கட்டு கட்டாய் கை நீட்டி வாங்கிய கடனை, கஷ்டபடாமல் திருப்பி தர, ஒரு கைப்பிடி கடுகு இருந்தால் போதும். கடன் காணாமலேயே போய்விடும்.

venkadugu
- Advertisement -

கைநீட்டி கடன் வாங்கியவர்கள் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. கஷ்டத்திற்கு கைநீட்டி கடன் வாங்கியவரும் மனிதர் தான். அந்த கடனை கொடுத்தவரும் மனிதர்கள் தான். ஆகவே எந்த சூழ்நிலையிலும் மனிதர்கள் மிருகமாக நடந்து கொள்ளவே கூடாது. கைநீட்டி கடன் வாங்கியவர்களும், கடன் கொடுத்தவர்களுடைய நிலைமையைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய சொந்த பந்தங்களுக்கும் சரி, நண்பர்களுக்கும் சரி, கடனை கொடுக்கும் போது ஒருவன் நல்லவராக தெரிவார்கள். அதே கடனை நம் கஷ்டத்திற்கு திருப்பி கேட்கும் போது நாம் கெட்டவர்களாக மாறுவோம். இது இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம் தான்.

நம்முடைய கஷ்டம் நேரத்தை அறிந்து சரியான நேரத்தில் உதவி செய்த அந்த நல்ல மனதிற்காகவாவது நாம் சொன்ன நேரத்தில் கடனை திருப்பித் தந்து விட வேண்டும். பணத்தை திருப்பி தர முடியாத சமயத்தில் ஃபோனை எடுக்காமல் ஓடி ஒளிய கூடாது. நிலைமையை எடுத்துச் சொல்லி கடனை திருப்பித் தர கூடுதலாக நேரம் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சரிங்க என்னதான் சொன்னாலும் பணம் என்றால் பிரச்சனை தான். இந்த பண பிரச்சனையில் இருந்து தப்பிக்க கடன் சுமையிலிருந்து வெளிவர ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். கடனை தீர்க்கும் கடுகு பரிகாரம். ஆனால் இது குழம்புக்கு தாளிக்கும் கடுகு கிடையாது. வெண்கடுகில் செய்ய போகும் பரிகாரம். நாட்டு மருந்து கடைகளில் விற்கும். 50 கிராம் அளவு கேட்டால் கூட கொடுப்பார்கள். அதை பரிகாரத்திற்காக வாங்கிக் கொள்ளுங்கள்.

கடனை தீர்க்கும் கடுகு பரிகாரம்:
நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் ஒரு தனி அறையில் அல்லது வரவேற்பறையில் கூட தனியாக படுத்துக் கொள்ளலாம். ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள். கிழக்கு பார்த்தவாறு நின்று உங்கள் தலையை சுற்றிய வெண்கடுகை நீங்கள் படுகின்ற இடத்தில் நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு விடுங்கள்.

- Advertisement -

நடுவே பாய் தலையணை மெத்தை போட்டுக் கூட படுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். மறுநாள் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக பல் தேய்த்து முகம் கழுவி விட்டு உடனடியாக ஒரு துடைப்பத்தை வைத்து இந்த வெண்கடுகை எல்லாம் கூட்டி அள்ளி ஒரு பேப்பரில் வைத்து மடித்து ஒரு அகல் விளக்கில் கொட்டி அதில் ஒரு கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி விடுங்கள். நெருப்பில் இந்த வெண்கடுசியெல்லாம் படபடவென எரிந்து முடிந்துவிடும்.

இந்தப் பரிகாரத்தை செய்த ஒரு சில நாட்களில் உங்களுடைய கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும். வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எந்த கிழமையில் செய்தாலும் சரி. ஏழு நாட்களுக்கு ஒரு முறை, மூன்று முறை இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உதாரணத்திற்கு இந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை மூன்று கிழமைகள், அதே ஞாயிற்றுக்கிழமையில் பரிகாரம் செய்யப்பட வேண்டும்.  நிச்சயமாக வாங்கிய கடனை திருப்பித் தரக்கூடிய நேரம் காலம் உங்களுக்கு கைவி கூடி வரும்.

இதையும் படிக்கலாமே: கெடுதல் நினைப்பவர்கள் கூட நீங்க நல்லா இருங்கன்னு வாழ்த்த குளிக்கும் தண்ணீரில் இதை மட்டும் கலந்து விட்டால் போதும். உங்களை நெருங்கும் தீமையெல்லாம் நன்மையாக மாறி விடும்.

இந்த பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால் கடன் பிரச்சனை நீங்காது. கடனை திருப்பித் தர என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை நீங்கள் செய்ய வேண்டும். கூடவே சேர்த்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். முயற்சிகளில் வரும் தடைகள் நீங்கி உங்கள் கைக்கு பணம் வருவதில் இருக்கும் சிக்கல்கள் தீரும். சிக்கல்களை சரி செய்ய தான் பரிகாரமே தவிர, மந்திரம் போட்டால் மாங்காய் என்றைக்குமே வராது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -