மாடி மீது கடை வைத்திருப்பவர்களும், காம்ப்ளக்ஸில் கடை வைத்திருப்பவர்களும் இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்களின் வியாபாரம் பெருகி பணவரவு அதிகரிக்கும்

bussiness
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் படித்து முடித்த அனைவருக்கும் வேலை கிடைப்பது என்பது அரிதான விஷயமாக மாறிவிட்டது. என்ஜினியரிங் படித்த மாணவர்களளும் வேலை கிடைக்காததால் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்று தனது பெற்றோர்கள் செய்து வந்த அதே தொழிலைத் தான் செய்து வருகின்றனர். அவ்வாறு வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது. எனவே பலரும் சிறிய அளவில் தொழில் தொடங்குகின்றனர். அவ்வாறு தொழில் தொடங்குவதற்காக கடைகள் பார்க்கும் பொழுது ஒரு சிலர் தங்களுக்கு இருக்கும் வசதிக்கேற்ப அதிக அளவில் செலவு செய்து தரைத்தளத்தில் உள்ள கடைகளில் தங்கள் வியாபாரத்தை துவங்குவார்கள். ஒருசிலர் மேல்தளத்தில் சற்று வாடகை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த இடத்தை தேர்ந்தெடுப்பார்கள். இப்படி மேலே கடை வைத்திருப்பவர்களுக்கு வியாபாரம் சற்று குறைவாகவே இருக்கும். எனவே இவர்களின் வியாபாரம் பெருகி நல்ல முன்னேற்றம் கிடைக்க இந்த பரிகாரத்தை செய்து வந்தால் மட்டும் போதும்.

எப்பொழுதும் தரைத்தளத்தில் உள்ள கடைகளை விட மேல் தளத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை மற்றும் அட்வான்ஸ் குறைவாகத் தான் இருக்கும். ஏனென்றால் மக்கள் நடமாட்டம் கீழே தான் அதிகமாக இருப்பதால் மக்களின் கவனம் கீழ் உள்ள கடைகளில் மீது தான் இருக்கும். தான் தேடி வந்த பொருள் ஒரு கடையில் இல்லை என்றால் உடனே மற்றொரு கடைக்கு தானாகவே சென்று விடுவார்கள்.

- Advertisement -

எனவே மேலே உள்ள கடைகளின் மீது கவனம் செலுத்துவதற்கு சற்று தாமதமாகும். அவ்வாறு மக்களை தங்கள் கடையை நிமிர்ந்து பார்க்க வைப்பதற்கு கீழே உள்ள கடைகளை விட இவர்கள் சற்று வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும். அல்லது தங்கள் வியாபாரத்தின் லாபத்தை குறைத்து மக்களை ஈர்ப்பதற்காக பல விஷயங்களைச் செய்தால் மட்டுமே அவர்களின் வியாபாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

இவ்வாறு தங்கள் வியாபாரத்தை எப்படியாவது பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அத்தி மரத்தின் வலது பக்கமாக செல்லக்கூடிய வேரிலிருந்து சிறிய துண்டை கல் வைத்து இடித்து எடுக்க வேண்டும். அல்லது அத்திமரம் அருகிலில்லாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் அத்தி மரப்பட்டையை வாங்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் சிறிதளவு காய்ந்த அத்தி பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் 7 ஏலக்காய் வைத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக இந்த மூன்று பொருட்களுடன் ஜவ்வாது புனுகு போன்ற வாசனைப் பொருட்களை சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை மஞ்சள் நிறத் துணியில் வைத்து ஒரு மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த மூட்டையை சுவாமி படத்தின் முன் வைத்து மனதார வேண்டிக்கொண்டு, கடை வாசலில் முன் சென்று வெளிப்புறமாக வாசலின் மேலே கட்டிவிட வேண்டும். இதன் மூலம் வியாபார வசீகரம் உண்டாகும். கடையை தேடி மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பிப்பார்கள். இதனை மூன்று மாதத்திற்கு ஒருமுறை இவ்வாறு மாற்றி மாற்றி கட்டிக் கொண்டு வர வேண்டும்.

- Advertisement -