எப்படி உடை அணியும் பெண்களுக்கு கை நிறைய பணப்புழக்கம் சேர்கிறது தெரியுமா? பெண்கள் தவறியும் இப்படி உடை அணியாதீர்கள்!

lakshmi-women
- Advertisement -

பெண்கள் அணியும் உடைக்கும் அவர்கள் கையில் புழங்கும் பணத்திற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என்கிறது சாஸ்திரம். சாஸ்திரம் கூறும் பல உண்மைகள் கசக்க செய்தாலும் அதில் இருக்கும் நுண்ணிய உள்ளர்த்தத்தை ஆராய்ந்தால் அதன் மகத்துவமான அர்த்தம் விளங்கும். பெண்கள் இப்படி தங்களை வைத்திருந்தால் அவர்களுடைய கைகளில் பணமானது எப்பொழுதும் விரயமாகாமல் புழங்கி கொண்டே இருக்கும். பெண்கள் எப்படி உடை அணிய கூடாது? அப்படி அணிவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

lakshmi-knee

எந்த நாட்டினராக இருந்தாலும் பழங்காலத்தின பெண்கள் இடுப்பு மற்றும் கணுக்கால் தெரியும் படியான உடையை உடுத்திக் கொள்ள மாட்டார்கள். எட்டு முழம் கண்டாங்கி சேலை கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்று கூற வரவில்லை! ஆனால் பெண்கள் இப்படி உடை அணிந்தால் அவர்களுடைய லக்ஷ்மி கடாட்சம் அவர்களை விட்டு நீங்கி விடுகிறது எனவே பணப்புழக்கமும் குறைகிறது. நம் முன்னோர்களும் நமக்கு சொல்லிக் கொடுத்தது இது தான்! இடுப்பு மற்றும் கணுக்கால் தெரியும் படியான உடைகளை ஒரு பெண் அணிந்து கொண்டால், அவளிடம் இருக்கும் மகாலட்சுமி விலகி சென்று விடுவாள். பின்னர் அவர்கள் என்ன தான் கை நிறைய பணத்தை சம்பாதித்தாலும் அவர்களிடம் அது தங்காமல் போய்விடும்.

- Advertisement -

நாகரீக உடை அணியும் பெண்களுக்கு தான் இன்று அதிக சம்பளம் என்று நீங்கள் எண்ணிக் கொள்ளலாம். உண்மையில் அவர்கள் அணியும் உடைக்கும் அவர்களுடைய மகிழ்ச்சிக்கும் தொடர்பு உண்டு. கை நிறைய பணம் சம்பாதித்தாலும் அத்தகைய உடை அணியும் பெண்களிடம் நிம்மதி இருக்காது. அவர்களுக்கு மனதில் ஒருவிதமான உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். மன உளைச்சல், மன இறுக்கம் என்று கூறப்படும் நவீன வகை நோய்களுக்கு ஆட்பட்டு தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வரை கொண்டு சென்று விட்டுவிடும்.

money

பணம் சம்பாதிப்பது மட்டும் முக்கியம் அல்ல! நம்மிடம் இருக்கும் மகாலட்சுமியை நம்மிடமே தக்க வைத்துக் கொள்ளும் சூட்சமம் தான் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பத்து ரூபாய்க்கு பழம் வைத்து பிழைக்கும் பெண்கள் கையில் இருக்கும் பணப்புழக்கம் கூட, லட்ச ரூபாய் சம்பாதிக்கும் பெண்களிடம் இருப்பது இல்லை. தேவையற்ற செலவுகள், வீண் விரயங்கள், நிம்மதியின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு ஆட்படுவார்கள்.

- Advertisement -

புடவை அணிந்து கொண்டாலும், நாகரீகமான மாடர்ன் உடை அணிந்து கொண்டாலும் பெண்களுடைய இடுப்பு மற்றும் கணுக்கால் தெரியும் படி மட்டும் அணியக் கூடாது. இடுப்பு, கணுக்கால் மூடிய உடைகளை அணியும் பெண்களிடம் பணப்புழக்கம் சரளமாக இருக்கும் என்கிறது சாஸ்திரம். எப்படி வேண்டுமானாலும் உடை அணிவது சுதந்திரம் என்றால் நீங்கள் நைட்டி போட்டு கொண்டு உங்கள் அலுவலகத்திற்கு சென்று வரலாமே! இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும் என்பது தான் நியதி.

women1

அதே போல மகாலட்சுமி உங்களை விட்டு செல்லாமல் இருக்க நேர்த்தியாக அடுத்தவர்களின் கண்கள் உறுத்துவது போல் உடை அணியாமல் இருப்பது ஒன்றே வழியாகும். பார்க்கும் கோடிக்கணக்கான கண்களை கொண்டதை மனதை நம்மால் சுத்தப்படுத்த முடியாவிட்டாலும், நாம் ஒருவர் அணியும் உடையின் மூலம் அதனை எளிதாக சாதித்து காட்ட முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை. இதை உணராமல் விதண்டாவாதம் பேசினால் மாறப் போவது எதுவுமில்லை.

- Advertisement -