2 வாரத்தில் நரை முடியை, நிரந்தரமாக கருப்பாக மாற்ற, இதுவரைக்கும் நீங்க ட்ரை பண்ணாத இந்த எண்ணெயை ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

hair15
- Advertisement -

வெள்ளை முடி பிரச்சனை நாளுக்கு நாள் ஆண்களுக்கும், பெண்களுக்கும், சிறுவயதில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கும் கூட அதிகமாக உள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு கூட நரைமுடி இப்போது சுலபமாக வந்துவிடுகிறது. நரை முடியை வராமல் தடுக்க, வந்த நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற, முடி கருகருன்னு அடர்த்தியாக வளர நாம் என்ன செய்வது. இதற்கான இயற்கையான சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வாங்க அந்த ரெமிடியைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

முதலில் இந்த எண்ணெயை தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்த்துவிடுவோம். கடுகு எண்ணெய் – 250ml, நெல்லிக்காய் பொடி – 1 டேபிள்ஸ்பூன், கரிசலாங்கண்ணி பொடி – 1 டேபிள்ஸ்பூன், ஹென்னா பொடி – 1 டேபிள்ஸ்பூன், ஜடாமாஞ்சி பொடி – 1 டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

இந்த எல்லாப் பொருட்களுமே நாட்டு மருந்து கடைகளில் ட்ரையாக பொடியாக கிடைக்கும் வாங்கிக்கொள்ளுங்கள். இதில் முக்கியமாக ஒரு விஷயத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நிறைய நரைமுடி இருக்கிறது. தலை முழுவதும் வெள்ளை நிறமாக தெரிகிறது என்றால் மட்டும் ‘ஹென்னா பவுடர்’ பயன்படுத்தினால் போதும். இப்போதுதான் ஆங்காங்கே வெள்ளை முடி எட்டிப் பார்க்கிறது என்றால் ஹென்னா பவுடரை பயன்படுத்த வேண்டாம். காரணம் உங்களுடைய கருப்பு முடியும், பிரவுன் நிறத்திற்கு மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. லேசாக வெள்ளை முடி உள்ளவர்கள் ஹென்னா பவுடரை தவிர்த்துவிடுங்கள்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து முதலில் கடுகு எண்ணெயை ஊற்றி லேசாக சூடு செய்யுங்கள். அடுப்பு சிம்மில் தான் இருக்க வேண்டும். அந்த எண்ணெய் லேசாக சூடாகி வரும்போது நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி, ஜடாமாஞ்சி பொடி, எல்லாவற்றிலிருந்தும் ஒரு டேபிள்ஸ்பூன் போட்டு, கலக்கி விட்டு ஐந்து நிமிடங்கள் போல சிம்மிலேயே எண்ணெயை காய்ச்சி அடுப்பை அணைத்துவிடுங்கள். பின்பு எண்ணெய் நன்றாக சூடு ஆறியதும், ஒரு காட்டன் துணியில் இந்த எண்ணெயை வடிகட்டி பிழிந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வாரத்தில் இரண்டு நாள் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். தலைக்கு குளிப்பதற்கு முந்தைய நாள் இரவே இந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் நன்றாக படும்படி வைத்து மசாஜ் செய்துவிட்டு, அதன் பின்பு முடியின் நுனி வரை தடவி ஊற வைத்து விடவேண்டும். எந்த இடத்தில் வெள்ளை முடி அதிகமாக உள்ளதோ, அந்த இடத்தில் நன்றாக இந்த எண்ணெயை தடவி விடுங்கள்.

இரவு முழுவதும் இந்த எண்ணெய் உங்களுடைய தலையில் இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். இந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வர உங்களுக்கு இருக்கக்கூடிய நரைமுடி கொஞ்சம் கொஞ்சமாக கருப்பாக மாறத் தொடங்கும்.

இரண்டே மாதத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். உங்கள் முடி கருப்பாக தான் உள்ளது என்றாலும் இந்த எண்ணெயை நீங்கள் பயன்படுத்தலாம். முடி இன்னும் அடர் கருப்பு நிறத்திற்கு மாறும். சீக்கிரத்தில் வெள்ளை முடி வராமல் தடுக்கும். இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருக்கா. மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -