இந்த 1 பொருளை வீட்டிற்குள் கொண்டு வரும் நேரம், அடுத்தடுத்து வெற்றிகள் வந்து குவிய தொடங்கும்.

muruga2
- Advertisement -

சில பேர் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றியை பார்த்திருக்க மாட்டார்கள். எந்த முயற்சி எடுத்தாலும் அவர்களுக்கு தோல்வி மட்டும் தான் மிஞ்சி இருக்கும். இப்படிப் பட்டவர்களுக்கெல்லாம் வாழ்க்கை வெறுத்துப் போயிருக்கும். விரக்தியில் வாழ்க்கை கஷ்டத்தோடு நகரும். எதற்காகத்தான் இந்த வாழ்க்கையை வாழ்கின்றோமோ என்ற எண்ணம் அவர்களுடைய மனதில் இருக்கும். வாழவே பிடிக்காத இந்த வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கு ஒரு சின்ன பரிகாரம் உங்களுக்காக. இரண்டு சுலபமான பரிகாரங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டையுமே செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நல்லது நடக்கும். வெற்றி கிடைக்கும். மனம் சந்தோஷம் அடையும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

வெற்றியின் கடவுள் முருகன். வாழ்வில் அதிகமாக தோல்வி அடைபவர்கள் முருகர் வழிபாட்டை நம்பிக்கையோடு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அலங்காரத்தோடு அழகாக இருக்கும் ஒரு வேல் படத்தை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். பூஜை அறையில் வையுங்கள். தினமும் அதை இரண்டு கண்கள் பூரிக்கும் அளவிற்கு பார்த்து மகிழ்ச்சி அடைந்து வழிபாடு செய்யுங்கள். அந்த வேலின் அழகு வெற்றிக்கான சிந்தனையை தூண்டும். தினமும் காலையில் எழுந்து வேல் வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முடிந்தால் பிரம்ம முகூர்த்தத்திலேயே எழுந்து வேலை பார்த்து முருகப்பெருமானிடம் வேண்டிக் கொண்டு வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வேல் வழிபாடு செய்ய முடியாதவர்கள் காலை 6.00 மணிக்கு குளித்து முடித்துவிட்டு ஒரு சிறிய மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வைத்துவிட்டு வேல் தரிசனம் செய்து, மன நிறைவாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ‘வாழ்க்கையில் இனி தோல்வி என்பது இருக்கக் கூடாது. வெற்றியடைவதற்கு உண்டான நல்ல வழிகளை வேலன் தான் காட்ட வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்யுங்கள். மனதார இந்த வார்த்தைகளை சொல்லியே பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக வெற்றியை உங்களுக்கு வேலன் காட்டிக் கொடுப்பான்.

பூஜை அறையில் மட்டுமல்ல வரவேற்பறையில் நீங்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய இடங்களில் கூட அழகான வேல் படங்களை வாங்கி மாட்டி வைக்கலாம். உங்களுடைய பைக் கீ செயினில் கூட வேல் இருக்கலாம் தவறு கிடையாது. கைபேசியின் டிஸ்ப்ளேவில் வேல் வையுங்கள். நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் வேல் உங்கள் கண்களுக்கு தென்பட வேண்டும். அது உங்களுக்கு தன்னம்பிக்கையும் உத்வேகத்தையும் அதிகரிக்க உதவும். இது முதல் வழி. முருகப் பெருமானின் வேல், வேலன் வழிபாடு.

- Advertisement -

இரண்டாவது வாஸ்து ரீதியாக ஒரு பரிகாரத்தையும் பார்க்கலாம். உங்களுடைய வீட்டின் தென்கிழக்கு மூலையில் இந்த ஒரு படத்தை வைக்க வேண்டும். முயல். முயல் என்றதுமே நம் நினைவிற்கு வருவது அது வேகமாக ஓடும் இப்படி வேகவேகமாக சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய ஜோடியாக இருக்கக்கூடிய இரண்டு வெள்ளை முயல்களை அழகாக படம் பிடித்து வைத்திருப்பார்கள் அல்லவா. சீனரி காட்சி என்று கூட சொல்லலாம். அப்படி ஒரு படத்தை வாங்கி வீட்டின் தென்கிழக்கு மூலையில் மாட்டி வைக்கலாம் அல்லது ஒட்டி வைக்கலாம்.

தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்த வாரும் இந்த முயல் படம் இருக்கலாம். மேற்கு பார்த்த வாரும் முயல் படம் இருக்கலாம். தினமும் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது தென்கிழக்கு பகுதியில் அழகாக இருக்கும் இந்த இரண்டு வெள்ளை முயல்களை பார்த்துவிட்டு கிளம்புங்கள். மனதில் இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு உண்டான உத்வேகம் பிறக்கும். ‘முயலைப் பார்த்தால், முயல் போல நாமும் ஓடி ஓடி வேலை செய்வோமா’ என்ற விதண்டாவாத பேசுபவர்களுக்கு இங்கு இடம் கிடையாது. இப்படி சிந்தனை செய்பவர்களுக்கு எந்த பரிகாரமும் சொல்ல முடியாது.

சில நல்ல விஷயங்களைப் பார்க்கும்போது நம்முடைய மனது நல்லதாகவே சிந்திக்கும். நல்லதை சிந்திக்கும் போது சில நன்மைகள் நம்மை அறியாமலேயே நமக்கு நடக்கும். அப்படி கூட வைத்து நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். பத்து ரூபாய்க்கு கூட முயல் படம் கிடைக்கும். முயற்சி செய்து தான் பாருங்களேன். வெற்றி இல்லாதவர்களுடைய வாழ்க்கையில், வெற்றி கிடைக்க முயல் படம் வாங்க செலவழிக்க கூடிய இந்த பத்து ரூபாய் ஒன்றும் பெரியது கிடையாது. நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -