வயதான தோற்றத்தை அகற்றி முகச்சுருக்கத்தை குறைக்கும் இந்த மேஜிக் ஆயிலை மிகவும் எளிமையாக வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம்

wrinkles
- Advertisement -

அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று யாருக்கு தான் ஆசைஇருக்காதது. இன்றைய காலகட்டத்தில் நமது தோற்றத்திற்கு தான் முதல் மதிப்பு கொடுக்கின்றனர். அவ்வாறு நமது அழகும் சரி, உடையும் சரி மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு சிறு வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படும். இதனால் பார்ப்பதற்கு வயதான தோற்றத்தில் இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்களின் வேலை பளு, மன குழப்பம், மனக்கவலை போன்றவைகளாகும். சருமத்திற்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் இருப்பதால் தான் இவ்வாறான தோல் சுருக்கம் ஏற்படுகிறது. இவற்றை அகற்ற இந்த ஆன்ட்டி ஏஜிங் ஆயிலை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

face-skin

தேவையான பொருட்கள்:
ஆலிவ் ஆயில் – 100 கிராம், ஆளி விதை – 3 ஸ்பூன், ஆரஞ்சு பழத்தோல் – 1.

- Advertisement -

செய்முறை:
நமது வீட்டில் சாப்பிட பயன்படுத்தும் ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் காயவைத்து அவற்றை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி இதனை செய்ய முடியவில்லை என்றால் நாட்டு மருந்து கடையில் ஆரஞ்சு பழ தோல் பவுடர் என்று கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். பின்னர் 3 ஸ்பூன் ஆலிவ் விதையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த ஆளி விதையும் நாட்டு மருந்து கடைகள் அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது.

orange3

பின்னர் ஒரு கிண்ணத்தில் 100 கிராம் ஆலிவ் எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதனுடன் மூன்று ஸ்பூன் ஆளி விதை பவுடரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தோல் பவுடரை ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடு செய்ய வேண்டும். பின்னர் அதன் நடுவே இந்த எண்ணெய் உள்ள பாத்திரத்தை வைத்து ஒரு பத்து நிமிடம் எண்ணெய் சூடு ஏறும் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு இந்த எண்ணெயை ஒரு துணியைக் கொண்டு வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் இந்த எண்ணையை அப்படியே வைத்துவிட்டு அதன் பிறகு உபயோகிக்க ஆரம்பிக்கலாம்.

olive

உபயோகப்படுத்தும் முறை:
இந்த எண்ணணெய் கலவையிலிருந்து அரை ஸ்பூன் எண்ணெயை எடுத்து முகம், கழுத்து முன்பகுதி, பின்பகுதி என தோல் சுருக்கம் எங்கெல்லாம் இருக்கிறதோ அந்த இடங்களில் தடவிக்கொண்டு ஐந்து நிமிடம் வட்ட வடிவில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 30 நிமிடத்திற்கு அப்படியே ஊறவிட வேண்டும். அதன்பின் ஒரு துணியை வைத்து நன்றாக துடைத்துவிட்டு, கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முகச் சுருக்கம் மறைந்து அழகிய இளமையான தோற்றத்தைப் பெற முடியும்.

- Advertisement -