முடி கொட்டிய இடத்தில், 30 நாட்களில் புது முடி வளர்வதை பார்க்க உங்களுக்கு ஆசையா இருக்குதா? புது புது முடிகளை சீக்கிரம் வளர வைக்கும் சூப்பரான பவர்ஃபுல்லான ஹேர் பேக் இதோ!

hair27
- Advertisement -

நிறைய பேருக்கு இப்போது முடி உதிர்வு பிரச்சினை அதிகமாக இருக்கிறது. இரண்டு வருடத்திற்கு முன்பு முடியை வாரி சீவி பின்னி கொள்ள முடியாத அளவுக்கு அடர்த்தியாக இருந்த முடி, தற்போது ஒன்றுமே இல்லாமல் எலிவால் போல மெல்லிசாக மாறிவிட்டது. இந்த கொட்டிய முடிகள் எல்லாம் மீண்டும் வளரவே மாட்டேங்குது என்று கஷ்டப்படுபவர்களும் இந்த பேக்கை பயன்படுத்தலாம். தலைமுடி இயற்கையாகவே எனக்கு மெலிசாக தான் இருக்கிறது. ஆனால், அந்த முடிகளை எல்லாம் அடர்த்தியாக மாற வைக்கணும். ஸ்கேல்பில் கிட்ட கிட்ட நெருக்கமாக முடிகள் அழகாக வளர வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் இந்த பேக்கை பயன்படுத்தலாம். பேக் என்றதுமே ரொம்பவும் சிரமம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

இந்த பேக் சீரம் போலத்தான், ஜெல் டைப்பில் நாம் தயார் செய்யப் போகின்றோம். ஈசியாக தலையில் அப்ளை செய்து ஈசியாக தலையை வாஷ் செய்து கொள்ளலாம். வாங்க அந்த அழகு குறிப்பு என்ன என்பதை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

புதிய முடிகளை சீக்கிரம் வளர வைக்க ஹேர் பேக் தயார் செய்யும் முறை:
இதற்கு நமக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை முதலில் பார்த்து விடுவோம். கருஞ்சீரகம் 2 ஸ்பூன், வெந்தயம் 2 ஸ்பூன், ஆளி விதை 2 ஸ்பூன். இந்த மூன்று பொருட்கள் தேவை. உங்களுக்கு தலையில் அரிப்பு பொடுகு பேன் பிரச்சனை இருந்தால் மூன்று கொத்து வேப்ப இலைகளையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு அகலமான பாத்திரத்தில் குடிக்கின்ற சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். இரண்டு பெரிய சொம்பு அளவு தண்ணீரை ஊற்றிக்கொண்டாலும் சரிதான். அதில் எடுத்து வைத்திருக்கும் ஆளி விதை, கருஞ்சீரகம், வெந்தயம், இந்த மூன்று பொருட்களையும் போட்டு கொதிக்க வையுங்கள். தலைமுடியில் இன்பெக்சன் இருப்பவர்கள் இந்த வேப்ப இலைகளை தண்ணீரில் கழுவி இதோடு சேர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

தண்ணீர் நன்றாக கொதித்து வரும்போது லேசாக ஜெல் பதத்திற்கு மாறும். அப்போது தண்ணீரின் நிறமும் மாறும். அந்த சமயம் அடுப்பை அணைத்துவிட்டு, இதை நன்றாக ஆறவிட்டு வடிகட்டி கொள்ள வேண்டும். ஒரு காட்டன் துணியில் இந்த கலவையை ஊற்றி உங்கள் கையை கொண்டு அப்படியே பிழிந்து எடுத்தால் கொழ கொழப்பாக ஒரு ஜெல் போல பேக் தயாராக கிடைத்திருக்கும். இதை பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் 5 நாட்கள் கெட்டுப் போகாது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த பேக்கை வேர்க்கால்களில் படும்படி அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து பார்த்தால் பேக் தலையில் அப்படியே காய்ந்து விடும். பேக் போட்டது போலவே தெரியாது. நீங்கள் அப்படியே விட்டு விட்டு மறுநாள் காலை கூட தலைக்கு குளிக்கலாம்.

உங்களுக்கு அது செட் ஆகாது என்றால் தலைக்கு குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு இந்த பேக்கை ஸ்கால்ப்பில் நன்றாக படும்படி அப்ளை செய்து விட்டு, ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள். முன் நெற்றியில் எல்லாம் நிறைய முடி கொட்டி இருக்கிறது. வழுக்கை விழுவது போல இருக்கிறது என்றால் அந்த இடத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இந்த ஹேர் பேக்கை வட்ட வடிவில் லேசாக தடவி மசாஜ் செய்யவும். பிறகு தலைக்கு குளித்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறைய இனி எந்த கஷ்டமும் பட வேண்டாம். உங்க வீட்ல இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும். கண் கருவளையத்தை காணாமல் ஆக்கி விடலாம்.

ஒரு மாதம் தொடர்ந்து இந்த குறிப்பை ஸ்கால்ப்பில் போட்டு வர ஒரே மாதத்தில் சின்ன சின்னதா பேபி ஹேர் அங்கங்கே வளர்ந்திருப்பதை உங்களால் பார்க்க முடியும். அதேபோல உங்களுக்கு ரொம்பவும் ட்ரையான முடி என்றால் இந்த ஹேர் பேக் கோடு தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து தலையில் தடவலாம். அப்படி இல்லை என்றால் உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் வைத்த பின்பு இந்த ஹேர் பேக்கை போட்டுக் கொள்ளுங்கள். எளிமையான இந்த அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -