எதிர்பாராத விபத்தின் மூலம் நமக்கும், நம் குடும்பத்திற்கும் எந்த ஒரு ஆபத்தும் வராது. வாகனம் ஓட்டும் முன்பு இந்த மந்திரத்தை உச்சரித்தால்.

murugan-om
- Advertisement -

உலகம் போகக்கூடிய போக்கில் வீட்டில் இருப்பவர்கள் பத்திரமாக வீட்டில் இருந்து வெளியே சென்று, வீட்டிற்கு திரும்புவது என்பது கஷ்டமான ஒரு விஷயம் ஆகிவிட்டது. எதிர்பாராத விபத்துகளின் மூலம் நமக்கும் நம் வீட்டில் இருப்பவர்களுக்கும் எந்த ஒரு ஆபத்தும் வரக்கூடாது. வண்டி வாகனங்கள் ஓட்டும்போது குடும்பத்தோடு வெளியே சென்று வரும்போது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்றால், நாம் ஆன்மீக ரீதியாக எந்தெந்த விஷயங்களை எப்படி பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றித்தான் இன்று சில குறிப்புகளை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

murugar1

காக்கும் கடவுள் முருகப் பெருமானை வேண்டிக் கொண்டு பாம்பன் சுவாமி அருளிய இந்த ஒரு பாடலை தினம் தோறும் நாம் வாசித்துவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றால் நமக்கு எதிர்பாராத விபத்துக்களின் மூலம் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது. முருகனின் வேல் நம்மை பத்திரமாக பாதுகாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பன் சுவாமிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் வரிகள் உங்களுக்காக.

- Advertisement -

மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும் சான்று செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க.
-பாம்பன் சுவாமிகளின் ஷண்முக கவசம்

இதை ஒரு பேப்பரில் எழுதியோ அல்லது பிரின்ட் அவுட் எடுத்து உங்கள் வண்டியில் ஒட்டி வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு எதிர்பாராத விதமாக விபத்துகள் நடக்காமல் இருக்க இதுவும் ஒரு வழி. இரண்டாவதாக, பயணம் என்று சொல்லும் போதே நம் நினைவுக்கு வரக்கூடிய மற்றொரு கடவுள் ஹனுமன். ஒருவரை பத்திரமாக தூரத்திற்கு பிரயாணம் செய்ய வைத்து, அவரை பத்திரமாக கொண்டு வந்து இருந்த இடத்திலேயே சேர்க்கக் கூடிய சக்தி கொண்ட கடவுள் இந்த ஹனுமன்.

- Advertisement -

பிரயாணத்திற்கு முன்பு முதலில் அனுமனை மனதார நினைத்து அதன் பின்பு ராம மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ‘ராம ராம’ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே நம்முடைய பிரயாணத்தை தொடங்கினால் நமக்கு எதிர்பாராமல் வரக்கூடிய விபத்துக்களின் மூலம் கூட பெரியதாக எந்த ஒரு ஆபத்தும் வராது.

hanuman-lingam

ஒருவருக்கு எந்த நேரத்தில் எப்போது ஆபத்து வரும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒரு விஷயம். இருப்பினும் வரக்கூடிய ஆபத்துகளை தடுத்து நிறுத்தக்கூடிய அபரிதமான சக்தி இந்த பூமியில் சில நேர்மறை ஆற்றலுக்கு உண்டு. அந்த நேர்மறை ஆற்றல் ஒன்றுதான் இந்த இறை சக்தி.

hanuman

நம்பிக்கையுள்ளவர்கள் முருகப் பெருமானை வேண்டி மேல் சொன்ன பாடலை துதித்தாலும் சரிதான். பாடல்களை எல்லாம் எங்களால் உச்சரிக்க முடியாது என்பவர்கள் அனுமனை நினைத்து ராம மந்திரத்தை உச்சரித்து பாதுகாப்பாக உங்களுடைய பிரயாணத்தை செய்யுங்கள். நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -