உங்கள் ராசிக்கு எந்த கடவுளை வணங்கி, என்ன மந்திரத்தை கூறினால் செல்வந்தராகலாம் தெரியுமா? 12 ராசிக்காரர்களுக்குமான மந்திரங்கள்!

astro-pray
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 12 ராசிகளையும், 12 கிரகங்களின் ஆளுகைக்கு கீழ் இன்பங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வருகின்றோம். ஜோதிடம், ஆன்மீகம் இரண்டும் வெவ்வேறானது அல்ல. ஜோதிடத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர நீங்கள் ஆன்மீகத்தை நாடி ஆக வேண்டும். எத்தகைய அசுப பலன்களையும், சுப பலனாக மாற்றி கொடுக்கும் அற்புதமான எளிய வழிபாடும், அதன் மந்திரங்களையும் 12 ராசியினருக்கும் என்னென்ன? என்பதை அறிய இந்த பதிவை நோக்கி தொடர்ந்து பயணியுங்கள்.

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க் கிழமையில் முருகனை வழிபட்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து வர எல்லா கெட்டவைகளும் உடனே உங்களை விட்டு நீங்கும். இம்மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். மேலும் முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்வது இன்னும் சிறப்பு.
மந்திரம்:
ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ
விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம்
ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்!!

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனை அதிபதியாகக் கொண்டவர்கள் ஆவர். எனவே நீங்கள் வெள்ளிக்கிழமை தோறும் கீழ்வரும் இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்து மகாலட்சுமி விரதம் இருந்து வழிபட்டு வந்தால் எல்லா நன்மைகளையும் பெறலாம். சுக்கிரன் மற்றும் மகாலட்சுமி வழிபாடு செய்ய நீங்களும் செல்வத்தின் அதிபதி ஆகலாம்.
மந்திரம்:
ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ!!

மிதுனம்:
midhunam
மிதுன ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து விஷ்ணு பகவானை வழிபட்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை 54 முறை உச்சரித்து வந்தால் எல்லா வளங்களையும், நலன்களையும் பெறலாம். புதன் பகவானை அதிபதியாக கொண்ட நீங்கள் அடிக்கடி பச்சை நிற உடை அணிந்து, செல்ல செல்லும் காரியம் ஜெயமாகும்.
மந்திரம்:
ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம!!

கடகம்:
Kadagam Rasi
கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திரனின் அருளை பெற்றுள்ளதால் பவுர்ணமி விரதம் இருப்பது அவர்களுக்கு நிறைய நன்மைகளை செய்யும். மேலும் பௌர்ணமியில் சந்திர பகவான் வழிபாடு மற்றும் அம்பாள் வழிபாடு செய்வது அம்பாள் சகஸ்ர நாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை 21 முறை உச்சரிக்க எல்லா நன்மைகளும், அனைத்து செல்வங்களையும் பெறலாம்.
மந்திரம்:
ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம!!

சிம்மம்:
simmam
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனுடைய அருளைப் பெற்றவர்கள் என்பதால் ஞாயிற்றுக் கிழமைகளில் கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து சூரிய வழிபாடு மேற்கொண்டு, சூரிய சகஸ்கர நாம அர்ச்சனை செய்து வந்தால் எல்லா வெற்றியும், புகழும் பெறலாம்.
மந்திரம்:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சூர்யாய நம!!

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு விஷ்ணு வழிபாடு சிறந்த பரிகாரமாக இருக்கும். புதன் கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் எல்லா வகையான வளங்களும் பெறலாம்.
மந்திரம்:
ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் புதாய நம!!

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக போக வாழ்க்கையையும், செல்வ செழிப்பும் உண்டாக சுக்கிரனுடைய அருள் தேவை எனவே சுக்கிர பகவானை நினைத்து கீழ்வரும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வர நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த ராசியினர் சத்திய நாராயண பூஜைகளை பௌர்ணமியில் மேற்கொள்வது கூடுதல் பலன்களை கொடுக்கும்.
மந்திரம்:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சுக்ராய நம!!

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள். நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் துர்க்கை அம்மன் ஆவார். ராகு கால துர்க்கை விரதமிருப்பது, செவ்வாய் கிழமையில் துர்க்கை பூஜைகள் செய்து கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது பெறற்கரிய பேற்றை பெற்றுக் கொடுக்கும்.
மந்திரம்:
தரணி கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்
காந்தி ஸமப்ரதம் குமாரம் சக்தி
ஹஸ்தம் சமங்களம் ப்ரணமாம்யஹம்!!

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழன் கிழமை தோறும் குரு பகவான் வழிபாடு செய்து வருவது சிறந்த பலனை கொடுக்கும். குருவின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் சிறப்பு. கீழ்வரும் இந்த மந்திரத்தை தொடர்ந்து நீங்கள் வியாழன் கிழமையில் உச்சரிக்க எல்லா வளங்களையும் பெறலாம்.
மந்திரம்:
ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம!!

மகரம்:
Magaram rasi
மகர ராசியில் பிறந்த நீங்கள் சனி பகவானுடைய ஆதிக்கம் பெற்றவர்கள். எனவே நீங்கள் எப்பொழுதும் சனீஸ்வர வழிபாடு செய்து வர வெற்றியையும், அழியா செல்வத்தையும் அடையலாம். கீழ்வரும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானுக்கு விரதமிருந்து, சனி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால் எல்லா நலன்களும் உண்டாகும்.
மந்திரம்:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம!!

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசியில் பிறந்த நீங்கள் சனி பகவான் ஆதிக்கம் பெற்றவர்களாக இருந்தாலும், சனிக்கிழமையில் சனிஸ்வர பகவான் மற்றும் ஹனுமன் வழிபாடும், அவருக்கு உரிய சகஸ்ர நாம அர்ச்சனையும் செய்து கீழ்வரும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் எல்லா வகையான வளங்களையும் பெறலாம்.
மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நம!!

மீனம்:
meenam
மீன ராசியில் பிறந்தவர்கள் குரு பகவானுடைய ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் வியாழக்கிழமை தோறும் குரு வழிபாடு செய்வதும், திங்கட்கிழமை தோறும் சிவ வழிபாடு செய்வதும் எல்லா வளங்களையும் பெற்று தரும். சிவனுக்கு உரிய சகஸ்ர நாம அர்ச்சனைகள் செய்து, கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் எல்லா துயரங்களும் நீங்கி நல்வாழ்வு பிறக்கும்.
மந்திரம்:
ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம!!

12 ராசியினரும் தத்தம் ராசிக்கு உரிய கடவுளரையும், அவருக்கு உரிய மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்தால் பாவ பலன்கள் நீங்கி புண்ணிய பலன்கள் அதிகரித்து உயர்ந்த செல்வந்தர் ஆகலாம்.

- Advertisement -
- Advertisement -