும் அந்த மஞ்சளில் இருக்கும் அருகம்புல்லை மாற்றலாம்.

- Advertisement -

48 நாட்கள் மஞ்சளை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தொடர்ந்து 48 நாட்கள் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு இந்த மஞ்சளுக்கு முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குடும்பத்தில் இருக்கும் தடைகளும் கஷ்டங்களும் தவிடு பொடி ஆக வேண்டும் என்று விநாயகரையும் குலதெய்வத்தையும் வேண்டி பிரார்த்தனை செய்தால், தடைகள் தவிடு பொடியாகும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் 100% வெற்றியில் முடியும்.

உங்களுடைய குடும்பத்தில் எவ்வளவு பெரிய கஷ்டம் இருக்கட்டும். எவ்வளவு பெரிய தடைகள் இருக்கட்டும். அதையெல்லாம் தாண்டி நீங்கள் ஜெயிப்பதற்கு இந்த சின்ன பரிகாரம் போதும். இதை நீங்கள் தாந்த்ரீகம் என்று நினைத்து செய்தாலும் சரி, அல்லது பிரார்த்தனை என்று நினைத்து செய்தாலும் சரி, நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மூன்று நாட்கள் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால், அந்த நாட்களை தவிர்த்து விட்டு 48 நாட்கள் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய வீட்டில் வேறு யாராவது விளக்கு ஏற்ற உள்ளார்கள் என்றால் அந்த மூன்று நாட்களைக் கூட தவறவிடாமல், வீட்டில் இருக்கும் மற்றவர்களை விளக்கு ஏற்றச் சொல்லி பரிகாரத்தை செய்வது மேலும் சிறப்பான பலனை கொடுக்கும். 48 நாள் பூஜை நிறைவடைந்த பிறகு அந்த மஞ்சளை செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடலாம். அருகம்புல் காய்ந்தவுடன் நீங்கள் அடிக்கடி எடுத்து அதை புதியதாக மாற்றிக் கொள்ளலாம் தவறு கிடையாது. இந்த பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -