கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறைய இனி எந்த கஷ்டமும் பட வேண்டாம். உங்க வீட்ல இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும். கண் கருவளையத்தை காணாமல் ஆக்கி விடலாம்.

eye
- Advertisement -

நம்முடைய முகத்தை பார்த்தவுடன் பளிச்சென்று தெரியக்கூடிய ஒரு விஷயம் கண்ணனுக்கு கீழே இருக்கும் கருவளையம். பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், நோயாளி தோற்றத்தை கொடுக்கக் கூடிய ஒரு பிரச்சனை தான் இந்த கண் கருவளையம். இது வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உங்களுக்கு கண் கருவளையம் வர எந்த காரணமாக இருந்தாலும் சரி, மன அழுத்தத்தை குறைத்து, இரவு நன்றாக தூங்கி, ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, பின் சொல்லக்கூடிய இந்த குறிப்பையும் பின்பற்றி வர கண் கருவளையம் படிப்படியாக குறைய தொடங்கி விடும். கருவளையம் உங்களுக்கு இருக்குதா பதிவை தொடர்ந்து படித்து குறிப்பை தெரிந்து கொள்ளுங்கள். தேவை என்பவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

கண் கருவளையம் மறைய அழகு குறிப்பு:
இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருட்கள் 3. பேரிச்சம்பழம் 2, பால் ஆடை, வெஜிடபிள் கிளசரின். கொஞ்சம் சாப்ட் ஆக இருக்கக்கூடிய பேரிச்சம் பழமாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். பசும்பாலின் பால் ஆடையாக இருந்தால் ரிசல்ட் உடனடியாக தெரியும். பால் காய்ச்சிய பிறகு மேலே ஆடை கட்டி வரும் அல்லவா, அதிலிருந்து இரண்டிலிருந்து மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் பாலும் சேர்ந்து இருந்தால் தவறு கிடையாது. அந்தப் பாலாடையில், கொட்டை நீக்கிய இரண்டு பேரிச்சம் பழங்களை போட்டு, 20 நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

பேரிச்சம்பழம் அந்த பாலில் ஊறிய பிறகு, இதை ஒரு சின்ன உரலில் போட்டு மசித்துக்கொண்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொண்டாலும் சரி, காரம் இல்லாத ஊரலில் போட்டு அரைக்கணும். மிக்ஸி ஜாரை நன்றாக சுத்தம் செய்துவிட்டு அரைக்கணும். இல்லையென்றால் இந்த பேக்கை அப்ளை செய்யும்போது கண் எரிச்சல் வந்து விடும். (பால் மற்றும் பால் ஆடையுடன் சேர்ந்து பேரிச்சம்பழம் மசிந்து அழகான ஒரு கிரீம் கிடைக்கும்.)

பாலாடை, பால், இந்த பேரிச்சம்பழம் மூன்றையும் நைசான பேஸ்ட் ஆக அரைத்து ஒரு ஸ்டீல் வடிகட்டியில் போட்டு கொஞ்சம் கஷ்டப்பட்டு ஃபில்டர் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் ஸ்மூத்தான பேஸ்ட் நமக்கு கிடைக்கும். அந்த பேஸ்டில் வெஜிடபிள் கிளசரின் 1/4 ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், பிரிட்ஜில் ஐந்து நாட்கள் கெட்டுப் போகாது.

- Advertisement -

இரவு தூங்க செல்வதற்கு முன்பு இதை கண்ணுக்கு கீழே உள்ள கருவளையத்தை சுற்றி பேக்காக போட்டு, காய்ந்த பிறகு அப்படியே தூங்க செல்லலாம். மறுநாள் காலை எழுந்து முகம் கழுவிக் கொள்ளலாம். இது உங்களுக்கு கொஞ்சம் டிஸ்டர்ப் ஆக இருக்குது. இரவு முழுவதும் இதை கண்ணில் வைத்துக் கொள்ள முடியாது என்பவர்கள், குளிக்க செல்வதற்கு முன்பு 1/2 மணி நேரத்திற்கு முன்பு இந்த பேக்கை கருவளையத்தின் மேல் தடவி அப்படியே விட்டு விடுங்கள். அரை மணி நேரம் கழித்து ஜென்டிலாக மசாஜ் செய்து குளித்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: கையோடு உதிர்ந்து விழும் உங்க முடியை இனி நீங்களே இழுத்தா கூட உதிராத அளவுக்கு ஸ்ட்ராங்கா மாற்ற இது தாங்க பெஸ்ட். நல்லா கருகருன்னு வளரவதோடு ஒரு முடி கூட உதிராது.

தொடர்ந்து இதை உங்களுடைய கண்ணை சுற்றி போடலாம். எந்த பக்க விளைவுகளும் வராது. கண் கருவளையம், கண்ணை சுற்றி இருக்கும் சுருக்கம், வீக்கம் எல்லாம் படிப்படியாக குறைய தொடங்கும். எளிமையான இந்த அழகு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -