திங்கள் கிழமையில் 3 தேங்காயை இப்படி மட்டும் செய்யுங்கள் முந்திக் கொண்டு நிற்கும் எல்லா பிரச்சனைகளையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து ஓட ஓட விரட்டி அடிக்கலாம்!

3-coconut-pillaiyar
- Advertisement -

எல்லோருடைய வாழ்க்கையிலும் வெவ்வேறான கஷ்டங்கள் இருக்கத் தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இருக்கவே முடியாது. அந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அளவிற்கு தைரியத்தை கொடுப்பது இறையருள் மட்டுமே ஆகும். இந்த இறையருளை எளிதாக பெற்று வாழ்க்கையில் இருக்கக் கூடிய எல்லா பிரச்சனைகளையும் ஓட ஓட விரட்டி அடிக்க நீங்கள் திங்கள்கிழமையில் மூன்று தேங்காய்களை இப்படி செய்யுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி நாம் செய்ய வேண்டியது என்ன? யாருக்கு என்ன செய்யப் போகிறோம்? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேங்காய் என்றாலே முதலில் நமக்கு நினைவிற்கு வருவது பிள்ளையாரை தான். பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கம் காலம் காலமாக இந்து சமயத்தில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு பரிகாரமாக இருந்து வருகிறது. காரிய வெற்றிக்கு சிதறு தேங்காயை உடைத்து பரிகாரத்தை பூர்த்தி செய்கிறோம். அது போல நம் கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தும் தொலைந்து போவதற்கு விநாயகரை வழிபடும் ஒரு முறை தான் இதுவும்.

- Advertisement -

தீராத துன்பங்களும் நொடியில் தீர வேண்டும் என்று விநாயகரை முழு மனதார வேண்டிக் கொண்டு செய்யப்படும் இந்த பரிகாரம் முழுமையான பலன்களை நம்பிக்கையோடு செய்யும் பொழுது அனுபவிக்க முடியும். இதற்கு முதலில் ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்று தேங்காய்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். காலையிலேயே இந்த பரிகாரத்தை செய்வதால் முந்தைய நாளே வாங்கி வைப்பது நல்லது.

பின்னர் திங்கட்கிழமை அன்று நீங்கள் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து சுத்த பத்தமாக பூஜை அறைக்கு செல்லுங்கள். பூஜை அறையில் மூன்று தேங்காய்களையும் வைத்து விநாயகரை முழு மனதார பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு ஒரு தேங்காயாக எடுத்து உங்களுடைய தலையை வலம் இருந்து இடமாக சுற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இந்த மூன்று தேங்காய்களையும் எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு அருகம்புல் ஒரு கட்டு வாங்கிக் கொள்ளுங்கள். பின் இந்த தேங்காய்களை அர்ச்சகர் இடம் கொடுத்து அர்ச்சனை செய்ய சொல்லுங்கள். அர்ச்சனை முடிந்ததும் நீங்கள் இந்த தேங்காய்களை ஒவ்வொன்றாக சிதற விட்டு சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும். உங்களுடைய துன்பங்கள் யாவும் இது போல உடைந்து போக மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் விநாயகரை மூன்று முறை வலம் வந்து அருகம்புல்லை கொடுத்து அர்ச்சனை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இதையெல்லாம் தவறாமல் கடைப்பிடித்தால் சனி பகவானால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி அவரே உங்களுக்கு பொன்னும் பொருளும் வாரி வழங்குவார் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

அருகம்புல் விநாயகருக்கு உகந்த ஒன்றாக இருக்கிறது. எனவே அருகம்புல் அர்ச்சனை செய்தால் விநாயகருடைய அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். அர்ச்சனை செய்த பின்பு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான், இப்பொழுது நீங்கள் உங்களுடைய கஷ்டங்களை எல்லாம் அங்கேயே இறக்கிவிட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு வீட்டிற்கு நேராக செல்ல வேண்டும். வேறு எங்கும் இடையில் செல்லக் கூடாது. இது போல தொடர்ந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் நீங்கள் செய்து வந்தால் விரைவிலேயே உங்களுக்கு இருக்கக் கூடிய எல்லா விதமான கஷ்டங்களும், துன்பங்களும் தொலையும் என்பது நம்பிக்கை.

- Advertisement -