வெறும் 21 நாளில் உங்களுக்கு பிடிக்காத வாழ்க்கை கூட, பிடித்தமான வாழ்க்கையாக மாறும். இந்த வழிபாட்டை செய்தால்.

hanuman
- Advertisement -

நீங்கள் யாரிடம் போய் கேட்டாலும் சொல்லுவாங்க. ‘உங்க வாழ்க்கை, உங்களுக்கு பிடித்த மாதிரி, சந்தோஷமாக இருக்குதா’ அப்படின்னு நீங்க யாரை போய் கேட்டாலும் ஒரே மாதிரி பதில் தான் சொல்லுவாங்க. இந்த வாழ்க்கையே எனக்கு பிடிக்கல. ஏன் தான் இந்த ஜென்மம் எடுத்தோமோ. ஏன் தான் இந்த வீட்டில் பிறந்தோமோ, என்று புலம்பத்தான் செய்வார்கள். யார் தான் வாழ்க்கையை விரும்பி வாழ்கிறார்கள். எல்லோருக்குள்ளும் ஒரு கஷ்டம். எல்லோருக்குள்ளும் ஒரு சோகம். எல்லோருக்கும் ஒரு பிரச்சனை. இது எல்லாம் இல்லை என்றால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழதான் இந்த மனித ஜென்மம். பிடிக்காத வாழ்க்கையைக் கூட அழகாக பிடித்த மாதிரி மாற்றிக் கொள்வது எப்படி.

உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை எல்லாம் சுலபமாக சமாளித்து வாழ்க்கையை கடந்து செல்ல இந்த ஒரு வழிபாட்டை செய்து பாருங்கள். உங்களுக்குள் மன தைரியம் பிறக்கும். எதை வேண்டும் என்றாலும் சமாளித்து விடலாம் என்ற தெம்பு கிடைக்கும். மன அழுத்தம் நீங்கும். அந்த ஹனுமனுடைய பலம் உங்களுக்குள் வந்துவிடும். சரிதான் இது ஹனுமன் வழிபாடு தான்‌. அதை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சொல்லும் பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

உங்களுடைய வீட்டின் அருகில் அனுமனின் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலில் இருந்தால் நிச்சயம் அவரை பார்க்க தினம் தோறும் கோவிலுக்கு செல்லுங்கள். கோவிலுக்கு சென்று ஹனுமனை 2 நிமிடம் உங்களுடைய கண்களால் மனம் குளிர பார்த்து அந்த உருவத்தை உங்களுடைய கண்களுக்குள், உங்களுடைய மனதிற்குள் ஈர்த்துக் கொண்டாலே போதும். ஹனுமன் உங்களுக்குள் வந்துவிடுவார். இரண்டு மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அனுமன் சன்னிதானத்தில் சிறிது நேரம் அமர்ந்து ‘ஓம் ஹனுமந்தாயை நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லலாம். ‘ஸ்ரீ ராம ஜெயம்’ சொல்லலாம்.

மனதை அமைதிப்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் எந்த துன்பம் வந்தாலும் அதை கடந்து செல்லக்கூடிய தைரியத்தை கொடுக்க வேண்டும் என்று அனுமனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அனுமனை பார்த்தாலே உங்களுக்கு பாதி கஷ்டம் தீர்ந்துவிடும். அந்த கோவிலில் அமருங்கள். மீதி கஷ்டம் தீரும். மந்திரத்தை வாய்விட்டு சொல்லுங்கள் எல்லாம் பறந்து ஓடிவிடும்.

- Advertisement -

பிறகு வீட்டிற்கு வாங்க வீட்டை எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் உடன் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு கண்ணாடி டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தமான தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு கண்ணாடி டம்ளரில் ரோஸ்மெரி எசன்சியல் ஆயில் 4 சொட்டு, இன்னொரு கண்ணாடி டம்ளரில் பெப்பர்மென்ட் ஆயில் 4 சொட்டு விட்டு, நன்றாக கலந்து அப்படியே திறந்தபடி வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: சூரிய பகவானை நினைத்து பத்து நிமிடம் இதை மட்டும் செய்தால் போதும். இனி எப்போதுமே கையில் பணம் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லாத அளவிற்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

இதிலிருந்து ஒரு நல்ல நறுமணம் வீசும். அது உங்களுக்கு மனதில் நிம்மதியை கொடுக்கும். எவ்வளவு பெரிய கஷ்டம் இருந்தாலும் அதை தாங்க கூடிய பாரம், அந்த சுமை நமக்கு தெரியாது. இந்த வாசனை திரவியம் எங்க கிடைக்கும். சின்ன சின்ன பாட்டிலில் டிபார்ட்மெண்டல் ஸ்டோரியில் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் ஆன்லைனில் சுலபமாக நமக்கு கிடைக்கிறது. எவ்வளவோ செய்றீங்க இதையும் செஞ்சு தான் பாருங்களேன். பிடிக்காத வாழ்க்கையை பிடித்தது போல வாழ்வதற்கு இவ்வளவு ஈஸியா ஐடியாவை யாராவது சொல்லுவாங்களா. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -