தெய்வங்கள் நம்மோடு, நம் வீட்டில் நிரந்தரமாக வாழ்வதற்கு இந்த ஒரு தூபம் போட்டாலே போதும்.

dhupam
- Advertisement -

நாம் வாழக்கூடிய வீட்டில் நம்மோடு சேர்ந்து தெய்வ சக்தியும் வாசம் செய்தால் தான் நம்முடைய வீடு கோவிலாக இருக்கும். இல்லையென்றால் வீட்டில் தீய சக்திகளின் ஆதிக்கம், நடமாட தொடங்கிவிடும். வீட்டில் தேவையில்லாத பணக்கஷ்டம், மனக்கஷ்டம், சண்டை சச்சரவுகள், வரத்தொடங்கும். வீட்டை தெய்வ கடாட்சம் நிறைந்த, லக்ஷ்மி கடாட்சம் நிறைந்ததாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய வீட்டில் எந்த பொருட்களை சேர்த்து தூபம் போடுவது என்பதை பற்றிய ஒரு சிறிய ஆன்மீக ரீதியான குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சில பேர் வீட்டில் நாம் உள்ளே நுழைந்த உடனேயே நமக்கு மன நிம்மதி இருக்கும். பார்ப்பதற்கு சிறிய வீடாக தான் இருக்கும். ஆனால் அந்த வீட்டிலேயே இன்னும் கொஞ்சம் நேரம் அமர்ந்து இருக்கலாம் என்று தோன்றும். அந்த வீட்டில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் தெய்வீக கலசத்துடன் இருக்கும். ஆனால் சில பேர் வீட்டுக்குள்ளே செல்லும் போது, வீடு பெரியதாக இருக்கும். அலங்காரப் பொருட்கள் நிறைந்திருக்கும். ஆனால் அந்த வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்கப் பிடிக்காது. உடனடியாக நம் வீட்டிற்கு வர வேண்டும் என்று தோன்றும். இப்படிப்பட்ட வீட்டில் நிச்சயமாக எதிர்மறை ஆற்றல் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்.

- Advertisement -

உங்களுடைய வீட்டை கோவிலாக மாற்ற வேண்டுமென்றால், உங்களுடைய வீடு முதலில் சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தம் நிறைந்த கெட்டவாடை எதுவும் உங்கள் வீட்டில் வீசக்கூடாது. எப்போதும் தெய்வீக மணம் கமழும் சாம்பிராணி தூபம் வாசனை, பூஜை அறையில் சந்தனம் குங்குமம் மஞ்சள் ஜவ்வாது கோரோசனை புனுகு போன்ற வாசனை தான் வீச வேண்டும். இதுதவிர வாசனையான பூக்களின் வாசம் வீச வேண்டும்.

இதோடு சேர்த்து நம் வீட்டில் தெய்வ சக்தி நிலையாக அமர லட்சுமிகடாட்சம் நிலையாக தங்கி இருக்க, ஒரு சாம்பிராணி தூபம் போடலாம். அதற்கு தேவையான நான்கு பொருட்கள். மகிழம் பூ பொடி, வெண் தாமரை பொடி, மரிக்கொழுந்து பொடி‌, மல்லிகை பூ பொடி இந்த எல்லா பூக்களையும் வாங்கி நிழலிலேயே காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது நாட்டு மருந்து கடைகளில் காய்ந்த பூக்களாக கிடைக்கும் அதை வாங்கிப் பொடி செய்து கொண்டாலும் சரி, இந்த நான்கு பூக்களும் கலந்த ஒரு பொடியை தயாராக ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எப்போதும்போல நெருப்பு மூட்டி அதில் சாம்பிராணி புகையை போட்டு கூடவே இந்த பொடியை கொஞ்சம் சேர்த்து தூபம் போட வேண்டும். இந்த புகையை உங்கள் வீடு முழுவதும் வாரத்தில் இரண்டு நாட்கள் காண்பித்து வர வீட்டில் தெய்வங்கள் விரும்பி தங்கும். வீட்டில் பண கஷ்டம் வராது. சண்டை சச்சரவுகள் வராது. மன நிம்மதியை கெடுக்கும் எந்த பிரச்சனைகளும் நடக்காது. ஏனென்றால் வீட்டில் தெய்வங்கள் நிரந்தரமாக இந்த வாசத்திற்கு வசியமாகி நல்லதை செய்யும்.

உங்களுடைய வீட்டிலும் ஒரு மூன்று வாரங்கள் தொடர்ந்து இந்த பொடியை கொண்டு சாம்பிராணி தூபம் போட்டு வாருங்கள். நிச்சயமாக நீங்கள் நம்ப முடியாத நிறைய நல்ல மாற்றங்கள் தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பரிகாரத்தை செய்வதன் மூலம் பலன் கிடைக்கும் என்று கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -