உங்களுக்கு திடீரென வயதாகி விட்டதாக கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? அதிர்ஷ்டம் தரக்கூடிய 10 வித்யாசமான கனவுகள்!

dream-old-age
- Advertisement -

கனவுகள் பலவிதம் அது ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று கூறலாம். நம் ஆழ் மனதில் இருக்கும் எண்ணங்கள் நமக்கு கனவுகளாக தோன்றுகின்றன என்று ஒரு சாரர் கூறினாலும், மற்றொரு சாரர் கனவு என்பது பூர்வ ஜென்ம விட்டகுறை, தொட்டகுறை என்றும் கூறுவது உண்டு. எது எப்படியோ ஆனால் நம் மனதில் நிற்கும் ஒரு சில கனவுகளுக்கு ஒரு சில பலன்கள் சுவாரஸ்யமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த சில வித்தியாசமான கனவுகளும், அதற்குரிய பலன்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

திடீரென உங்கள் வயதை தாண்டி வயதான கிழவன், கிழவி போல உங்களை நீங்களே கனவில் காண நேர்ந்தால் எதிர்பாராத விபத்து ஒன்று நடக்குமாம். அந்த விபத்து மூலம் உங்கள் உயிர் தப்பிப் பிழைக்கும். அதாவது உங்களுக்கு வரவிருக்கும் கண்டத்தை, தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போக செய்யுமாம்! இதனை உணர்த்தி நீண்ட ஆயுள் தருவதற்காகவே வயதான தோற்றம் உங்களுக்கு கனவில் வருகிறதாம்.

- Advertisement -

திடீரென உங்கள் வீடு பற்றிக் கொண்டு எரிவது போல் கனவில் கண்டால் உடனே பதட்டம் கொள்ளத் தேவையில்லை. ஏற்கனவே பாதியில் நின்ற வீட்டுப் பணிகள் நடக்கும் அல்லது புதிய வீடு கட்டும் யோகம் உண்டாகும். வீடு செப்பனிடப்படும் அல்லது புனரமைக்கப்படும். இப்படி ஏதாவது ஒரு நல்ல காரியத்தை துவங்குவீர்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இவ்வாறு கனவில் தோன்றுகிறதாம்.

வெள்ளை நிற பாம்பு, வெள்ளை நிற காக்கை என்று வித்தியாசமான விலங்குகள், பறவைகள் வெள்ளை நிறத்தில் உங்களுக்கு சம்பந்தம் இல்லாமல் கனவில் வந்தால் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தமாம். 30 நாட்களுக்குள் செல்வம் பொழியும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த காலத்து அரசர்கள், தேவர்கள் ஆகியோருடன் நீங்கள் அமர்ந்து பேசுவது போல கனவில் திடீரென உங்களுக்கு வந்தால் வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய இடத்திற்கு நீங்கள் போவீர்களாம். உயர்ந்த நிலையை அடைவதற்கு உரிய அற்புத கனவாக இந்த கனவு கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சந்திரன் சூரியனையோ அல்லது சூரியன் சந்திரனையோ பிடித்து விடுவதாக கனவில் கண்டால் திடீர் யோகம் வருமாம். இந்த மாதிரியான கனவு கண்டால் அதிர்ஷ்ட தேவதை உங்களை பிடித்து கொள்ளுமாம். அதே போல அதிர்ஷ்டம் வருவதற்கு பழங்கள் காய்த்து தொங்கும் மரம், மலைப் பிரதேசம், பாக்கு மரம், ஆற்று நீர் போன்றவை கனவில் வந்தாலும் யோகம் வருமாம்.

மது குடிப்பது, புகைப்பிடிப்பது, போதை வஸ்துகளை பயன்படுத்துவது, தவறான உடல் உறவு கொள்வது போன்றவை கனவில் வந்தால் விரைவில் உங்களுக்கு பண ரீதியான நஷ்டம் வரப் போகிறது என்பது அர்த்தமாகும். பணம் காணாமல் போவது, அல்லது உங்களை யாராவது ஏமாற்றி விடுவது, போட்ட பணத்தை எடுக்க முடியாமல் போவது, பணத்தை இழப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு கூடிய சீக்கிரமே நடக்குமாம். கொடிய வகை மிருகம் ஒன்றுடன் நீங்கள் சண்டை போடுவது போல உங்கள் கனவில் வந்தால் கூடிய சீக்கிரம் நீங்கள் சண்டை போட்ட நபர்களுடன் நட்புறவாடும் யோகம் வருமாம். பிரிந்து சென்றவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். எதிர்பாராத வகையில் பகைவர்களும் நண்பராக கூடிய அதிர்ஷ்டம் இந்த கனவு வந்தால் நிச்சயம் உங்களுக்கு கிடைக்குமாம்.

- Advertisement -