உங்கள் ராசிப்படி பூஜை அறையில் எந்த பொருளை வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்?

pooja-room
- Advertisement -

அவரவர் ராசிப்படி அதிர்ஷ்டம் தரக்கூடிய பொருட்கள் என்று ஜோதிடத்தில் சில பொருட்கள் சொல்லப்பட்டுள்ளது. இந்த பொருளை வாங்கி பூஜையறையில்  வைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யும்போது இந்த பொருளுக்கும் ஊதுவத்தி காண்பித்து வழிபாடு செய்தாலே போதும்.

உங்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்ட காற்று வீச தொடங்கிவிடும். நீண்ட நாள் பின் தொடரும் கஷ்டங்கள் விலகும் என்பது நம்பிக்கை. 12 ராசிகளில் உங்களுடைய ராசி எது? உங்களுக்கு அதிர்ஷ்டம் தரப்போகும் பொருள் எது. தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஜோதிடம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் பொருள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் வெள்ளி குங்குமச்சிமிழில் கொஞ்சமாக சிவப்பு நிற குங்குமம் போட்டு, மகாலட்சுமி பாதங்களில் வைக்கவும். சின்ன மண் பானை வாங்கி அதில் துவரம் பருப்பு நிரம்ப போட்டு முருகப்பெருமானுக்கு பக்கத்தில் வைத்து வழிபாடு செய்து வந்தால், உங்கள் பணகஷ்டம் மன கஷ்டம் எல்லாம் தீரும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஒரு சிறிய கிண்ணத்தில் இலவங்கம் போட்டு பெருமாளின் பாதங்களில் வைத்து விடுங்கள். தினமும் பூஜை அறையில் வழிபாடு செய்யும்போது உங்கள் கடன் சுமை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் பணக்கஷ்டத்திலிருந்து விடுபடுவீர்கள். மேலும் மேலும் செல்வ வளம் உயரும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஒரு சின்ன கின்னத்தில் காய்ச்சிய பாலில், பனங்கற்கண்டு அல்லது வெல்லம் போட்டு பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்டால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீரும். லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும் வீட்டுப் பெண்களுக்கு மன நிம்மதியும் சந்தோஷமும் பெருகும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பான பலனை கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் நீங்கள் தினமும் சாம்பிராணி தூபம் போட்டு சாமி கும்பிட்டால் சுவாமி நீங்கள் கேட்ட வரங்களை எல்லாம் வாரி வழங்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சின்ன துண்டு சந்தன கட்டையை ஒரு கிண்ணத்தில் போட்டு பூஜையறையில் வையுங்கள். அதுமட்டுமில்லாமல் தினமும் குளித்து முடித்துவிட்டு தனியாக ஒரு சந்தன கட்டையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சந்தன கட்டையை கொஞ்சமாக பன்னீர் விட்டு குழைத்து நெற்றியில் இட்டுக் கொண்டால் உங்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஒரு சின்ன கிண்ணத்தில் பச்சை கற்பூரம் போட்டு பெருமாள் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். உங்களுக்கு பணக்கஷ்டம் தீரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அது மட்டுமில்லாமல் தினமும் பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு, புது தண்ணீரை மாற்றி அதில் சிறிது பச்சை கற்பூரம் போட்டு உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். உடனே பலிக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் ஒரு சின்ன கிண்ணத்தில் தினமும் நான்கு டைமண்ட் கற்கண்டுகளை வைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கை இனிப்பாக மாறிவிடும். அந்த டைமண்ட் கற்கண்டுகளை பூஜை முடிந்தவுடன் நீங்கள் பிரசாதமாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஒரு குங்குமச்சிமிழில், குங்குமம் போட்டு மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து விட வேண்டும். இதை தினமும் நெற்றியில் இட்டு வர உங்கள் பண கஷ்டம் தீரும். இது மட்டுமல்லாமல் உங்கள் வீட்டு பூஜை அறையில் எப்போதும் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் துவரம் பருப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மாதத்தில் ஒரு முறை பழைய பருப்பை காகத்திற்கு போடலாம். புது பருப்பு மாற்றி வைக்கவும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் பூஜை அறையில் அம்மன் படத்திற்கு முன்பாக ஒரு சின்ன கிண்ணத்தில் குண்டு மஞ்சளோ அல்லது விரலி மஞ்சள் போட்டு வையுங்கள். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய தடையை சரி செய்யும்.

மகரம் மற்றும் கும்பம்
மகர மற்றும் கும்ப ராசிக்காரர்கள் பூஜை அறையில் கருங்காலி கட்டையை வைப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். கருங்காலி குச்சியாக கிடைத்தாலும் சரி அல்லது கருங்காலியில் ஏதாவது ஒரு பூஜை பொருளை செய்து பூஜை அறையில் வைத்துக் கொண்டாலும் சரி அது உங்களுடைய சவுகரியம். கருங்காலி கட்டையில் ஏதாவது சுவாமியை செய்து அதை வீட்டில் பூஜை செய்தாலும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். மகர ராசி கும்ப ராசி இரண்டு பேருக்குமே இந்த பரிகாரம் சரியாக வேலை செய்யும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் ஒரு சின்ன கண்ணாடி கிண்ணத்தில் குண்டு மஞ்சள் போட்டு மாரியம்மன் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் வேறு ஏதாவது அம்மனின் திருவுருவ படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். தினமும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த மஞ்சளை வழிபாடு செய்த உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் தீரும். மஞ்சள் வண்டு பிடிப்பது போல இருந்தால் பழைய மஞ்சள் செடி கொடிகளுக்கு கீழே போட்டுவிட்டு புதுமஞ்சளை வைக்கவும்.

- Advertisement -