தினமும் 1 ரூபாயை இப்படி செய்தால் உங்களுடைய தீராத ஆசைகளும் நிறைவேறும்! தினம் ஒரு வேண்டுதல் பலிக்க ஒரு ரூபாய் போதுமா?

one-rupee-cow-lakshmi
- Advertisement -

மனிதனாக பிறந்தவர்களுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசைகளோடு, கனவுகளோடு காத்திருப்பது வழக்கம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர்களுக்கு உரிய ஆசைகள் உண்டு. இந்த ஆசைகளை வேண்டுதலாக வைக்கும் பொழுது சில சமயங்களில் உடனே பலித்து விடுகிறது. சில சமயங்களில் பலிக்காமலும் போகிறது. ஆனால் தீராத ஆசைகளையும் தீர்த்து வைக்கும் இந்த எளிய பரிகாரம் தினமும் செய்து வந்தால் ஆச்சரியப்படும் பலன்கள் உண்டாகுமாம்! வேண்டியது பலிக்க ஒரு ரூபாய் பரிகாரம் எப்படி செய்யலாம்? வாருங்கள் தொடர்ந்து பார்ப்போம்.

ஒரு ரூபாய்க்கு இருக்கும் மதிப்பு பல கோடி ரூபாய்க்கு கூட இல்லை என்று உங்களுக்கு தெரியுமா? சில்லறை நாணயங்களுக்கு இருக்கும் மதிப்பு, ரூபாய் நோட்டுக்கு ஆன்மீகத்தில் குறைவு தான். மொய் பணம் கொடுக்கும் பொழுது 500 ரூபாய் நோட்டை விட, அதன் மீது போட்டுக் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு தான் மதிப்பு அதிகம். அந்த ஒரு ரூபாயை தேடி அலையும் பொழுது தான் அதன் மதிப்பு நமக்கு புரியும்.

- Advertisement -

அர்ச்சனை செய்யும் பொழுதும் ரூபாய் நோட்டுக்களை யாரும் அர்ச்சனை செய்வது கிடையாது. நாணயங்களை குறிப்பாக ஒரு ரூபாய் நாணயத்தை தான் அர்ச்சனை செய்கிறோம். சுவாமி படங்களுக்கு ஒரு ரூபாய் நாணயத்தால் அர்ச்சனை செய்வதால் இல்லத்தில் வறுமை என்பதே இருக்காது. தன, தானியம் குறைவில்லாமல் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் என்பது நியதி. குறிப்பாக மகாலட்சுமி மற்றும் குபேரர் ஆகியோரின் சிலைக்கு நாணய அர்ச்சனை இது போல செய்ய வேண்டும்.

நீங்கள் உங்களுடைய வேண்டுதல் பலிக்க, உங்களுடைய ஆசைகள் நிறைவேற தினமும் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதை இரு கைகளுக்கு நடுவில் வைத்து சாமி கும்பிடுவது போல கையை கூப்பி மனமார வழிபட வேண்டும். இதை பூஜை அறையில் நின்று செய்ய வேண்டும். சுவாமி படங்களுக்கு முன்பு இது போல மனதார வேண்டிக் கொண்டு, அந்த ஒரு ரூபாயை ஏதாவது ஒரு உண்டியல் அல்லது பாத்திரத்தில் சேமித்து வர வேண்டும். இது போல 30 நாட்களும் நீங்கள் சேமித்த பிறகு 30 ரூபாய் சேர்ந்திருக்கும்.

- Advertisement -

இந்த 30 ரூபாயில் வாழைப்பழம் வாங்க வேண்டும். மஞ்சள் வாழைப்பழத்தை வாங்கி அதை பசு மாடுக்கு தானமாக வழங்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகில் யாராவது மாடுகள் வைத்திருந்தால் அவர்களிடம் சென்று இது போல வாழைப்பழம் கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள். அவர்கள் அனுமதிப்பார்கள். நீங்கள் பசு மாட்டிற்கு வாழைப்பழத்தை தானமாக கொடுக்கலாம் அல்லது உங்கள் வீட்டிற்கு தானாக புல் தேடி வரும் மாடுகளுக்கு நீங்கள் தானம் கொடுக்கலாம்.

இது போல மாதம் முழுவதும் உங்களுடைய வேண்டுதல்களை ஒவ்வொரு நாளும் வைத்து ஒரு ரூபாய் நாணயங்களை சேகரித்து கடைசியில் 30 ரூபாய் சேர்ந்ததும் வாழைப்பழம் வாங்கி பசு மாட்டிற்கு தானம் செய்தால் பித்ரு தோஷம், குலதெய்வ குறை, கர்மாக்கள், பாவ வினைகள் அனைத்தும் நீங்கி நீங்கள் என்ன வரம் கேட்டாலும், அது கேட்டபடி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதை நம்பிக்கையோடு செய்து பாருங்கள், மாத கடைசியில் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

- Advertisement -