விநாயகருக்கு சாற்றப்படும் அருகம்புல்லை வீட்டில் இப்படி செய்தால் பீடை, தரித்திரம் ஒழிந்து, நாம் அழிந்து போக வேண்டும் என்று நினைப்பவர்களின் கண் திருஷ்டிகள் கழிந்து, செல்வம் பெருகும் தெரியுமா?

vinayagar-dhoobam
- Advertisement -

விநாயகருக்கு சாற்றப்படும் அருகம்புல் ரொம்பவே சக்தி வாய்ந்த ஒரு பொருளாக ஆன்மீகத்தில் கருதப்படுகிறது. சாதாரண புல்லினை விட இந்த அறுகம் புல்லில் மகத்துவமான தன்மைகள் உண்டு. ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடிய இந்த அருகம்புல் வளரும் இடங்களிலெல்லாம் வாஸ்து தோஷம் இருக்காது என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு சிறப்புகள் வாய்ந்த இந்த அருகம்புல்லை வீட்டில் என்ன செய்தால் பீடைகள் ஒழிந்து செல்வ மழை பொழியும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் ஆன்மிக தகவல்களாக நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வீட்டில் எல்லா நேரமும் நாம் சாஸ்திர, சம்பிரதாயங்களை கடைப்பிடித்து நடந்து கொள்ள முடியாது. வீட்டில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சனைகளாக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. இவ்வகையில் நாம் அறியாமல் செய்யும் தவறுகளால் எதிர்மறை ஆற்றல் பெருக துவங்குகிறது. இதனால் தரித்திரங்களும், பீடைகளும் தலை விரித்தாட வீட்டில் சண்டை, சச்சரவுகளும், வறுமையும் தாண்டவமாடுகிறது.

- Advertisement -

இதில் இருந்து எளிதாக விமோசனம் பெறுவதற்கு உரிய சக்தி அருகம் புல்லுக்கு உண்டு. அதுவும் விநாயகருக்கு சாற்றிய இந்த அருகம் புல்லை வீட்டில் இப்படி செய்தால் பீடைகள் ஒழிந்து விடும் என்ற ஐதீகம் உண்டு. அருகிலிருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று அங்குள்ள விநாயகருடைய கழுத்தில் இருக்கும் அருகம் புல்லை பய பக்தியுடன் வாங்கி வாருங்கள். இதை நன்கு பிரித்துப் போட்டு ஒரு சுத்தமான துணியில் விரித்து வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். நன்கு காய்ந்த பின்பு இவற்றை எடுத்து மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த அருகம்புல் பொடியை எப்பொழுதும் வீட்டின் பூஜை அறையில் வைத்து இருந்தால் வீட்டை சுற்றி இருக்கும் செய்வினைகள், தீய சக்திகள் எதுவும் வேலை செய்யாது. விநாயகருடைய உடம்பில் பட்ட இந்த அறுகம்புல் சாதாரண அறுகம்புல்லை விட ரொம்பவே சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமையில் சாம்பிராணி தூபம் போடும் பொழுது இந்த அருகம்புல் பொடியையும் சேர்த்து போட வேண்டும். பால் சாம்பிராணி எப்பொழுதும் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கம்ப்யூட்டர் சாம்பிராணி, கப் சாம்பிராணி போன்றவைகளில் இருக்கும் மணத்தை விட இயற்கையாக கிடைக்கக் கூடிய சாம்பிராணி ரொம்பவே சக்தி வாய்ந்தது. மேற்கத்திய நாடுகளில் அதிகம் விளையும் ஒரு மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின் சாம்பிராணியாக தயார் செய்யப்படுகிறது. பெரும்பாலான மத வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த பால் சாம்பிராணியை வீட்டில் நல்ல நாட்களில் தூபம் போட்டு அதனுடன் இந்த அறுகம்புல் பவுடரையும் தூவி விட்டால் அதிலிருந்து வரக்கூடிய புகை வீடு முழுவதும் பரவும்.

இதனால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள், துர்சக்திகள், பீடைகள், தரித்திரங்கள், துர்தேவதைகள், கெட்ட ஆத்மாக்கள் எதுவாக இருந்தாலும் அவற்றால் வீட்டில் தங்க முடியாமல் அலறி அடித்து ஓடி விடும். இதனால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி பிறக்கும். இதனால் தொழிலில் நல்ல ஒரு முன்னேற்றமும் உண்டாகும், செல்வ செழிப்பு அதிகரிக்க இதைப் போல் எப்பொழுதும் தொடர்ந்து செய்து வாருங்கள்.

- Advertisement -