தலையில் வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டதா? இந்த பூவை இப்படி தேய்த்துப் பாருங்கள், வழுக்கை விழுந்த இடத்திலும் விரைவில் முடி முளைக்குமே! அடர்த்தியான முடிக்கு பெஸ்ட் டிப்ஸ்.

mathulai-poo-valukkai
- Advertisement -

இன்று பெரும்பாலானோர் முடி உதிர்வதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால் நாளடைவில் தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விடுகிறது. வழுக்கை விழுந்த பிறகு தான் நாம் விழித்துக் கொள்ளவும் செய்வோம். இந்த மாதிரியான சமயத்தில் மீண்டும் அந்த இடத்தில் முடியை விரைவாக வளர செய்வது எப்படி? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

மெல்ல மெல்ல முடி கொஞ்சம் கொஞ்சமாக அனுதினமும் உதிரத் துவங்கி, கடைசியில் அந்த இடத்தில் மீண்டும் வேர் விட ஆரம்பிக்காமல் வழுக்கையாக மாறிவிடுகிறது. அந்த இடத்தில் முடி முளைப்பது நின்று விடுகிறது. இதனால் அதை வழுக்கை என்கிறோம். இப்படி நின்று போன இடத்திலிருந்து மீண்டும் முடி வளர செய்வது என்பது சற்று கடினமான விஷயம் தான் ஆனால் இந்த ஒரு பூவில் இருக்கக் கூடிய சாறு ரொம்பவே மகத்துவமானது. இது முடியின் வேர் கால்களில் இருக்கக் கூடிய பிரச்சனையை சரி செய்து மீண்டும் இழந்த முடியை நமக்கு மீட்டு தருகிறது.

- Advertisement -

அப்படியான ஒரு அற்புதமான பூ ‘மாதுளை பூ’ ஆகும். மாதுளை மரத்தில் இருந்து பெறக் கூடிய இந்த மாதுளை பூவை கசக்கினால் கிடைக்கக் கூடிய சாற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சாற்றுக்கு வழுக்கை மற்றும் சொட்டை தலையைக் கூட சரி செய்யக் கூடிய தன்மை உண்டு.

ரெண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த மாதுளை பூவை அரைத்து கிடைக்கக்கூடிய சாற்றை தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதற்கு ஓரிரு மாதுளை பூக்களை பறித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை அம்மியில் இட்டு அரைத்து சாறு பிழைந்தால் கிடைக்கக் கூடியதை எடுத்துக் கொள்ளுங்கள். இதை எங்கெல்லாம் முடி அதிகமாக உதிர்கிறதோ, அந்த இடங்களில் எல்லாம் தடவி விடலாம். குறிப்பாக முன் தலையில் இருந்து ஆரம்பித்து பின் தலை வரை செல்ல வேண்டும்.

- Advertisement -

முன்தலையில் தான் அதிகமானோருக்கு வழுக்கை விழ ஆரம்பிக்கும். முடி உதிர்ந்த அந்த இடத்தில் ஸ்கேல்ப் பகுதி தெரிய ஆரம்பிக்கும். பெண்களாக இருப்பின் அவர்களுக்கு வகிடு எடுக்கும் அந்த இடம் விரிய ஆரம்பிக்கும். இந்த இடத்தில் நீங்கள் நன்கு சாற்றை தடவி மசாஜ் செய்யுங்கள். ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பின்பு அப்படியே உலர விட்டு விடுங்கள். பின்பு ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் சாதாரணமாக எப்படி தலைக்கு குளிப்பீர்களோ, அதே போல குளிக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
பிக்மண்டேஷனை குறைக்க, முகத்தை உடனடியாக பொலிவாக மாற்ற இதுதான் சூப்பர் ஐடியா. இப்போதான் முகத்தில் சின்ன சின்ன கருப்பு புள்ளிகள் வருவது போல தெரிந்தாலும் உடனே இதை படிங்க.

மேலும் தலைமுடி பிரச்சனைகள் இருப்பவர்கள் ஷாம்புவை நேரடியாக பயன்படுத்தாமல் அதை தண்ணீரில் நன்கு கரைத்து பின்னர் அந்த தண்ணீரை பயன்படுத்துவது நல்லது. இதனால் ரசாயனத்தால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை தடுக்கலாம். ரெண்டு நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து இது போல மசாஜ் செய்து தலைக்கு குளித்து வந்தால் விரைவிலேயே வழுக்கை தலையில் முடி முளைக்க ஆரம்பிப்பதை நீங்கள் உணர முடியும். தொடர்ந்து அடர்த்தியாகவும் நன்கு செழிப்பாக வளரும்.

- Advertisement -