வெறும் 11 ரூபாய் இருந்தால், 11 லட்சம் கூட சுலபமாக சம்பாதிக்கலாம். நீங்கள் மனதில் நினைத்ததை சாதிக்க இதோ ஒரு தந்திர வித்தை.

mahalashmi
- Advertisement -

11 லட்சம் மட்டும் இல்லைங்க, அதையும் தாண்டி பல விஷயங்களை சாதிப்பதற்கு தேவையான சக்தி இந்த தந்திரமான பரிகாரத்திற்கு உண்டு. வாழ்க்கையில் நாம் நினைத்ததெல்லாம் நடந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிப்பது மிக மிக தவறு. ஆனால் நியாயமான ஆசைகளும், நியாயமான குறிக்கோள்களும் நிச்சயம் நிறைவேறித்தான் ஆக வேண்டும். அந்த வரிசையில் நல்ல வேலை கிடைக்க, நல்ல சம்பாத்தியம் பெற, நல்ல இடத்தில் மணப்பெண் மணமகன் அமைய, சொந்த வீடு கட்ட, ஆரோக்கியமாக வாழ, கடன் இல்லாத வாழ்க்கை வாழ என்று இப்படி பட்ட ஆசைகள் எல்லாம் நியாயம் தானே. இதையெல்லாம் கூட இந்த பிரபஞ்சம் நிறைவேற்றி வைக்காமல் இருந்தால் எப்படி. இப்படிப்பட்ட நியாயமான ஆசைகள் மனதில் இருந்தால் அதை சரியான முறையில் நிறைவேற்றிக் கொள்ள 11 ரூபாயை எப்படி பயன்படுத்துவது.

மனதில் நினைத்ததை சாதிக்க செய்ய வேண்டியது:
நீங்கள் மனதில் நினைத்த ஏதோ ஒரு நல்ல காரியம் நடக்க, நாளை நல்ல நேரம் வந்துவிட்டது. நாளைக்கு அதற்கான முயற்சிகளை எடுக்கப் போகிறீர்கள். உதாரணத்திற்கு ஒரு பெரிய வேலை கிடைக்க இன்டர்வியூக்கு செல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அந்த இன்டர்வியூக்கு செல்வதற்கும் முன்பு ஒரு மஞ்சள் துணியில் 11 ரூபாயை குலதெய்வத்தை வேண்டி முடிந்து வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும். நீங்கள் இந்த பரிகாரத்தை செய்வது வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தெரிய கூடாது. (11 1 ரூபாய் நாணயம், பத்து ரூபாய் நோட்டுடன் 1 ரூபாய் எப்படி வேண்டும் என்றாலும் வைக்கலாம்.)

- Advertisement -

குலதெய்வத்தை நினைத்து இந்த முடிச்சை மட்டும் முடிந்து வைத்து விடுங்கள். பிறகு உங்களுடைய வேலையை செய்ய நீங்கள் வெளியே செல்லலாம். மன தைரியத்தோடு செல்லுங்கள். மனதில் எந்த பயமும் இருக்க வேண்டாம். குழப்பம் இல்லாத தெளிவான மனதோடு சென்று உங்களுடைய முயற்சிகளை செய்யலாம். இன்டர்வியூவில் போல்டாக பேசி உங்களுடைய திறமையை வெளிக்காட்டுங்கள்.

நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்த அந்த நல்ல வேலை உங்களுக்கு கிடைக்கும். வீடு திரும்பிய பின்பு முடிந்து வைத்திருக்கும் இந்த 11 ரூபாயை எடுத்து காசாகவே ஒரு ஏழைக்கு தானமாக கொடுத்து விடுங்கள். யாசகமாக காசு கேட்பவர்கள் எத்தனையோ பேர் பஸ் ஸ்டாண்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த 11 ரூபாய் தானம் கொடுத்து விடுங்கள். அவ்வளவுதான் பரிகாரம்.

- Advertisement -

வேலை கிடைத்தால் தான் இந்த காசை தானம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது. வேலை கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி அந்த ரூபாயை தானம் கொடுத்து விடுங்கள். ஒரு வேலை உங்களுடைய கெட்ட நேரம் அந்த வேலை கிடைக்கவில்லை என்றாலும் அடுத்து ஒரு நல்ல வாய்ப்பை இந்த பிரபஞ்சம் தேடித் தரும்.

இதே போல தான் தொழிலில் அக்ரீமெண்ட் உங்கள் பக்கம் சைன் ஆக வேண்டும் என்றாலும் சரி, அல்லது வீடு வாங்குவதற்கு புது வீடு பார்க்க போறீங்க, நிலம் வாங்க புது நிலம் பார்க்க போறீங்க, அல்லது நினைத்த கல்லூரியில் சீட்டு கிடைக்க வேண்டும், ஹவுசிங் லோன் கிடைக்க வேண்டும், இப்படி எந்த ஒரு விஷயம் நீங்கள் நினைத்தபடி நடக்க வேண்டும் என்றாலும் சரி உங்களுடைய அந்த குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள இந்த பதினோரு ரூபாய் பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து போக இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள். துன்பத்தைகளை தூள் தூளாக்கும் அற்புத மந்திரம்.

இது ஒரு கண்மூடித்தனமான பரிகாரம்தான் ஆனால் கை மேல் பலனை கொடுக்க கூடிய அளவுக்கு இதில் சக்தி உண்டு. சும்மா முயற்சி செய்து தான் பாருங்களேன். 11 ரூபாயில் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தால் யாருக்குத்தான் மகிழ்ச்சி இருக்காது. நீங்களும் அந்த மகிழ்ச்சியை அடைய இறைவனை வேண்டி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -