12 ராசிக்கும் பெருமாள் மந்திரம்! புரட்டாசி மாதம் முடிவதற்குள் பெருமாளை நினைத்து இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் கடன், வறுமை நீங்கி செல்வ கடாட்சம் பெருகும்.

astro-perumal
- Advertisement -

இந்த மாதம் பெருமாளுக்கே உரிய புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் பெருமாள் வழிபாடு நமக்கு கைமேல் பலனை கொடுக்கும். பெருமாள் மனதை குளிர வைக்கக்கூடிய, வறுமையை நீக்கக்கூடிய, கடனை குறைக்கக்கூடிய, செல்வ செழிப்பை கொடுக்கக்கூடிய, ஒரு அற்புதமான வழிபாட்டு முறையைப் பற்றித்தான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். புரட்டாசி மாதம் முடிவதற்குள் பெருமாளை நினைத்து ஒரு சனிக்கிழமை இந்த வழிபாட்டை மேற்கொண்டால், நிச்சயமாக உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் குறையும். குறிப்பாக உங்கள் ராசி படி நீங்கள் இந்த நாமத்தை சொல்லி பெருமாள் வழிபாடு செய்யும்போது மிகச் சிறப்பான பலன் உண்டு.

சனிக்கிழமை உங்களுடைய வீட்டில் இருக்கும் பெருமாள் படத்தை சுத்தம் செய்து சந்தன குங்குமப்பொட்டு வைத்து, துளசி இலைகளால் அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு மிகவும் உகந்தது மாவிளக்கு. பச்சரிசி மாவை அரைத்து அதில் வெல்லம் சேர்த்து பிசைந்து விளக்கு போல தயார் செய்து பெருமாளின் திருவுருவப்படத்திற்கு முன்பு மாவிளக்கு போட வேண்டும். கூடவே பெருமாளுக்கு உகந்த பானகம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சுத்தமான தண்ணீரில் சிறிதளவு வெல்லம், சுக்கு, ஏலக்காய், பச்சை கற்பூரம், துளசி இலைகளை, போட்டு கரைத்தால் பானகம் தயார் நிவேதனமாக கொஞ்சம் நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல்.

- Advertisement -

பிறகு ஒரு விளக்கும் ஏற்றி வைத்து விட்டு பெருமாளின் முன்பு அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க பிரார்த்தனை செய்யுங்கள். தீராத பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று மகாலட்சுமி தாயாரையும் சேர்த்து வேண்டிக் கொள்ளுங்கள். இறுதியாக உங்களுடைய ராசி படி எந்த மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து துளசி இலைகளால் பெருமாளின் திருவுருவ படத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

மேஷம் ஓம் கேசவாய நம
ரிஷபம் ஓம் நாராயணாய நம
மிதுனம் ஓம் மாதவாய நம
கடகம் ஓம் கோவிந்தாய நம

- Advertisement -

சிம்மம் ஓம் விஷ்ணுவே நம
கன்னி மதுசூதனாய நம
துலாம் ஓம் த்ரிவிக்ரமாய நம
விருச்சிகம் ஓம் வாமனாய நம

தனுசு ஓம் ஸ்ரீதராய நம
மகரம் ஓம் ஹ்ருஷிகேசாய நம
கும்பம் ஓம் பத்மநாபாய நம
மீனம் ஓம் தாமோதராய நம.

அர்ச்சனையை முடித்துவிட்டு கற்பூர ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். ஒரு வரி மந்திரம் கூட அல்ல. மூன்று வார்த்தை மந்திரம் தான். மனதார இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். உங்கள் ராசி படி கிரக சூழ்நிலை சரியில்லை என்றாலும் அதை உடனே சரி செய்து உங்களுக்கான வரங்களை உடனே அள்ளித் தரக்கூடிய சக்தி இந்த ஒரு நாமத்திற்கு உண்டு. (இந்த புரட்டாசி மாதம் மட்டுமல்லாமல் கஷ்டம் வரும்போது எல்லாம் நீங்கள் இந்த நாமத்தை சொல்லலாம். பெருமாள் உங்களுக்கு துணையாக வந்து நிற்பார்) எம்பெருமானை மனதார நம்பி புரட்டாசி மாதம் முடிவதற்குள் மேல் சந்தை வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -