முடியின் வளர்ச்சி 3 மடங்கு படு வேகமாக அதிகரிக்க, இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து தலையில் போட்டாலே போதும். கருகருன்னு முடி, காடு போல வளரும்.

mooligai-hair-oil
- Advertisement -

வழுக்கையான ஸ்கேல்பில் அதிவேகமாக முடி வளரவும், மெலிந்து போன முடி அடர்த்தியாக காடு போல அழகாக வளரவும், முடி உதிர்வை கட்டுப்படுத்தவும், ரொம்பவும் முரட்டுத்தனமாக இருக்கும் முடி சாஃப்ட்டாக சில்க்கியாக மாறவும், இந்த குறிப்பு உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். தலையில் கண்ணுக்கு தெரியாமல் ஏதாவது ஒரு இன்ஃபெக்சன் இருக்கிறது. அதனால், முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது என்பவர்களும் இந்த குறிப்பை பின்பற்றி பார்க்கலாம். முடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க, இந்த குறிப்பில் பயன்படுத்த போகும் அந்த மூன்று பொருட்கள் என்னென்ன என்பதை பற்றிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

படு வேகமாக முடி வளர அழகு குறிப்பு:
ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன், மிளகு 1 சின்ன ஸ்பூன், போட்டு இந்த இரண்டு பொருட்களையும் வறுக்க வேண்டும். லேசாக நிறம் மாறி வாசம் வந்தததும், பிறகு இதோடு 2 கைப்பிடி அளவு கருவேப்பிலையை போட்டு வறுக்க தொடங்குங்கள். மூன்று பொருட்களும் சேர்ந்து மொறுமொறுப்பாக வறுபட்டு வந்ததும் அடுப்பை அணைத்து இதை நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

வறுத்து ஆற வைத்த இந்த 3 பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும். 1/2 லிட்டர் அளவு மரச்செக்கு தேங்காய் எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமாக சூடு செய்து, நாம் அறைத்து வைத்திருக்கும் இந்த பொடியில் இருந்து தேவையான அளவு பொடி மட்டும் அந்த எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் காய்ச்சிக் கொள்ளுங்கள். (நான்கிலிருந்து ஐந்து ஸ்பூன் பொடியை பயன்படுத்தினால் கூட போதும்).

காய்ச்சிய எண்ணெய் நன்றாக ஆறியதும் ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி, எண்ணெயை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த எண்ணெய் தயார். இந்த எண்ணெயை தினமும் உங்களுடைய தலையில் தடவிக் கொள்ளலாம். சாதாரணமாக தேங்காய் எண்ணெய் வைப்பது போல ஸ்கேல்பில் இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்து கொள்ளவும். தினமும் முடியில் எண்ணெய் வைக்க முடியாது என்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த எண்ணெயை தலையில் வைத்து ஊற வைத்து மயில்டான ஷாம்பு போட்டு குளித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்து இந்த எண்ணெயை வேறு எப்படி பயன்படுத்துவது. ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து, அதில் அலோவேரா ஜெல் 2 டேபிள் ஸ்பூன், அல்லது பிரஷ்ஷான கற்றாழை கிடைத்தால் அதன் உள்ளே இருக்கும் ஜெல் 4 டேபிள் ஸ்பூன்,  போட்டுக் கொள்ளவும். இந்த கற்றாழையோடு நாம் தயார் செய்து வைத்திருக்கும் எண்ணெயிலிருந்து 2 டேபிள் ஸ்பூன், விட்டமின் இ கேப்ஸ்யூல் 2 உள்ளே இருக்கும் ஜெல்லை போட்டு மிக்ஸியில் அரைத்தால் சூப்பரான பேக் தயார்.

இதையும் படிக்கலாமே: பார்லருக்கு எல்லாம் போக முடியவில்லை! 15 நிமிடத்தில் பேசியல் செய்தது போல முகம் பிரகாசமாக மாற எளிமையாக என்ன செய்யலாம்?

இந்த பேக்கை ஸ்கால்ப்பில் படும்படி அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலை முடியை அலசி விடவும். வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை போட்டு வர முடி வளர்ச்சியை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாது. இந்த எளிமையான இரண்டு அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -