செலவே இல்லாமல் சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருளை வைத்து ஃபேசியல் பண்ணி பாருங்க. பட்டப்பகலில் இந்த பூமிக்கு நீங்க ஒரு நிலாவா இருப்பீங்க.

face11
- Advertisement -

ஆமாங்க, பகலில் நிலா இருக்காது அல்லவா. அதற்கு பதிலாக உங்களுடைய முகம் அழகாக வெள்ளையாக நிலா போலவே தெரியும். அந்த அளவிற்கு உங்களுடைய முகத்தை பொலிவாக்க சூப்பரான, செலவில்லாத ஒரு ரெமிடியை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். யோசிக்காதீங்க, நீங்க பார்ப்பதற்கு நிஜமாவே அந்த நிலா போல அழகா மாறிடுவாங்க. வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த குறிப்பை பார்த்து விடுவோம்.

இந்த குறிப்புகு நாம் பயன்படுத்த போகும் பொருள் சமையலறையில் இருக்கக்கூடிய கோதுமைமாவு தான். கோதுமை மாவை வைத்து உடனடியாக நம்முடைய முகத்தை ஃபேஷியல் செய்தது போல பொலிவாக மாற்றுவது எப்படி. முதலில் உங்களுடைய முகத்தை சுத்தமான தண்ணீரை போட்டு கழுவி ஈரத்தை துடைத்து விடுங்கள். அதன் பின்பு காய்ச்சாத பச்சை பாலை ஒரு காட்டனில் தொட்டு முகம் முழுவதும் நன்றாகத் துடைத்து விடுங்கள்.

- Advertisement -

பின்பு காய்ச்சாத பாலில், 1 ஸ்பூன் கோதுமை மாவைப் போட்டு கலந்து அந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 2 நிமிடம் போல நன்றாக மசாஜ் செய்து கழுவி விட வேண்டும். அதன் பின்பு சூடாக இருக்கும் தண்ணீரில் ஒரு காட்டன் டவலை நனைத்து கை பொறுக்கும் சூட்டில் உங்களுடைய முகத்தில் இந்த காட்டன் துணியால் 2 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அதாவது இதை ஸ்டீமிங் என்று சொல்லலாம்.

இரண்டு நிமிடம் போல இந்த ஒத்தடம் கொடுத்துவிட்டு அதன் பின்பு உங்களுடைய முகத்திற்கு ஒரு ஃபேஸ் பேக் போட வேண்டும். பீட்ரூட் சாறு 2 ஸ்பூனில், கோதுமை மாவு போட்டு பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகம் கழுத்து எல்லா இடங்களிலும் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். உங்களுடைய முகம் பிறகு பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்பதை கண்ணாடி முன்பு போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வாரத்தில் 2 நாள் இப்படி செய்து வர வெயிலினால் ஏற்பட்ட சன் டேன் முகத்தில் இருக்கக்கூடிய முகப்பரு, கரும்புள்ளிகள் கருந்திட்டுக்கள் இவை படிப்படியாக குறையத் தொடங்கும். நிறைய செலவு செய்ய முடியாது. பியூட்டி பார்லருக்கு போய் ஃபேசியல் செய்ய முடியாத சூழ்நிலையில் இந்த செலவில்லாத ஃபேஷியல் நிச்சயம் உங்களுக்கு நல்ல ரிசல்டை கொடுக்கும்.

கூடுமானவரை கடையிலிருந்து வாங்கிய கோதுமை மாவை பயன்படுத்துவதைவிட, நீங்க கோதுமையை வாங்கி அரைத்து அதை முகத்தில் போடுவது இன்னும் நல்லது. உங்களுக்கு இந்த குறிப்பை பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ஒருவாட்டி உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க. கடையில் போய் பேசியல் செய்து கொள்ளும்போது அந்த கெமிக்கல் கலந்த க்ரீம் மூலம் நம்முடைய முகத்திற்கு பக்கவிளைவுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புகள் உள்ளது‌‌. அப்படி இல்லாமல் இப்படி இயற்கையான பொருட்களை முகத்தில் போட்டு பெறக்கூடிய அழகின் மூலம் ஆபத்தும் இருக்காது. அதே சமயம் இந்த அழகு நமக்கு நிறைந்ததாகவும் இருக்கும்.

- Advertisement -