தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து போக இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள். துன்பத்தைகளை தூள் தூளாக்கும் அற்புத மந்திரம்.

muruga sad lady
- Advertisement -

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்ற பழமொழிக்கு ஏற்ப நம் வாழ்வில் ஏற்படும் சொல்ல முடியாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் நாம் கடைசியில் சரணாகதி அடைவது கடவுளை தான். அந்த வகையில் திக்கற்று வழி தெரியாமல் நிற்பவர்களை கரை சேர்க்கும் கடவுளாக விளங்குபவர் தான் கந்தக் கடவுள். முருகக் கடவுளை நினைத்து நாம் சொல்லும் இந்த ஒரு வரி மந்திரம் தான் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய அருமருந்தாக இருக்கப் போகிறது. அது என்ன என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம்பி வந்தவர்களை நாடாள வைக்கும் அற்புத திறன் கொண்ட கடவுள் முருகப் பெருமான். இப்படிப்பட்ட முருகப் பெருமானிடம் நம் வாழ்வில் நடக்கும் எத்தனை பிரச்சனைகளுக்கும் எளிய முறையில் தீர்வு காணலாம். குழந்தை இல்லாதவர்களுக்கு அருள் பாலிக்கும் பால முருகனாகவும் வீடு, வாசல், சொத்து, சுகம், பிணி, கடன் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் ஆறுமுக கடவுளாகவும் விளங்குபவர் தான் இந்த தமிழ் கடவுளான முருகப் பெருமான்.

- Advertisement -

முருகப் பெருமானின் புகழராங்களை சொல்ல வேண்டும் என்றால் இந்த பதிவு மட்டும் இன்றி நம் வாழ்நாள் கூட போதாது. அப்பேற்பட்ட முருகப் பெருமானை நாம் துன்பக் கடலில் தத்தளிக்கும் போது அவரை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் ஜபித்தால் போதும் எப்பேர்பட்ட துன்பத்திலிருந்து நம்மை கரை சேர்த்து விடுவார்.

துன்பம் தீர முருகன் மந்திரம்
முருக பெருமானை செவ்வாய்க் கிழமையில் வழிப்பாடு செய்வது மிகவும் சிறந்தது. அப்படி வழிபாடு செய்யும் வேளையில் கந்த சஷ்டி கவசத்தை முழுவதுமாக படித்து அல்லது காதால் கேட்டு பூஜை செய்வது மிக மிக நல்லது. இன்றைய அவசர காலக்கட்டத்தில் அப்படி முழுவதுமாக கேட்டு தன் குறைகளை சொல்லக் கூட நேரமில்லாமல் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். நேரமில்லை என்பதற்காக நம்முடைய பிரச்சனைகளை கடந்து சென்று விட முடியாது அல்லவா. நாம் சென்றாலும் அது நம்மை செல்ல விடாது.  இக்கட்டான சூழ்நிலையில் உங்களால் இனி மீளவே முடியாது என்று நினைக்கும் வேளையில், முருகப் பெருமான் படத்திற்கு முன்பாக ஒரு அகல் தீபம் ஏற்றி வைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள்.

- Advertisement -

ஓம் ஐம் ரீம் வேல் காக்க
இந்த மந்திரத்தை சொல்ல ஐந்து நிமிடம் மட்டும் ஒதுக்கிக் கொள்ளுங்கள். அதற்கு மேலும் நேரமிருந்தால் சொல்லலாம். ஒரு நாளில் நம்முடைய பிரச்சனைகள் தீர ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்குவதில் எந்த ஒரு தவறும் இல்லை. நீங்கள் எந்த துன்பத்தில் இருந்தாலும் அது சரியாக வேண்டும் என்று நினைத்து, விளக்கேற்றி இந்த மந்திரத்தை ஜெபித்து பாருங்கள். ஆனால் இதை மனதிற்குள் சொல்லக் கூடாது. வாய் விட்டு சத்தமாக தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே:உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த ஒரு மந்திரத்தை தினமும் உச்சரித்தால் போதும். உங்கள் வீட்டை வாட்டி விதைக்கும் பிரச்சனைகள் அனைத்தும் பறந்தோடும்.

இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பிக்கும் போதே உங்களுடைய மனம் லேசாகி பிரச்சினையிலிருந்து மீள்வதற்கான வழி உங்களுக்கு புலப்பட ஆரம்பிக்கும். இந்த மந்திர வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்யுங்கள். உங்களின் எல்லா விதமான பிரச்சனைகளையும் தீர்ந்து உங்களை காப்பாற்றும் கடவுளாக இந்த கந்த கடவுள் விளங்குவார்.

- Advertisement -