48 நாட்கள் இப்படி தீபம் ஏற்றினால் தீராத மனக் குழப்பத்திற்கும் தீர்வு கிடைக்கும். மன சஞ்சலங்கள் நீங்கும். மனது அமைதி பெறும்.

deepam3
- Advertisement -

எவ்வளவு பெரிய பெரிய பரிகாரங்களை செய்தும் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தீராத கஷ்டத்திற்கும் ஆறாத துயரத்திற்கும், சுலபமாக தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு, தீபவழிபாடு. குறிப்பாக ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுவதற்கு ஈடு இணை இந்த உலகத்தில் வேறு எதுவுமே கிடையாது. தினமும் தொடர்ந்து உங்களுடைய வீட்டிலேயே தீபம் ஏற்றி உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் வைத்தாலும் சரி, முடிந்தால் கோவிலுக்கு சென்று இறைவனுக்கு தீபம் ஏற்றி உங்களுடைய கோரிக்கைகளை வைத்தாலும் சரி, அந்த கோரிக்கைகள் நிச்சயம் கூடிய சீக்கிரத்திலேயே நிறைவேறும் என்பதில் ஒரு துளிகூட சந்தேகமே கிடையாது.

temple

நம்முடைய வாழ்வில் இருக்கும் இருளை நீக்கக்கூடிய இந்த தீப வழிபாட்டிலேயே மேலும் சிறப்பான  வழிபாட்டினை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீடு மற்றும் கோவில், இந்த 2 இடங்கள் அல்லாமல் வேறு எந்த இடங்களில் எல்லாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம், என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

- Advertisement -

கோசாலை, கோவிலுக்கு இணையானது இந்தக் கோசாலை என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பசு மாடுகளை கட்டி வைத்திருக்கும் மாட்டுத் தொழுவம், எந்த இடத்தில் இருந்தாலும் சரி, அந்த கோசாலையில் தொடர்ந்து 48 நாட்கள் தீபத்தை ஏற்றி வைத்து இறைவழிபாடு செய்தீர்கள் என்றால் உங்களுடைய மன கஷ்டம், மன சஞ்சலம் தீரும். உங்களை பிடித்த தரித்திரம் உடனே நீங்கும். உங்களுடைய பிரச்சனைகளுக்கு 48 நாட்களில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவதாக மகான்களின் சமாதிகளில் தீப வழிபாடு செய்வது நல்ல பலனைக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மகான்களின் வரிசையில் நிச்சயமாக சித்தர்களும் அடங்குவார்கள். சித்தர்கள், மகான்கள் சமாதிக்கு சென்று அமைதியாக அமர்ந்து 10 நிமிடங்கள் தியானம் செய்துவிட்டு தீபமேற்றி மனதை அமைதிப்படுத்தி கொண்டாலும் உங்களுடைய வாழ்க்கையில் அது சிறந்த பலன்களை கொடுக்கும். பாவங்கள் நீங்கும். கோடான கோடி புண்ணியங்கள் சேரும்.

- Advertisement -

அடுத்தபடியாக நிறைய பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை, வீட்டில் இருக்கும் ஆண்கள் பொறுப்போடு இல்லாமல் இருப்பது. நிறைய வீடுகளில் இந்த பிரச்சனை இருந்து வருகிறது. வீட்டில் இருக்கும் ஆண்கள் சரி இல்லை. பொறுப்போடு இல்லை. அவர்கள் தவறான வழியில் செல்கிறார்கள் என்றால், என்ன செய்வது. எந்த இடத்தில் எப்படி தீபம் ஏற்றுவது.

erukan-ilai

எருக்கன் செடி எந்த இடத்தில் இருந்தாலும் சரி, அதாவது சுடுகாட்டை தவிர்த்துவிடுங்கள். சுடுகாட்டை தவிர்த்துவிட்டு உங்கள் வீட்டின் அருகில் எந்த இடத்தில் எருக்கேன் செடி இருந்தாலும் அந்த எருக்கஞ்செடிக்கு அருகில் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, ஒரே ஒரு மண் அகல் தீபத்தை தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றி வர வேண்டும்.

agal-vilakku

இப்படி செய்தால் வாழ்க்கையில் தவறான பாதையில் சென்று, பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் ஆண்கள் கூட, கூடிய சீக்கிரத்திலேயே அவர்களிடத்தில் இருக்கும் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் விட்டு விட்டு, தங்களுடைய வாழ்க்கையை பொறுப்போடு வாழத் தொடங்கி விடுவார்கள். குடும்பத்தையும் அக்கறையோடு பார்த்துக் கொள்வார்கள். முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கையோடு மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றுபவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வது கொள்வோம்.

- Advertisement -