4 திசையிலிருந்தும் தெய்வங்கள் மன மகிழ்ச்சியோடு உங்கள் வீட்டிற்குள் நுழையும். இந்த 4 இலைகளை ஒன்றாக சேர்த்து பூஜை அறையில் வைத்தால்.

god-archanai
- Advertisement -

தெய்வ சக்தி வீட்டில் குடியிருந்தால் தான் சந்தோஷம் அந்த வீட்டில் நிரந்தரமாக தங்கும். நமக்கு வரக்கூடிய ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்க கூடிய சக்தி, நாம் நம்பும் இறை சக்தியிடம் தான் உள்ளது. நம் வீட்டில் தெய்வங்கள் நிரந்தரமாக மன விருப்பத்தோடு குடியேற வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக நாம் என்ன செய்யவேண்டும். நம் வீட்டை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தரித்திரத்தை விரட்டியடிக்க, பூஜை அறையில் வைக்க வேண்டிய முடிச்சு எந்த முடிச்சு. தெய்வங்களுக்கு மிகவும் பிடித்தமான அந்த நான்கு இலைகள் என்னென்ன. நீங்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

vetrilai-kodi

தெய்வங்கள் வாசம் செய்யக்கூடிய, இயற்கையாகக் கிடைக்கக்கூடிய சில இலைகளை வைத்து தான் இந்த முடிச்சை தயார் செய்யப் போகின்றோம். ஒரு சதுர வடிவில் இருக்கும் வெள்ளை துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தான் இந்த பொருட்களை எல்லாம் வைத்து சிறிய முடிச்சு போல கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெற்றிலை 1, வில்வ இலை 2, வேப்ப இலை – 1 கொத்து, மல்லிகை இலை – 2(மல்லிப்பூ செடியில் இருந்து இரண்டு இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்), அரகஜா சிறிதளவு. முதலில் வெற்றிலையை எடுத்து அதன் மேலே அரகஜா லேசாக தடவிக் கொள்ள வேண்டும். அரகஜா தடவிய இந்த வெற்றிலையை, தயாராக எடுத்து வைத்திருக்கும் வெள்ளைத் துணியின் மேலே வைத்து விடுங்கள். அதன் பின்பு இந்த வெற்றிக்கு மேல் வில்வ இலை, வேப்ப இலை, மல்லிகை இலை இலைகளை வைத்து அந்த வெள்ளைத் துணியை முடிச்சு போல ஒரு நூல் போட்டு கட்டி அப்படியே பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

vilvam1

இந்த முடிச்சிலிருந்து வெளிவரக்கூடிய வாசம் உங்கள் பூஜை அறை முழுவதும் நிரம்பி இருக்கும். முடிச்சு போட பயன்படுத்தும் வெள்ளை நிறத் துணியை காட்டன் துணியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் உள்ளே இருக்கக்கூடிய பொருட்களின் மனம் வெளியே வீசும்.

- Advertisement -

இந்த வாசம் உங்கள் வீட்டில் இறை சக்தியை ஈர்த்து கொடுக்கும். இறைசக்தி விரும்பி வந்து பூஜை அறையில் அமர்வதற்காக அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இந்த பொருட்களை பூஜையில் பெரிய அளவில் பயன்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த முடிச்சை பூஜை அறையில் மட்டும் தான் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.

malli1

உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஒரு முடிச்சை தயார் செய்து ஏதாவது ஒரு அலமாரியிலும் வைத்துக்கொள்ளலாம். தவறு எதுவும் கிடையாது. இந்த முடிச்சு இருக்கக்கூடிய இடம் நேர்மறை ஆற்றல் நிரம்பிய இடமாக இருக்கும். இந்த முடிச்சு வெளிப்படுத்தக்கூடிய நேர்மறை ஆற்றல். நம் வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டங்களை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.

poojai1

பூஜையறையில் தயார் செய்து வைத்த இந்த முடிச்சுக்கு என்று தனியாக பூஜை புனஸ்காரங்கள் எதுவும் செய்ய தேவை கிடையாது. மாதத்திற்கு ஒரு முறை இந்த முடிச்சின் உள்ளே இருக்கக்கூடிய பொருட்களை மாற்றி வைத்தால் கூட போதும். வீட்டில் இருக்கக் கூடிய பீடை தரித்திரம் பணக்கஷ்டம் மனக்கஷ்டம் நீங்க, இறை சக்தியை உங்கள் வீட்டிற்கு ஈர்த்து கொடுக்க இந்த முடிச்சு நிச்சயமாக துணை புரியும். நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -