நாளை அதி அற்புதம் வாய்ந்த இந்த நன்னாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்தால், விதிப்படி உங்களுக்கு கெட்ட நேரம் இருந்தாலும் அது நல்ல நேரமாக மாறும். அப்படி நாளைக்கு என்ன தான் ஸ்பெஷல்?

murugan-om
- Advertisement -

நாளை அப்படி என்ன அற்புதம் வாய்ந்த நாளாக இருக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? முருகப்பெருமானுக்கு பொதுவாகவே மாதம் தோறும் 3 விரதங்கள் கடைபிடிக்கப்படும். முதலாவதாக வார விரதமான செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானை வேண்டி விரதமிருந்து வழிபாடு செய்வது. இரண்டாவதாக நட்சத்திர விரதம் என்று சொல்லப்படும் கார்த்திகை விரதம். மூன்றாவதாக திதி விரதம் என்று சொல்லப்படும் சஷ்டி விரதம். ‘செவ்வாய்க்கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சஷ்டி திதி’, இந்த மூன்றும் ஒன்றாக சேர்ந்து வந்திருக்கின்றது. இந்த நாளை நாம் தவற விடலாமா. இந்த நாளில் முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்வது? இந்த நன்னாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரிந்து கொள்வோமா.

வாழ்க்கையில் நமக்கு எந்தத் துன்பம் வந்தாலும் சரி, அந்த துன்பத்தில் இருந்து வெளி வருவதற்கு தேவையான மன தைரியத்தை கொடுக்க கூடிய வழிபாடுதான் முருகப்பெருமானின் வழிபாடு. ‘திதி’ பார்த்து விரதமிருந்தால் ‘விதி’ மாறும் என்பது நம்பிக்கை. உங்கள் விதியை மாற்ற கூடிய வழிபாடு சஷ்டி திதி வழிபாடு.

- Advertisement -

உங்களுக்கு திருமணம் நடக்கவில்லையா, ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சஷ்டி திதி அன்று முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முல்லைப் பூ அல்லது செவ்வரளி பூ மாலை சூட்டி, 2 நெய் தீபங்களை ஏற்றி முருகப்பெருமானை வழிபாடு செய்துவர நல்ல மணவாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. இதேபோல திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றாலும் இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ளலாம்.

வாழ்வில் நமக்கு விதிக்கப்பட்ட வினையெல்லாம் தீரவேண்டும் என்றால் முருகப்பெருமானின் கார்த்திகை நட்சத்திர விரதத்தை மேற்கொள்ள வேண்டும். இன்னல்கள் இல்லாத இனிமையான வாழ்க்கை அமைய முருகப்பெருமானின் கார்த்திகை விரதம் நமக்கு கைகொடுக்கும்.

- Advertisement -

வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்துவர வாழ்வில் இருக்கக்கூடிய அத்தனை தடைகளையும் விலக்கும். குறிப்பாக ஜாதக ரீதியாக உங்களுக்கு ஏதேனும் தோஷங்கள் உள்ளது. அதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுகிறது என்றால் செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு மிக மிக உகந்தது.

வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் முருகப்பெருமானின் திருவுருவம் படத்திற்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து, 6 நெய் தீபங்கள் ஏற்றி மனமுருகி வேண்டுதல் வைத்து வர உங்களுடைய வீடு சுபிட்சம் பெறும்.

முருகப் பெருமானின் அருள் ஆசியை நாம் முழுமையாக பெற நாளை இந்த நாளை மட்டும் தவறவிடாதீர்கள். மேலே சொன்ன எந்த வழிபாட்டு முறையையும் உங்களால் பின்பற்ற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. பூஜையறையில் முருகப்பெருமானின் திருவுருவம் இருக்கும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு ‘ஓம் முருகா’ என்ற வார்த்தையை உச்சரித்து மனதார முருகப் பெருமானை நினைத்தாலே, முருகப்பெருமானின் அருள் நமக்கு கிட்டும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -