சங்கடங்கள் தீர்க்கும் விநாயகர் வழிபாடு. எப்போதுமே வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் விநாயகருக்கு, இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், கஷ்டங்கள், தடைகள் அனைத்தும் காணாமல் போகும்.

vinayagar-1 (1)
- Advertisement -

சில பேருக்கு வாழ்க்கையில் சீக்கிரத்தில் முன்னேற்றம் அடையவே முடியாது. எதை தொட்டாலும் தோல்வியைத் தழுவுவார்கள். ஒரு தொழிலை துவங்கினால் அதில் உடனடியாக தடை வந்து நிற்கும். வேலைக்கு சென்றால் அதில் ஒரு பிரச்சனை, வீட்டில் சில சுப காரியங்களை தொடங்கினால் அதில் ஒரு பிரச்சனை, திருமணத்தடை, குழந்தைப் பேறு பெறுவதில் ஒரு தடை, இப்படி உங்கள் வாழ்க்கையில் எந்த தடை இருந்தாலும் சரி, அந்த தடைகளை தகர்த்தெறிய கூடிய விநாயகர் வழிபாட்டைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vinayagar-abishegam

விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஒரு நல்ல முழு தேங்காயை வாங்கி எடுத்துச் செல்லுங்கள். கோவிலுக்கு சென்று அந்த தேங்காயை இரண்டாக உடைத்து, தேங்காயின் இரண்டு மூட்டுகளிலும் தேங்காய் எண்ணெயை ஊற்றி, மஞ்சள் திரி போட்டு தீபம் ஏற்றி, விநாயகரின் முன்பு வைத்துவிட்டு, மனதார 11 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். முடிந்தால் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையை 11 என்ற கணக்கில் செய்து எடுத்துச் சென்று விநாயகர் முன்பு வைத்து நிவேதனம் செய்யுங்கள். அந்த கொழுக்கட்டையை அங்கு வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.

- Advertisement -

விநாயகரை ஒன்பது முறை வலம் வர வேண்டும். இறுதியாக விநாயகருக்கு இந்த மந்திரத்தைச் சொல்லி உங்களது பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். உங்களுக்கான சங்கடங்களை தீர்க்கும் விநாயகர் மந்திரம் இதோ.

vinayagar

ஓம் கணபதியே வருக
ரீங் கணபதியே வருக
ரீங்கார கணபதியே வருக

- Advertisement -

கங் கணபதியே வருக
எங்கள் குடும்பம் மேன்மையுற
சங்கடங்கள் தீர்க்க
வசிவசி வய நமசிவாய நம

இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்து விட்டு கோவிலிலேயே சிறிது நேரம் அமர்ந்து விநாயகரிடம் மனமுருகி உங்களுடைய கஷ்டங்களை சொல்ல வேண்டும். அந்த கஷ்டங்கள் கூடிய விரைவிலேயே தீரவேண்டும் தடைகள் தகர்க்கப்பட வேண்டும் என்ற வேண்டுதலை விநாயகரிடம் வையுங்கள். இறுதியாக நமஸ்காரம் செய்து கொண்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

vinayagar

சரி இந்த வேண்டுதலை குறிப்பாக என்றைக்கு செய்யலாம். மாதம்தோறும் வரக்கூடிய சங்கட சதுர்த்தி அன்று விநாயகரை இப்படி வழிபாடு செய்தால் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நிரந்திர தீர்வை அந்த ஆணை முகதன் காட்டிக் கொடுப்பான் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -