21 தலைமுறை பாவங்களை நீங்கச்செய்யும் வழிபாடு.

sivan-3
- Advertisement -

ஒருவர் இறந்துவிட்டால் அவரை நினைத்து கண்டிப்பாக “மோக்ஷ தீபம்” ஏற்ற வேண்டும் என்று அகத்தியப் பெருமான் ஒரு தொகுப்பில் கூறியுள்ளார். “மோக்ஷ தீபம்” என்றால் என்ன? அதை எப்படி ஏற்றுவது போன்ற தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையானவை:-

- Advertisement -

வாழை இலை
பச்சை கற்பூரம்
சீரகம்
பருத்திக் கொட்டை

கல் உப்பு
மிளகுநவ தான்யங்கள்
கோதுமை
நெல் (அவிக்காதது)

- Advertisement -

முழு துவரை
முழு பச்சை பயிறு
கொண்ட கடலை

மஞ்சள் (ஹைப்ரிட் அல்லாதது)
முழு வெள்ளை மொச்சை
கருப்பு எள்
முழு கொள்ளு

- Advertisement -

முழு கருப்பு உளுந்து
விளக்கு (200 மில்லி கொள்ளளவு) – 42
தூய பருத்தி துணி – (கை குட்டை அளவு) – 21

செய்யும் முறை:-

எல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட, பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.
துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நனைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை 6 மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி, நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.

மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் எற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது சிறப்பு. முதிலில் திரி தயாரிக்க வேண்டும். நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம், கருப்பு எள், சீரகம், பருத்தி கொட்டை , கல் உப்பு, மிளகு ஆகியவற்றை முடிச்சுப்போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்படப் போகிறது.
ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப் பட்ட இடத்தில், தலை வாழை இலையினை வைக்க வேண்டும். அதன் மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும்.

பிறகு மொத்தமுள்ள 42 விளக்குகளில் 21 விளக்குகளை மட்டும் எடுத்து அதனுள் எள் நிரப்ப வேண்டும். பிறகு மீதமுள்ள 21 விளக்குகளை எள் நிரப்பிய விளக்குகளின் மீது வைக்கவேண்டும்.

அதாவது 21 எள் விளக்கின் மீது 21 சாதாரண விளக்கை வைக்க வேண்டும். பிறகு அதனுள் நெய்யை நிரப்ப வேண்டும். பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும். சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும். (எந்த திசை நோக்கியும் இருக்ககூடாது). பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை குறைந்தது நூற்றி எட்டு முறை ஜெபிக்க வேண்டும் (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்).

இறுதியாக இறைவனிடம் “இறைவா, இப்பூவுலகில் பிறந்து, இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூசை பலனை சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி, சற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம்.

 

மேலும் இந்த பூசையை செய்வதும், செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே. நாங்கள் வெறும் கருவிகளே” என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு, உங்கள் முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டலாம்.
மறுநாள் நாம் பூசை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்பட) ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் சேர்த்து விட வேண்டும்.

இதனை முறையாக செய்தால் 21 தலைமுறை பாவங்கள் நீங்கி  நன்மை ஏற்படும். முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.

 

- Advertisement -