உங்கள் கண்ணைச் சுற்றிக் கருவளையம் இருக்கிறதா? என்ன செய்தாலும் மறைய வில்லையா? கவலை கொள்ள வேண்டாம். இந்த எளிய குறிப்புகளை மட்டும் தொடர்ந்து பின்பற்றி பாருங்கள் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்

eye
- Advertisement -

இன்றைய இளைஞர்கள் தங்களது கல்லூரி படிப்பை முடித்த பிறகு வேலைக்கு செல்லும்போது அவர்கள் தேர்ந்தெடுக்கும் அதிகப்படியான வேலைகள் கம்ப்யூட்டரில் அளவுக்கு அதிகமான நேரத்தை செலவிட வேண்டிய வேலையாகத் தான் இருக்கிறது. அதிலும் இப்பொழுதுள்ள லாக் டவுன் காலங்களில் பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் வரை அனைவருமே மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரில் தான் அதிக நேரம் அமர்ந்து இருக்கிறார்கள். எனவே சிறியவர்கள் முதல் வேலை பார்க்கும் பெரியவர்கள் வரை இப்பொழுது கண்ணுக்கு அடியில் கருவளையம் வந்து விடுகிறது. இதனை வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து சுலபமாக சரி செய்ய முடியும். அவ்வாறு செய்யக் கூடிய சில எளிய குறிப்புகளை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

டிப்ஸ்: 1
முதலில் ஒரு சிறிய அளவு உருளைக்கிழங்கை காய் துருவல் வைத்து நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை வடிகட்டியை வைத்து நன்றாக சாறு வரும் வரை பிழிந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த உருளைக்கிழங்கு சாறில் 2 சிட்டிகை கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த கலவையை லேசாக மசாஜ் செய்யும் வகையில் கண்களை சுற்றி தடவி விட வேண்டும். பிறகு ஐந்திலிருந்து பத்து நிமிடம் அப்படியே விட்டு விட்டு, குளிர்ந்த நீரில் கண்களை நன்றாக கழுவி விடவேண்டும். இதனை வாரத்திற்கு 5 முறை தொடர்ந்து செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்களுக்கு அடியில் இருக்கும் கருமை நிறம் மறைய ஆரம்பிக்கும். கண் சுருக்கமும் குறையும்.

டிப்ஸ்: 2
நாட்டு மருந்து கடையில் கடுக்காய் என கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த காயை மஞ்சள் கிழங்கு தேய்க்கும் கல் அல்லது சுத்தமான சிமெண்ட் தரையில் லேசாக தண்ணீர் விட்டு கடுக்காயை நன்றாக தேய்த்து கொடுக்கும் பொழுது மாவு பதத்திற்கு வர ஆரம்பிக்கும்.

- Advertisement -

இந்த கடுக்காய் மாவினை எடுத்து கண்களை சுற்றி மசாஜ் செய்து தடவி விட வேண்டும். இவ்வாறு ஏழு நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும் இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கூடிய விரைவில் கருவளையம் மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் தண்ணீர்க்கு அடியில் பை போன்ற பிரச்சனை இருந்தால் அதுவும் குறைந்துவிடும்.

டிப்ஸ்: 3
பொதுவாகவே உடல் சூடு தணிக்கும் ஒரு பொருள் என்றால் அது விளக்கெண்ணை தான். நமது கண்கள் அதிகப்படியான வேலைகளில் ஈடுபடுவதால் தான் கண்களை சுற்றி கருவளையம் உண்டாகிறது. கம்ப்யூட்டர் மற்றும் செல்ஃபோனை அதிகப்படியான நேரம் பார்க்கும் பொழுது அதில் இருக்கும் அதிர்வலைகள் நமது கண்கள் வழியாகத்தான் உடல் முழுவதும் சென்று உடல் சூடாகிறது. எனவேதான் கண்ணுக்கு அடியில் கருவளையம் உண்டாகிறது. இந்த விளக்கெண்ணையை இரவு தூங்கும் பொழுது கண்ணை சுற்றி தினமும் தடவி வர உடல் உஷ்ணம் தணிந்து கருவளையம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -