சுப காரியங்களிலும் கோயில்களிலும் தேங்காய் உடைப்பது ஏன் ?

thenga1i
- Advertisement -

இந்துக்கள் செய்யும் அணைத்து விதமான பூஜைகளிலும் தேங்காயிற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. வீட்டில் சாமி கும்பிடுவதில் இருந்து வண்டிக்கு பூஜை போடுவது வரை அனைத்திற்கும் நாம் தேங்காய் உடைப்பதுண்டு. இப்படி பலதரப்பட்ட விசேஷங்களுக்கும் பூஜைகளும் நாம் தேங்காய் உடைக்க காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

ஹோமங்கள் செய்யும்போது, ஹோமத் திரவியமாக பூர்ணாகுதியில் சேர்ப்பதும் தேங்காய்தான். தெருக்கள்தோறும் வீற்றிருக்கும் விநாயகருக்கு நாம் முதலில் அர்ப்பணம் செய்வதும் தேங்காய்தான். அதுவே பின்னர் பிரசாதம் என்று எல்லோருக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

- Advertisement -

தேங்காய் மூன்று கண்களைக் கொண்டதால், முக்கண் முதல்வனான சிவபெருமானின் நினைவைத் தருகிறது. அதன் மூலம், நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது.

மரத்திலிருந்து பறிக்கப்படும் தேங்காயை உரித்து, கொஞ்சம் மேல்புறத்தில் நார் வைத்து(குடுமியுடன்), உள்ளிருக்கும் ஓட்டுடன் வைத்தால் அது பார்ப்பதற்கு ஒரு மனிதனின் தலையைப் போன்றே தோன்றும். அதை இறைவனின் முன் உடைப்பது என்பது, நம் தலைக்கனத்தை சிதறச் செய்வதற்கு ஒப்பாகும். தேங்காய் உடைப்பதன் மூலம், நம் கர்வம் இறைவனின் முன் சிதறித் தெறிக்கிறது. அது சிதறித் தெறித்தால், வெளியே தெளிக்கும் தேங்காய் நீர், நம்முள் இருக்கும் மனப்பாங்கை (வாசனைகளை) வெளிப்படுத்துகிறது. இவ்வாறு, நம் கர்வம் தொலைத்து, தூய மனத்தை இறைவனுக்கு சமர்ப்பிப்பதைத்தான் தேங்காய் உடைப்பது வெளிப்படுத்துகிறது.

- Advertisement -