முப்பதே நாட்களில் முட்டிக்கால் வரை முடி வளர முத்தான ஐடியா இதோ உங்களுக்காக.

think-thick-hair
- Advertisement -

எண்ணி 30 நாட்களில் உங்கள் முடி உதிர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அதேசமயம் முடி வளராத வழுக்கையான இடத்திலும் முடியை வளர வைக்க முடியும். அதற்கு சூப்பரான ஒரு ஐடியாவை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். தொடர்ந்து ஒரு மாதம் இந்த இரண்டு குறிப்புகளையும் பின்பற்றி வாருங்கள். நீண்ட நாள், நீண்ட கூந்தலை வளர்க்க வேண்டும் என்ற உங்களுக்கு இருக்கும் ஆசை நிச்சயம் நிறைவேறிவிடும். மிக மிக எளிமையான பக்க விளைவுகள் இல்லாத அந்த குறிப்பு என்ன என்று தெரிந்து கொள்வோமா. உங்கள் அழகை இன்னும் கொஞ்சம் அழகாக கூடிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

30 நாட்களில் முடி வளர குறிப்பு:
முதல் குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் இரண்டு பொருட்கள் ஆளி விதை, அரிசி. எந்த அரிசியை வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். அது நம்முடைய விருப்பம் தான். உங்கள் வீட்டில் இருக்கும் அரிசியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 2 டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் ஆளி விதை, 2 ஸ்பூன் அரிசி போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்து லேசாக ஜெல் பதத்திற்கு வரும். இந்த ஜெல் சூடாக இருக்கும் போதே ஒரு ஸ்டீல் வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.

- Advertisement -

இந்த தண்ணீர் கொஞ்சம் கொழகொழப்பாக தான் இருக்கும். வடிகட்டி வைத்திருக்கும் இந்த தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு விளக்கு எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் கெட்டுப்போகாது. வாரத்தில் மூன்று நாட்கள் தலையில் ஹேர் பேக்காக போட்டு 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து விட வேண்டும். மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளிக்கலாம்.

இந்த ஹேர் பேக்கை மயிர் கால்களில் படும்படி போடுங்கள். முடி இல்லாத வழுக்கையாக இருக்கும் இடங்களிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து தடவிக் கொள்ள வேண்டும். ஒரு மாதம் முழுவதும், வாரத்தில் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் என்ற கணக்கு வைத்து இந்த ஹேர் பேக்கை சீராக போட்டு வரவும்.

- Advertisement -

அடுத்து இதோடு சேர்த்து ஒரு தேங்காய் எண்ணெயையும் தயார் செய்து உங்கள் தலையில் தடவி வர வேண்டும். 100ml சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள். 2 டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகம், 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி அரைத்த இந்த இரண்டு பொருட்களையும் அதில் போட்டு பத்து நிமிடங்கள் சூடு செய்து அடுப்பை அணைத்துவிட்டு, இந்த எண்ணெய் நன்றாக ஆறியதும் வடிகட்டி எண்ணெயை மட்டும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த எண்ணெயை தலையில் தடவி வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: தலையில் வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டதா? இந்த பூவை இப்படி தேய்த்துப் பாருங்கள், வழுக்கை விழுந்த இடத்திலும் விரைவில் முடி முளைக்குமே! அடர்த்தியான முடிக்கு பெஸ்ட் டிப்ஸ்.

முதலாவதாக மேலே சொன்ன அந்த ஹேர் பேக், இரண்டாவதாக சொன்ன இந்த தேங்காய் எண்ணெய் இந்த இரண்டையும் ஒரு மாதம் தொடர்ந்து உங்கள் தலைமுடியில் அப்ளை செய்து வந்தாலே முடி வளர்ச்சியில் நல்ல வித்தியாசத்தை காண முடியும். இது முடிக்கு மேல் மட்டும் தான். ஆனால் உங்களுடைய உடம்புக்கு தேவையான ஊட்டச்சத்தை நீங்கள் தான் உள்ளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதோடு சேர்த்து நிச்சயமாக சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட்டு வந்தால் தான் முழு பலனை எதிர்பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ரெமிடி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -