50 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் 3 அபூர்வ ராஜயோகம்

yogam guru
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஜனவரி மாதத்தில் பல ராஜ யோகங்கள் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஒன்றாம் தேதி சூரியனும் செவ்வாயும் இணைந்து ஆதித்ய மங்கள ராஜயோகம் உருவாகியுள்ளது. அடுத்து சந்திரனும் வியாழனும் இணைந்து கஜகேசரி ராஜ யோக ஆயுஷ்மான் யோகத்தையும் உருவாக்கியுள்ளது.

இந்த யோகமானது 50 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி உள்ளது என ஜோதிட நிபுணர்கள் கணித்து உள்ளார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் எப்பொழுதும் ஒரு கிரகத்தின் மாற்றம், இணைவு மற்ற 12 கிரகங்களுக்கும் மாற்றங்களை கட்டாயம் ஏற்படுத்தும்.

- Advertisement -

அந்த வகையில் இந்த யோகங்கள் இணைவதும் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட கரமாக மாறி உள்ளது. யார் அந்த அதிர்ஷ்டசாலி ராஜ யோக ராசிக்காரர்கள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மூன்று ராஜ யோகங்களும் நல்ல சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தி உள்ளது. வியாபாரம் தொழில் செய்பவர்கள் நிறைய வெற்றிகளையும் லாபத்தையும் பெறலாம். இதுவரை எதிர்பார்த்த அனைத்து நிகழ்வுகளும் நடக்கக் கூடிய காலக்கட்டம் இது. பணியில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பணவரவு அதிகரிக்கும் பணத்தை மிச்சப்படுத்தி சேமித்துக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை காதல் வாழ்க்கை அனைத்தும் சிறப்பாக அமையும். முதலீடு செய்தவர்களுக்கு அதில் நல்ல லாபத்தை பெறக் கூடிய காலம் இது.

- Advertisement -

ரிஷபம்

இந்த ராசிக்காரர்களுக்கும் இந்த மூன்று யோகங்கள் சாதகமான சூழ்நிலையில் உள்ளது. இவர்களுக்கு சொத்து வாகனம் போன்றவற்றை வாங்கக் கூடிய அனுகூலம் உண்டு. இந்த காலக்கட்டத்தில் வேலை மற்றும் வியாபாரம் அனைத்திலும் இவர்கள் பிரகாசமாக இருப்பார்கள். திட்டமிட்ட அனைத்து திட்டங்களும் நல்லபடியாக நிறைவேறும்.நேர்மறை சிந்தனையுடன் பணியாற்றுவார்கள். வெளிநாடு செல்லக் கூடிய யோகங்கள் அமையும். மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். இந்த நேரத்தில் நீங்கள் தைரியமாக செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மூன்று ராஜ யோகங்கள் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ராஜயோகம் இவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் வெற்றியைத் தேடித் தரவுள்ளது. பல புதிய தொழில் தொடங்கக் கூடிய யோகம் உண்டு. வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நல்ல செல்வ நிலை உயர்வும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். படிக்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் அதற்கான அனுகூலத்தை பெறுவார்கள். செல்வ செழிப்புடன் ஆடம்பரமான வாழ்க்கை வாழக் கூடிய காலம் இது.

இதையும் படிக்கலாமே: சுக்கிரனால் பொற்காலத்தை பெறப்போகும் ராசிகள்

கிரகங்களின் சேர்க்கையால் உருவான இந்த மூன்று யோகங்களினால் பலன் பெறக் கூடிய மூன்று ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் படி தொகுக்கப்பட்டது. இதிலும் அவரவர் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப நிச்சயம் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -