விற்காத நிலம் வீடு போன்றவற்றை 90 நாட்களில் நினைத்த லாபத்திற்கு விற்க எந்த தெய்வத்தை? எப்படி வணங்க வேண்டும் தெரியுமா?

nilam-boomi-home-varaga-perumal
- Advertisement -

கஷ்டப்பட்டு ஒரு இடத்தை வாங்கி அல்லது வீட்டை கட்டி முடித்தால் அதில் சில பேருக்கு வாழ முடியாத நிலை உருவாகக்கூடும். வாங்கிய நிலம் அல்லது வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இப்படி நீங்கள் விற்க முடியாத வீட்டை அல்லது நிலத்தை விற்க வேண்டுமென்றால் வணங்க வேண்டிய தெய்வம் என்ன? 90 நாட்களுக்குள் நல்ல லாபத்திற்கு நீங்கள் நினைத்த படி விற்க செய்ய வேண்டிய பரிகாரம் தான் என்ன? என்பதை இனி இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஆசை ஆசையாக நீங்கள் கட்டிய வீட்டை திடீரென விற்க வேண்டுமென்றால் அவசரத்திற்கு யாரும் வாங்க மாட்டார்கள். நீங்கள் நினைத்த லாபத்திற்கு, நினைத்த படி உங்களுடைய வீட்டை விற்பனை செய்வதற்கு வராக பெருமாளை வழிபட்டு வாருங்கள். பன்றி உருவம் எடுத்த இந்த திருமாலின் மூன்றாவது அவதாரம் வராக பெருமாள் என்று போற்றப்படுகிறது. வராகம் என்றால் பன்றியை குறிக்கும் சொல்லாகும்.

- Advertisement -

இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்னும் அசுரன் பூமியை கைப்பற்றி சமுத்திரத்தின் அடியில் சிறை பிடித்து வைத்திருந்தான். அந்த அசுரனிடம் இருந்து பூமியை கைப்பற்றுவதற்காக பன்றி அவதாரம் எடுத்து பல வருடங்கள் போர் புரிந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. விஷ்ணு பகவானுக்கு இருக்கும் தசாவதாரத்தில் மூன்றாவது அவதாரமாக கருதப்படும் இந்த வராக அவதாரம் ரொம்பவே சக்தி வாய்ந்தது. பல இடங்களில் வராக பெருமாள் தன் மூக்கின் மீது பூமியை வைத்து சுலற்றுவதாக இன்றும் சிற்பங்களை காணலாம்.

பூமியை கைப்பற்றியதால் நிலம், பூமி, இடம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் உள்ளவர்கள் இந்தப் பெருமாளை வழிபடும் பொழுது அந்த பிரச்சினைகளிலிருந்து சுலபமாக விடுபட்டு விடலாம் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. எனவே நிலம் சார்ந்த பிரச்சனைகளில் உள்ளவர்கள் வராகப் பெருமாளை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். மேலும் வராக பெருமாள் கோவிலுக்கு சென்று கைங்கரியம் செய்து உங்களால் முடிந்த உதவிகளை புரிந்து வாருங்கள்.

- Advertisement -

புதன் ஓரையில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு கைப்பிடி மண்ணை நீங்கள் விற்க முடியாத இடம் அல்லது வீட்டில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மண்ணை எடுத்து ஒரு பேப்பர் அல்லது பாலிதீன் கவரில் கட்டிக் கொள்ளுங்கள். பின்னர் வராக பெருமாள் கோவிலுக்கு சென்று அவருடைய பாதத்தில் வைத்து உங்களுடைய கோரிக்கையை வையுங்கள். எப்படியாவது என்னுடைய நிலத்தை நான் நினைத்தபடி நினைத்த விலையில் விற்பனை செய்துவிட வேண்டும் அல்லது வீட்டை நல்ல லாபத்தில் விற்று விட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த மண்ணை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் அந்த இடத்தில் போட்டு விடுங்கள்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று வெள்ளிக் கிழமைகளில் செய்ய வேண்டும். மூன்று வெள்ளிக்கிழமைகள் இவ்வாறு நீங்கள் செய்து வர 90 நாட்களில் நீங்கள் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. எனவே இதை தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தொடர்ந்து செய்யுங்கள். வராக பெருமாள் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வராக பெருமாள் படத்தை வாங்கி வைத்தும் இவ்வாறு வழிபடலாம். நிலம் மற்றும் வீடு பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டுமல்லாது சொந்த பூமி வாங்க வேண்டும், சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் வராகப் பெருமாளை தொடர்ந்து வழிபடலாம்.

- Advertisement -