16 கிராம்பு இருந்தால் வராத பணமும் வசூல் ஆகும், கொடுக்க வேண்டிய பணமும் நீங்கள் கொடுத்து கடனை அடைத்து விடலாம் தெரியுமா?

cash-kirambu
- Advertisement -

ஆன்மீகத்தில் சில பொருட்களுக்கு வசிய சக்தியும், பணத்தை ஈர்க்கக் கூடிய தன்மையும் உண்டு என்பதாக குறிப்பிடப்படுகிறது. தாந்திரீக, மாந்திரீகங்களில் பயன்படுத்தப்படும் சில பொருட்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்துவார்கள். அது போல பணத்தை ஈர்க்க பச்சை கற்பூரத்தை அதிக அளவில் பயன்படுத்துவது உண்டு. அந்த வகையில் கிராம்பு எப்படி பணத்தை திரும்ப பெற்று தரும்? அல்லது கடனை அடைக்கும்? என்கிற ஆன்மீக குறிப்பு ரகசியங்களைத் தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பணத்தை ஈர்க்கக் கூடிய வசிய சக்தி பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கடுக்காய், மஞ்சள், தர்ப்பை புல், அருகம்புல் என்று சில வகையான பொருட்களுக்கு உண்டு. இந்த பொருட்களை எல்லாம் முறையாக நாம் பயன்படுத்தும் பொழுது பண வசியம் உண்டாகும், வசிய சக்தி ஏற்படும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

- Advertisement -

வட மாநிலத்தவர்கள் விசேஷங்களில் அதிகமாக இனிப்பு வகைகளை பயன்படுத்துகின்றனர். இந்த இனிப்பு வகைகளில் ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் போன்றவற்றையும் சேர்க்கின்றனர். இதனால் அவர்களிடம் அதிகம் பணம் புழங்குவதாக அவர்கள் நம்புகின்றனர். அது போல ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை அவர்கள் வாயில் போட்டு மெல்லவும் செய்வார்கள்.

கிராம்பை மென்றால் பல் உறுதியாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சொத்தை பல் உள்ளவர்கள் கிராம்பை அந்த இடத்தில் வைத்து மெல்லுவார்கள். கிராம்பு வாய் துர்நாற்றத்தை போக்க வல்லதாகவும் விளங்குகின்றது. இது போல எண்ணற்ற நன்மைகளை செய்யக்கூடிய இந்த கிராம்பு வராத பணத்தையும் வசூல் செய்யக்கூடிய தாந்திரீகத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

ஒருவரிடம் கொடுத்த பணம் வசூல் ஆகவில்லை, திரும்ப அவர்களிடம் பணத்தை வாங்க முடியவில்லை என்றால் பணம் வசூல் செய்ய செல்லும் பொழுது கிராம்பை வாயில் போட்டுக் கொண்டு கையில் கிராம்பை வைத்துக் கொண்டு சென்றால் கொடுத்த பணம் திரும்பி கிடைக்கும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. எப்பொழுதும் நான்கைந்து கிராம்பு துண்டுகளை ஒரு பேப்பரில் மடித்து பணம் வைக்கும் இடங்களில் வைத்தால் பணம் ஆனது பெருகுமாம்.

கொடுத்த பணத்தை வசூல் செய்ய மட்டும் அல்லாமல், நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தையும் கிராம்பை வைத்து கொடுக்கலாம். 16 கிராம்புகளை எடுத்து ஒரு பவுலில் போட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பௌலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிராம்பையும் ஒவ்வொரு நாளும் குளித்து முடித்ததும் ஓடும் நீர் நிலையில் விட்டு விட வேண்டும். இது போல் 16 நாட்கள் நீங்கள் கிராம்பை ஓடும் நீரில் விட்டு விட்டால், உங்களால் கொடுக்க முடியாத, அடைக்க முடியாத கடனையும் எளிதாக அடைத்து தீர்த்து விடலாம் என்பது ஐதீகமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
கட்டு கட்டாய் கை நீட்டி வாங்கிய கடனை, கஷ்டபடாமல் திருப்பி தர, ஒரு கைப்பிடி கடுகு இருந்தால் போதும். கடன் காணாமலேயே போய்விடும்.

கிராம்புக்கு அவ்வளவு ஒரு சக்தி உண்டு. உங்களுடைய பொருளாதார நிலையை சரி செய்யவும், உங்களுடைய வருமானத்தை அதிகரிக்கவும் இந்த கிராம்பு உதவுகிறது. அதனால் தான் மகாலட்சுமிக்கு கிராம்பு மாலை, ஏலக்காய் மாலை போன்றவற்றை சூட்டி வழிபடுவதும் உண்டு. கிராம்பை மாலையாக கோர்த்து மகாலட்சுமிக்கு போட்டு தொடர்ந்து நைவேத்தியம் படைத்து, நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள், தீராத கடனும் தீரும். யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களை நினைத்து இந்த கிராம்பு மாலை கோர்க்க வேண்டும்.

- Advertisement -