யோகம் இல்லாத ஜாதகக்காரர்களை கூட யோகம் உள்ளவர்களாக மாற்றக்கூடிய சிறப்பான 2 பரிகாரங்கள்

astrology
- Advertisement -

ஒரு சிலர் தங்களின் ஜாதகங்களை ஜோதிடரிடம் காட்டி பரிசீலனை செய்யும் பொழுது, அந்த ஜோதிடர் அவர்களில் ஒரு சிலரின் ஜாதகங்களை நன்கு ஆராய்ந்து பார்த்த பின்பு எத்தகைய சிறப்பான யோகங்களும் அவர்களுக்கு இல்லை என கூறி விடுவார்கள். இதனால் யோகங்கள் இல்லா அமைப்பு பெற்ற ஜாதகர்கள் மிகவும் மனம் துவண்டு விடுவார்கள்.

ஜோதிட சாஸ்திரப்படி பொதுவாக எந்த ஒரு நபரின் ஜாதகத்திலும் எத்தகைய யோகங்களும் இல்லை எனும் பட்சத்தில், அந்த நபரின் வாழ்க்கையில் எந்தவிதமான சிறப்பான முன்னேற்றங்களும் இருக்காது. அவர்களின் வாழ்க்கை என்பது சராசரியானதாகவும், வண்டிச்சக்கரம் போன்று ஏற்ற – இறக்கங்கள் அதிகம் கொண்டதாகவும் இருக்கும்.

- Advertisement -

அப்போ ஜாதகத்தில் யோகங்கள் இல்லாத நபர்களின் வாழ்க்கை அப்படியே தான் இருக்க வேண்டுமா? என்கிற கேள்வி உங்களில் பலருக்கு எழும். யோகம் கெட்ட ஜாதக அமைப்பை கொண்ட நபர்களின் வாழ்க்கை மேம்பட இறைவழிபாட்டை மையமாகக் கொண்டு சில பரிகார முறைகள் நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளன. அவற்றை திடமான இறை நம்பிக்கையுடன் முழு ஈடுபாட்டோடும் செய்வதால் யோகம் இல்லாத ஜாதகர்களின் வாழ்விலும் யோகம் உண்டாகி மனநிறைவான வாழ்க்கையை தரும். அப்படியான பரிகாரகங்கள் இதோ.

பரிகாரம் 1
மகா தைரியம், காரிய சித்தி போன்ற வரங்களை தன் பக்தர்களுக்கு வழங்கும் தெய்வம் ஆஞ்சநேயர். எத்தகைய யோகமும் என் வாழ்வில் ஏற்படவில்லையே என மனதிற்குள்ளாகவே நொந்துவருந்துபவர்கள் ஒவ்வொரு வாரமும் வருகின்ற சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் சன்னதிக்கு சென்று, ஆஞ்சநேயருக்கு முன்பாக தீபமேற்றி, “என் வாழ்வில் சிறப்பான யோகங்களை தரவேண்டும் ஆஞ்சநேயா! என மனதிற்குள்ளாகவே 108 முறை சொல்லி ஆஞ்சநேயரை வணங்க வேண்டும்.

- Advertisement -

இந்த சனிக்கிழமை ஆஞ்சநேயர் பரிகாரத்தை ஒரு வளர்பிறை சனிக்கிழமை அன்று தொடங்கி, குறைந்தபட்சம் 27 சனிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால், உங்கள் வாழ்வில் இதுவரை வராமல் இருந்த சிறப்பான யோகங்கள் ஏற்பட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். தொடர்ச்சியாக 27 சனிக்கிழமை இந்த பரிகார வழிபாடு செய்யும் பொழுது, பல்வேறு காரணங்களால் ஏதாவது ஒரு சனிக்கிழமை வழிபாடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கு அடுத்து வரும் சனிக்கிழமை உங்கள் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்ளலாம். மீண்டும் முதலிலிருந்து 27 சனிக்கிழமை கணக்கு வைத்து வழிபட தேவையில்லை.

பரிகாரம் 2
தங்கள் குழந்தைகளுக்கு மிகச் சிறப்பான யோகங்கள் கொண்ட வாழ்க்கை அமைய விரும்பும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை தங்கள் குடும்ப குலதெய்வ கோயிலுக்கு அழைத்துச்சென்று அங்கிருக்கும் தெய்வத்திற்கு குழந்தைகளை எழுதி வைக்க வேண்டும். குலதெய்வத்திற்கு உங்கள் குழந்தைகளை எழுதி வைத்த நாள் முதற் கொண்டு அவர்களின் வாழ்வில் குலதெய்வத்தின் அருளால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி, அவர்களுக்கு திருமணம் செய்யும் சமயத்தில் மட்டும் உங்கள் குலதெய்வத்திடமிருந்து குழந்தைகளை விரும்பி வாங்கிக் கொள்வதாக எழுதி கொடுக்க வேண்டும்.

உங்கள் குல தெய்வத்திற்கென்று உங்கள் குழந்தைகளை எழுதி வைத்த நாள் முதல் அவர்களை திரும்பி வாங்கிக் கொள்ளும் நாள் வரை, குழந்தைகளின் நட்சத்திரத்தில் குலதெய்வ கோயிலில் அர்ச்சனை செய்யாமல், குலதெய்வ ஆலயத்தின் பெயரிலேயே அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி இந்த இரண்டு பரிகாரங்களில் ஏதாவது ஒன்றையோ அல்லது இரண்டு பரிகாரங்களையும் நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் ஜாதகத்தில் இருக்கின்ற யோகங்கள் இல்லா நிலை மாறி மிக சிறப்பான யோகம்கள் பெரும் வாழ்க்கை அமையும்.

- Advertisement -