நம்மை பிடித்த தீய சக்திகள் விலக பரிகாரம்

negative energy
- Advertisement -

உடல் ஆரோக்கியமாக இருந்தும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்டு எதிலும் விருப்பமில்லாமல் இருப்பவர்களும், எங்கு சென்றாலும் அந்த இடத்தில் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு கஷ்டப்படுபவர்களும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் பல பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் இவையே மிகவும் முக்கியமான பிரச்சினையாக கருதப்படுகிறது. இந்த பிரச்சனைகள் நீங்குவதற்கு செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கண் திருஷ்டி, பொறாமை, எரிச்சல், கோபம், சாபம், ஏவல், பில்லி, சூனியம் என்று இவை அனைத்தும் சேர்ந்ததுதான் தீய சக்திகளாக கருதப்படுகிறது. இவற்றில் ஏதாவது ஒன்று நம்மை தாக்கிவிட்டாலே நமக்கு அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் நம்மால் வெற்றி அடைய முடியாது. நிம்மதியாக இருக்க முடியாது. எங்கு சென்றாலும் சண்டை சச்சரவுகளை ஏற்படும். இப்படி பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்போம். அந்த பிரச்சினைகளில் இருந்து வெளி வருவதற்கு சில பரிகாரங்களை பார்ப்போம்.

- Advertisement -

தீய சக்திகளை வெளியேற்றுவதற்கு உதவக்கூடிய பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் கல் உப்பு. யார் ஒருவர் தீய சக்தியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் கல் உப்பு கலந்த தண்ணீரில் குளித்து வர அவர்களை பிடித்த தீய சக்திகள் விலகிவிடும். வீட்டையும் கல் உப்பை போட்டு துடைப்பதன் மூலம் வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகளும் விலகும்.

இதே போல் வேப்ப இலையையும் மஞ்சள் தூளையும் தண்ணீரில் கலந்து குளிப்பதன் மூலமும் தீய சக்திகள் விலகும். எந்த வீட்டில் வேப்ப இலையும் மயிலிறகும் இருக்கிறதோ அந்த வீட்டிற்குள் எந்த வித தீய சக்திகளும் அணுகாது. வேப்பமரம், துளசி செடி, திருநீற்றுப்பச்சிலை இவை மூன்றும் இருக்கும் வீட்டில் தீய சக்திகள் அண்டாது.

- Advertisement -

பௌர்ணமி தினத்தில் மாலை 6:00 மணிக்கு மேல் தீய சக்தியால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் அரச மரத்தை 27 முறை சுற்றி வந்து வழிபட அவர்களை பிடித்த தீய சக்திகள் அனைத்தும் விலகி ஓடும். ராஜகனியாக கருதப்படும் எலுமிச்சம் பழத்திற்கு தீய சக்திகளை விரட்டக்கூடிய ஆற்றல் அதிக அளவில் இருக்கிறது.

எந்தவித கருப்பு புள்ளிகளும் இல்லாத நல்ல பழுத்த எலுமிச்சம் பழமாக பார்த்து வாங்கி வந்து தங்கள் வலது கையில் வைத்துக்கொண்டு தலையை மூன்று முறை சுற்றி கைகளிலும் கால்களிலும் தடவி எந்த இடத்தில் வலிகள் இருக்கிறதோ அந்த இடத்தையும் நன்றாக தடவி கீழே வைத்து தங்கள் வலது காலால் அந்த எலுமிச்சம் பழத்தை மிதித்து நசுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் அவர்களிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகிவிடும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம்

யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய இந்த எளிமையான பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் முழுமையாக விலகி நல்ல வாழ்க்கையை அவர்களால் வாழ முடியும்.

- Advertisement -