மூன்று தலைமுறை கஷ்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கருமஞ்சள். அடுத்து வரக்கூடிய தலைமுறை பண கஷ்டம் இல்லாமல், மன கஷ்டம் இல்லாமல் சந்தோஷமாக வாழ இதை செய்தாலே போதும்.

karumanjal
- Advertisement -

சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக சில பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். எதனால் தான் குடும்பத்தில் இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது என்பதை கண்டுபிடித்து அதற்கான தீர்வை கொடுக்கவே முடியாது. போன தலைமுறையில் வாழ்ந்த தாத்தாவும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு இருப்பார். நம்முடைய அப்பாவும் தற்சமயம் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார். குடும்பத்தில் தற்போது பிறந்திருக்கும் குழந்தைகளும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.

வருமானம் இருக்காது. வருமானம் இருந்தால் அந்த வருமானத்தை சேமிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். சில குடும்பங்களில் தொடர்ந்து நோய்நொடிகள் இருந்துகொண்டே இருக்கும். சில குடும்பங்களில் வாரிசுகள் இருக்காது. சில குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு திருமணமே நடக்காது. சில குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் வாழ்க்கையில் தடம் மாறி சென்று கொண்டிருப்பார்கள். சில வீடுகளில் எதிர்பாராத மரணம், உயிரிழப்பு கூட ஏற்படும். இளவயதிலேயே சிலர் விபத்து மூலம் இறந்திருப்பார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு குடும்பத்திற்கு தலைமுறை தலைமுறையாக கஷ்டம் பின்தொடர்ந்து வரும். பணக்கஷ்டம் மனக்கஷ்டம் என்று குறைகள் குவிந்திருக்கும். யார் விட்ட சாபமோ யார் செய்த பாவமோ என்று தெரியாது. இப்படிப்பட்ட பெரிய பெரிய கஷ்டங்களுக்கு கூட தீர்வை கொடுக்கக் கூடிய சக்தி இந்த கரு மஞ்சளுக்கு உண்டு. 18 கருமூலிகைகளில் இந்த கருமஞ்சளுக்கு முதலிடம் என்று சொல்லப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் நடக்கக்கூடிய கசப்பான சம்பவங்களை நம்மிடம் இருந்து வெளியேற்றக்கூடிய சக்தி கொண்ட இந்த கருமஞ்சலை எப்படி பரிகாரத்திற்கு பயன்படுத்துவது. கருமஞ்சள், கருப்பு மிளகு, கருப்பு உப்பு, இந்த மூன்று பொருட்கள் நமக்கு தேவை. நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து இந்த மூன்று பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். கருப்பு மிளகு என்பது சமையலுக்கு பயன்படுத்த கூடிய மிளகு தான்.

- Advertisement -

ஒரு சிறிய மஞ்சள் துணியில் இந்த மூன்று பொருட்களையும் வைத்து பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டங்களை கொடுக்கக் கூடிய, பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இதை சிறிய முடிச்சாக கட்டி அப்படியே நிலை வாசல்படியில் மாட்டிவிடுங்கள்.

தினமும் வீட்டில் தீபம் ஏற்றும் போது ‘தலைமுறையாகத் தொடரும் இந்த கஷ்டங்கள் இந்தத் தலைமுறையோடு முடிய வேண்டும்’ என்று குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு அந்த முடிச்சுக்கு ஒரு ஊதுபத்தியை காண்பிக்க வேண்டும். (சிறிய துண்டு கரு மஞ்சல் 1, மிளகு 1 ஸ்பூன், கருப்பு உப்பு 1 ஸ்பூன், முடிச்சுகள் இருந்தால் போதும்.) 6 மாதத்திற்கு ஒரு முறை அந்த முடிச்சை அவிழ்த்து, உள்ளே இருக்கும் பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, துணியை துவைத்து விட்டு மீண்டும் புதிதாக அந்த மூன்று பொருட்களையும் வைத்து முடிச்சாக கட்டி விட வேண்டும்.

இப்படி செய்து வர நிச்சயமாக இருள் சூழ்ந்த கருகிப்போன, கருப்பான உங்களது வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர இந்த கருமஞ்சளால் நிச்சயமாக முடியும். கருமஞ்சலோடு, கருப்பு உப்பும், கருப்பு மிளகும் சேரும்போது இதனுடைய பலனை இரட்டிப்பாக நம்மால் பெறமுடியும். நம்மை அறியாமல் நம் வீட்டில் அமர்ந்திருக்கும் எதிர்மறை ஆற்றல் நம் வீட்டை விட்டு வெளியே சென்று விடும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நீண்ட நாட்களாக உங்களைத் தொடரும் கஷ்டத்திற்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -